அவன் மொபைலில் எதுவோ பேசிக் கொண்டிருந்தவன் இவளைப் பார்க்கவும் பேச்சை முடித்துக் கொண்டு எழுந்தவன்……“என்னாச்சு ரியு…..?” என ஆரம்பித்துவிட்டு….
“சரி நான் கேட்டேனே….அந்த செயினை கொடு…. என் ஃப்ரெண்ட்ட பேசிட்டேன்….. அதை கொண்டு கொடுக்கனும் ….” என தொடர்ந்தான்…..
கழுத்தில் போட்டதை கழற்றவே கூடாதென்ற சென்டிமென்ட்டெல்லாம் ரியாவுக்கு கிடையாதுதான்….அது மேரேஜாகிட்டதுன்றதுக்கான ஒரு அடையாளம்தான் தவிர…அதுல மாசியோட லைஃபோ இல்ல எங்க மேரேஜொ இருக்குதுன்னோ இல்ல ரியாம்மா…. என பூர்விக்கா சொல்வதுதான் இவளுக்கும் சரியாக படும்….
அக்காவுக்கு கழுத்தில் தொடர்ந்து எதைப் போட்டிறுந்தாலும் ஒரு வித ஸ்கின் அலர்ஜி வரும்….. அதனால் வீட்டிலிருக்கும் நேரம் கழற்றி வைத்துவிடுவாள்…… இத்தனைக்கும் பூர்விக்காவும் அவ ஹஸ்பண்டும் அப்படி ஒரு அன்யோன்யமான தம்பதி…. அதைப் பார்த்து வளர்ந்தவள்தான்….
அதான் முதல்ல ஈசியா கழட்டி தரேன்னு அவ சொன்னதும்…… ஆனா இப்ப லாஜிக்கே இல்லாம மனசு முரண்டு பிடிக்குது….
மனசுக்குள் வளர்ந்து வந்து கொண்டிருக்கும் விவனுக்கு எதுவும் ஆகிடுமோன்ற அந்த பயம் காரணம்….
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
இவள் முகத்தையே பார்த்திருந்தான் அல்லவா அவன் என்ன புரிந்து கொண்டானோ….அவன் முகத்தில் கூடுதலாய் ஒரு இதமும் கனிவும் இடம் பிடிக்க….
இவளோ இப்போது அவசரமாய்….. “ஸ்ட்ராம்ல எங்கயும் வெளிய போக கூடாதே….” என ஒரு காரணத்தை கண்டுபிடித்தாள்…
அது முக்கிய விஷயமும் கூட…..அவன் கிளம்பி போய்ட்டா…..இவ இங்க எப்டி நிம்மதியா இருக்கவாம்….?
சொல்லியபின் தான் புரிகிறது இதுவும் கூட அவனுக்கு எப்படித் தோன்றுமாம்……? டேய் நான் உன்ன லவ் பண்ணலாம் செய்யலை…..ஜஸ்ட் நீ செத்துறக் கூடாதுன்ற அக்கற மட்டும் தான் என கத்த வேண்டும் போல் இருக்கிறது இவளுக்கு…..
அவனா வாய திறந்து எதாவது கேட்டா கூட சொல்லிடலாமே…..
கல்லுளி மங்கன் கேள்வியே கேட்காம கொல்றான்….
விவனோ முகத்திலிருந்த கனிவு இன்னும் கூட….. “அரவ்ண்ட் 11 க்குத்தான் காத்து பலமா ஆரம்பிக்கும் 3 வரைக்கும் அப்டி இருக்கும்னு சொல்லி இருக்காங்க…. இது இங்க பக்கம்….ஹால்பனவர்ல வந்துடுவேன்….” என இவள் பயத்தை இன்னும் பந்தாடினான்….
அவசர அவசரமாக இதுக்கு பதில் யோசித்த ரியா….. “ எனக்கு …எனக்கு அந்த உங்க ஃப்ரெண்ட பார்த்து நேர்ல நானும் கேட்கனும்…..என்ன விஷயம்….ஏன் இப்டின்னு….?” என்றுவிட்டு நிம்மதி மூச்சுவிட்டாள்…. ஹப்பா அவன் ஒத்துக்கிற மாதிரி ஒரு காரணம் கண்டு பிடிச்சாச்சு…
இவளை ஒரு கணம் பார்த்த விவன்…. “என் ஃப்ரெண்ட் போலீஸ்… “ என ஏதோ அதுதான் இவளுக்கு தேவையான இன்ஃபோ போல் சொல்லிவிட்டு…சரி கிளம்பு …” என ஒத்துக் கொண்டான்.
செயினை கழற்ற அவள் தயங்குவதன் காரணம் புரிந்தாலும், எதுக்கு அங்கு வர பிடிவாதம் செய்கிறாள் என அவனுக்கு புரியவில்லை…. அங்க வந்தாலும் செயினை கழற்ற தானே வேண்டி இருக்கும் என்பது அவனுக்கு…
ரியாவுக்கோ முதல்ல அவன தனியா அனுப்ப கூடாது…..அதுக்கு கூட போய்டலாம்…..அங்க போய் இந்த செயின் விஷயத்தை எப்டியாவது ஹேண்டில் செய்யலாம்……யார் கண்டா அங்க போனதும் இவளுக்கு இப்டி வர்ற பயம் கூட விட்டுபோய்டலாம்….என ப்ளான்……
அடுத்த 20 வது நிமிடம் தம்பதி சகிதமா விவனும் ரியாவும் அந்த போலீஸ் ஃப்ரெண்ட் ஆதிரன் வீட்டு போர்டிகோவில் காரில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தனர்….
விவன் ஃப்ரெண்ட் என்றதும் இவள் எதோ வயது குறைந்த ஒருவரை எதிர்பார்க்க…… வந்து வரவேற்ற அந்த ஆதிரனும் அவர் மனைவியும் பின் நாப்பதுகளில் இருந்தனர்…..
ஆதிரன் சற்றாய் கணத்த சரீரமும் முறுக்கு மீசையும் ஆறே கால் அடியுமாயும் இருக்க….. அவர் மனைவியோ ஐந்தே கால் அடியில் அவர் முன் குட்டையாய் தெரிந்தாலும் கணத்த சரீரத்தில் கணவர் அளவிலேயே இருந்தார் இவரும்….
“வாம்மா புதுப் பொண்னு” என இவள் கைகளைப் பற்றி வரவேற்ற அந்த மிசர்ஸ் ஆதிரன்…. செய்த எல்லா உபசரிப்புகளும் முடிய…அடுத்த அந்த வீட்டின் முன்பக்கம் இருந்த ஒரு சிட் அவுட் போன்ற இடத்தில் விவனும் ரியாவும் ஆதிரனுமாய் மட்டுமாய் அமர்ந்து பேச துவங்கினர்…
பேசியது எல்லாமே விவனும் அந்த போலீஸ்கார அங்கிளும்தான்….. ரியா ஜஸ்ட் வாட்சிங்…..
கனவைப் பற்றியெல்லாம் எதையும் சொல்லி குழப்பாமல்….. இந்த செயின் இன்சிடென்டை மட்டுமாய் சொல்லி வைத்தான் விவன்….
வீட்டுக்குள்ள வந்து யாரும் இப்டி செட் அப் செய்யனும்னா என்ன மோடிவ் இருக்கும்…? இப்டி சுற்றியது அவர்கள் பேச்சு வார்த்தை…
இப்படி செய்ய முடியுமான்னு லேப் சொல்லும் என இருவருமே நம்பினார்கள் போலும்…. கடைசியில் இப்போது அவரும்….”சரி செயினை லேபுக்கு அனுப்புவோம்….” என இவள் செயினை கழற்றும் டாபிக்கிற்கு வர…