அவர்கள் இருவரும் அந்த அறையை விட்டு வெளியே வந்து சில அடிகள் எடுத்து வைத்திருந்த போது சந்தோஷ் அவர்களின் எதிரே வந்தான்...
“ஹலோ உதய் சார்... ஹலோ நாகலட்சுமி மேம்...”
ஏற்கனவே கடுப்பில் இருந்த உதய்க்கு அவனின் ஹலோவை கேட்டு எரிச்சலாக தான் இருந்தது. எனவே கண்டுக்கொள்ளாமல் நின்றான்....
“சந்தோஷ், நல்ல டைம்ல வந்தீங்க, நாங்க லஞ்ச்க்கு கிளம்பிட்டு இருக்கோம்...” என்றாள் நாகு.
“ஓ... சாரி.... தப்பான நேரத்தில் வந்துட்டேன்னு தெரியுது...”
“இதுக்கு தான் கால் செய்துட்டு செய்துட்டு வாங்கனு நான் சொல்றது.... சரி பரவாயில்லை, நீங்களும் எங்களோட லஞ்ச்க்கு வாங்களேன்....”
“இல்லை...” என்ற சந்தோஷ் உதயை ஆராய்வது போல பார்த்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...”
உதய் தன்னை பார்த்து கோபப் படாமல் இருந்ததை வைத்து குருட்டாம் போக்கில் அவன் வீசி எரித்த கல் தான்...
உதயின் முகத்தை பார்த்தால் சரியான இலக்கை தாக்கி விட்டதாக தான் தோன்றியது...
மனதில் எழுந்த சந்தோஷத்தை மறைத்தவன், நல்லவனை போல பேசி வஞ்சகமாக உதயின் கோபத்தை மெல்ல ஏற்றினான்...