(Reading time: 22 - 44 minutes)

" ப்ப பேபி முக்கியம். அம்மா முக்கியம் இல்ல.. அப்படித்தானே? " என்று தன் ஒரு கையை இடுப்பில் வைத்து மறுகையை தன் மேடிட்ட வயிற்றில் வைத்து கொஞ்சம் பொய் கோபம் காட்டி அவள் கேட்க,

" நான் அப்படிலாம் சொல்வேனா பேபி. நீ ரொம்ப நேரம் நிக்காத, உட்காரு. சீக்கிரம் தூங்கு. டேப்லெட்ஸ்லாம் போட்டாச்சுல "  என்று டக்குனு டாப்பிக் மாற்றி சரணடைந்தான் கண்ணன்.

" ம்‌ம்‌ம்.... "

" அப்ப வா தூங்கு "

" அடடா.. எனக்கு தூக்கம் வரலங்க " 

" ஏன்டா கால் வலிக்குதா? நான் வேணும்னா புடிச்சு விடவா? "

" அதுலாம் இல்ல "

" அப்பறம் என்ன? "

" ஒரு வாக் போலாமா? "

" இந்த டைம்லய?????? "

" ம்‌ம்‌ம்..எனக்கு உங்க கூட போகணும், பிளீஸ்.. "

" இட்ஸ் கெட்டிங் டூ லேட்டா. முக்கியமா வெளில பனி. நீ ஒழுங்கா வந்து தூங்கு "

" எனக்கு தூக்கமே வரலங்க. போலாம் பிளீஸ், ரொம்ப போர் அடிக்குதுப்பா "

" கண்ண மூடுனா தானா வரும். வா இன்னைக்கு ஒன் டே அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. நாளைக்கு ஈவினிங் மகி வந்துருவா "

" ம்ஹூம் முடியாது "

" சொன்னா கேக்கணும் வா. நாளைக்கு மார்னிங் அம்மா அப்பா கூட வாக் போ. நான் ஈவினிங் சீக்கிரம் வந்து உன்ன வாக் கூட்டிட்டு போறேன். இப்ப தூங்க வா "

" ம்‌ம்‌ம்.. போங்க  " என்று முணுமுணுத்துக் கொண்டே வந்தமர்ந்து அவன் தோள் சாய்ந்துக் கொண்டாள் ஷண்மதி.

" எதாதும் அன்ஈசியா இருக்கா ஷ்ணு ? "

" இல்ல "

" இதுக்கு தான் சொன்னேன் இன்னும் டூ இயர்ஸ் போகட்டும் அப்பறம் பேபி பத்தி திங் பண்ணலாம்னு. ரொம்ப கஷ்டமா இருக்காடா? "

" முட்ட கண்ணா, இப்ப எதுக்கு இந்த சீன். இது நம்ம பாப்பா. நம்ம பாப்பாவால எனக்கு கஷ்டம் இல்ல.. சந்தோஷம் மட்டும் தான் "

" எனக்கு தெரியும் "

" இப்பவே அப்பா பிள்ளயாகிட்டாங்க தெரியுமா! உங்க வாய்ஸ் கேட்ட மட்டும் தான் அம்மாக்கு உதை எல்லாம் "

" ஹா ஹா,  ஐ லவ் யு டி பொண்டாட்டி "

" மீ டூ டா முட்ட கண்ணா "

மேலும் சிறிது நேரம் கதை பேசி அவன் மேல் சாய்ந்தே அவள் உறங்கிவிட, தன் கரு சுமப்பவளை மடி சுமந்து அவனும் உறங்கிவிட்டான். 

றுநாள் மாலை திருச்சி செல்லும் முடிவுடன் மாமா ராஜேந்திரனை மொபைலில் தொடர்புக் கொண்டால் அது 'கஸ்டமர் பிசி' என்று சொல்ல, தான் திருச்சி செல்லும் விஷயத்தை கண்ணனுக்கு வாட்ஸ்அப் பண்ணிவிட்டு ‌ஏழு மணி பஸ்சிற்கு தோழிகளுடன் சேர்ந்து தனது திங்க்ஸ்ஸை எல்லாம் அவசர அவசரமாக பேக் பண்ணிக்கொண்டு இருந்தாள் மகதி.

" வெற்றி வெற்றி..... " என்று கத்திக்கொண்டு அந்த ஹாஸ்டல் அறைக்குள் பிரவேசித்தாள் செம்பு என்ற செண்பக துர்காதேவி.

" அப்படி என்ன சாதிச்சேனு இவ்ளோ அலப்பற பண்ணிட்டு வர? ஃபர்ஸ்ட்  உன் அழுக்கு மூட்டைய எடுத்து வச்சுட்டியா? நமக்கு ஏழு மணிக்கு பஸ். அவசரம் புரியாம மொக்க பண்ற "  என்று கடிந்து கொள்ள ஆரம்பித்தாள் இருதயாள்.

" என்ன பொன்னு, இப்படி பொசுக்குனு மொக்கைனு சொல்லிட்ட! நான் பண்ணிட்டு வந்த  காரியத்த பார்த்தேனா அப்படியே ஆடி போய்ருவ..அசந்து போய்ருவ.. "

" டைம் இப்பவே சிக்ஸ் ஆச்சுடி. நீ சீக்கிரம் கிளம்பு. உன் சாதனையெல்லாம் அப்பறம் கேட்டுக்குறோம் " இது மகதி.

" முடியாது நான் இப்பவே சொல்லணும். சொல்லியே ஆகணும். ரைட் நவ்!! " என்று விடாபிடியாக இருந்தாள் நம்ம செம்பு.

" அய்யோ முருகா, என்னை ஏன் இந்த கழுசடைகளோடு கோர்த்து விட்ட? " என்று இருதயா புலம்ப ஆரம்பிக்க, " இப்ப என்னடி? உன் சாதனைய கேக்க ஒரு ஆள் வேணும், அவ்ளோ தானே! அதை நான் கேட்டு தொலைக்கிறேன். நீ வேலைய பாரு பொன்னு " என்று செம்பை இழுத்துக்கொண்டு அவள் பக்கத்து சேர்ரில் அமர,

" அவ கிடக்குறா காஞ்சனா, நீ வாடி என் தங்கம். நான் உன்ட்ட சொல்றேன். பட் அப்பறம் அவ பங்கு கிங்குனு எதாதும் போங்கு பண்ண வரட்டும், அப்பறம் இருக்கு அவளுக்கு " என்று மகதியின் தாடையை பற்றி செல்லம் கொஞ்ச ஆரம்பித்தாள் செம்பு.

" மேட்டர் மட்டும் சப்பையா இருக்கட்டும், இப்ப உன் மண்டைய உடைக்க போறேன் பாரு. சீக்கிரம் சொல்லும், சொல்லி தொலையும் "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.