(Reading time: 16 - 32 minutes)

ரு மாதத்திற்குப் பிறகு,

அர்னவின் மனதில் ஜானவியின் ஆதிக்கம் அதிகமாகிக் கொண்டே போக, அவனால் அந்த ஆதிக்கத்தை எதிர்த்து போராட முடியவில்லை கொஞ்சமும்…

“ஏன் சகி?.. இப்படி பண்ணுற?.. வலிக்குதுடி….”

வாய்விட்டே அவன் சொல்ல, அவனின் செல்போன் சிணுங்கியது சட்டென…

யாரென அவன் எடுத்து திரையைப் பார்க்க, அதில் மின்னியது அவனின் நினைவுக்குச் சொந்தக்காரியின் பெயர்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

புன்னகையுடன் எடுத்து காதுக்கு கொடுத்தவன்,

“ஹலோ…” என சொல்ல,

மறுமுனையில், அவளும், “ஹலோ…” என்றாள்…

“எப்படி இருக்கீங்க கார்த்தி?...”

“ம்ம்… குட்… நீ….”

தயங்காமல் பொய் சொன்னான் அவன் நன்றாக இருக்கிறேன் என…

ஆம்…. அவளின் திருமண தகவல் கேட்ட நொடியிலிருந்து அவன் நடைபிணமாய்த்தானே அலைகிறான்… பின்னே எங்கே அவன் நலமுடன் இருப்பான்??…

“அக்கா எப்படி இருக்குறாங்க கார்த்தி… பேசினீங்களா?...”

“இப்போ நல்லா இருக்குறாங்க… அவர் கூட போன் பண்ணி சாரி கேட்டார் எங்கிட்ட…”

“யாரு மாமாவா?... நிஜமாவா?... எப்போ?...”

“இப்போதான் கொஞ்ச நேரம் முன்னாடி…”

“ஓ… சூப்பர்… பரவாயில்லை மாமா மாறிட்டே வரார் போல…”

“ஹ்ம்ம்… நானும் அப்படித்தான் நினைக்குறேன்…”

“சந்தோஷமா இருக்கு கார்த்தி… இனி அக்கா லைஃப் நல்லா இருக்கும்… ஒரு வேண்டுதல் நிறைவேறப்போகுது…”

“ஹ்ம்ம்… சந்தோஷம் தான்...”

“ஏன் லூசு ஒரு மாதிரி பேசுறீங்க?... என்னாச்சு?...”

“அதெல்லாம் எதுவும் இல்ல… சரி… நான் கேட்ட கேள்விக்கு நீ பதிலே சொல்லைலையே?...”

“என்ன கேள்வி?... எப்போ கேட்டீங்க?..”

“நீ எப்படி இருக்குறன்னு நீ போன் பண்ணதும் கேட்டேன்…”

சட்டென அவன் கூற, அவள் அப்படியே ஊமையானாள் எதுவுமே பேசாது…

“நான் எப்படி இருக்குறேன்னு நிஜமாவே உங்களுக்கு தெரியாதா கார்த்தி….” அவளின் உள்ளம் பதற,

“சொல்லுடி… நல்லா இருக்குறேன்னு பொய்யாவது சொல்லுடி… அந்த வார்த்தையாவது எனக்கு மருந்தாகட்டும்… சொல்லுடி என் சகி….” என இங்கே அவன் உள்ளமும் கூப்பாடு போட்டது…

“வீட்டுல கல்யாணம் பண்ண முடிவெடுத்துட்டாங்கன்னு எப்படி நா……..”

அதற்கும் மேல் நினைக்கக் கூட முடியாது அவள் தன் உணர்வுகளை அடக்க போராட,

இங்கே அவனுக்கோ தொண்டை அடைத்தது…

இருவருமே அந்த விஷயத்தை எப்படி ஆரம்பிக்க என்று தெரியாது, முடியாது, திணறிக்கொண்டிருக்க,

ஜானவியின் அம்மா அவளை அழைத்தார்கள் அந்த நேரம்…

அவர்களின் சத்தம் செல்போனில் அவனுக்கு கேட்க, “அம்மா கூப்பிடுறாங்களா?...” என்றான்…

“ஆமா…”

“சரி… பார்த்துக்கோ… வச்சிடுறேன்… பை…”

“ம்ம்….”

அவளின் ம்ம் அவனது செவிமடலை வருட, அதற்கும் மேல் தாமதிக்காது அவன் போனை கட் செய்ய, இங்கே அவளோ கண் மூடி அமர்ந்து விட்டாள் சிலையாக…

தொடரும்

Episode # 30

Episode # 32

{kunena_discuss:995}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.