(Reading time: 18 - 36 minutes)

ப்போ என்ன ஆச்சு? சரயூ பஸ் ஸ்டாப் தானே வரலை.  ஆனால் காலேஜுக்கு வருவாளே”

“அது எனக்கே தெரியும்.  ஆனால் அவளுக்கு ஏதாவது…” என்று மேலே பேசாமல் நிறுத்தினான்.

“பைத்தியம் மாதிரி பேசாதே ஜெய்.  சரயூ நல்லாதான் இருப்பா.  காலேஜுக்கு போய் அவளை பார்த்திட்டு எனக்கு ஃபோன் பண்ணு.  பத்திரமா போ ஜெய்”

“சரி மைதி! நான் அவளைப் பார்த்திட்டு உனக்கு சொல்றேன்” என்று இணைப்பை துண்டித்தான்.

ஜெய்யின் காதல் எத்தனை ஆழமானது என்று தெரிந்த மைத்ரீக்கு அவனுக்கு ஒரு புது உறவு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் அதே சமயத்தில் ஒரு அச்சமும் எழுந்தது.  சரயூ ஜெய்யின் காதலை ஏற்பாளா? இல்லையென்றால் இவனை எப்படி சமாதானம் செய்ய முடியும் என்று கலங்கி போனாள்.

மைத்ரீயின் யோசனையின்படி சரயூவை காலேஜில் பார்ப்பதென்ற முடிவோடு வீட்டிற்கு சென்று தன் காரில் விரைந்தான்.  ‘ச்சே! அவளோட மொபைல் நம்பர் வாங்கமல் போனது எவ்வளவு பெரிய தப்பா போச்சு’ என்று தன்னை தானே கடிந்தவாறு போகும் வழி எங்கும் சரயூ நலமுடன் இருக்க வேண்டும் என்று சொல்லியபடி காலேஜை அடைந்தான்.

அவசரமாக காரை பார்க் செய்து விட்டு உள்ளே சென்றவனைப் பார்த்து சிறு புன்னகையுடன் கை அசைத்தாள் சரயூ.  ஜெய்யிற்கு இருந்த கவலை சூரியக்கதிர் அணைத்தப் பனியாக விளகியது.  அவள் சுகமாக தான் இருக்கிறாள் என்ற நிம்மதி நெஞ்சில் பரவிய மறுகணமே கண்ட காட்சி அவனுக்கு அதிர்ச்சியூட்டியது.

Episode 02

Episode 04

முத்து ஒளிரும்…

{kunena_discuss:1038}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.