நான்…….
ம்ம்ம்…… ஏதோ அவளிடம் கடன் வசூலிப்பவன் போல வெகு தீவிரமாய் பதிலை யாசித்துக் கொண்டிருந்தான் அவன் . அவள் முகத்தைப் பார்க்க முடியாத தவிப்பும் அவனுள் கூடியது.
நான் ………..யோசிச்சு சொல்றேனே……..என்றவளின் பதில் கேட்டு, அவன் சற்றே தன் கரத்தை தளரவிட அங்கிருந்து ஓடியே சென்று விட்டாள் அவள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்..
மிகப் பெரிய பாரத்தை இற்க்கி வைத்தவன் போல மனம் இலகுவாகி விட அமைதியாக கடற்கரையில் அமர்ந்தான் அவன். அனிக்காவுடனான ஒவ்வொரு காட்சியும் அவன் கண்முன் நிழலாடின. ஒவ்வொரு முறையும் அவன் முகத்தில் அத்தருணம் குறித்த மகிழ்ச்சி வந்து வந்துச் சென்றுக் கொண்டிருந்தது.
நேரம் கடந்திருந்தது. பக்கத்தில் யாரோ வந்து அமர யாரென்று பார்க்க ஜீவன் கண்சிமிட்டிச் சிரித்தான்.
என்ன அண்ணா சொல்லிட்ட போல…………….
வெட்கமாய் ரூபன் சிரிக்க,
அப்பப்பா என்ன பிரகாசம்...என்ன பிரகாசம்... 1000 வாட்ஸ் பிரைட்னெஸ் உன் முகத்தில இருக்கு என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தான்.
ஜீவன் நான் பார்த்துக் கிட்டு தான் இருந்தேன் என்றதும் ரூபன் திடுக்கிட்டான். எதுக்குண்ணா பயப்படுற? அந்த நேரம் இங்க வேற யாருமே இல்ல எனவும் அமைதியானான்.
என்னதான் மனதளவில் அவனுக்கு அவள் நெருக்கமானாலும் கூட தான் அவளைத் தொட்டு இடுப்பை அணைத்துப் பேசியதை யாராவது கவனித்திருந்தால் ஒரு தவறும் செய்யாத அவனவளான அனிக்காவிற்கு தானே அவமானம் என்று விதிர்த்தான்.
என்னச் சொன்னா? என்ற ஜீவனின் கேள்வியில் சிந்தைக் கலைந்தான்.
அவ யோசிச்சு சொல்வாளாம் என்றான் கண்களில் காதல் மின்ன…
யோசிச்சு சொல்றேன்னு சொன்னதுக்கா இவ்ளோ ப்ரைட்னெஸ்.அப்ப சரின்னு சொல்லிருந்தா அவ்ளோதான் என சற்று நேரம் அவனைக் கிண்டலடித்தான்.
வா ப்ரேக் ஃபஸ்ட் டைமாச்சு. எல்லாரும் சாப்பிட்டுட்டு கடலுக்கு குளிக்கவும் போக போறாங்க நீ என்னன்னா மணிக் கணக்கா இங்க உட்கார்ந்திருக்க என்று அவனைக் கடிந்து அழைத்துச் சென்றான்.
அங்கு கூட்ட கூட்டமாய் காலை உணவோடு அரட்டை நடந்துக் கொண்டிருந்தது. பிக்னிக் வ்ந்தது மொத்தம் 3 பஸ்களாக இருக்க அனைத்து ஏற்பாடுகளும் மிகுந்த ஒழுங்கு முறையோடு நடந்துக் கொண்டிருந்தது.
ரூபன் அனிக்காவை தேடிக் கொண்டிருந்தான். ஆனால், அவனால் அவளைக் காண முடியவில்லை. அதோ அங்கே யார்? இவனைக் கண்டவுடன் தோழியின் பின்னால் ஒளிந்துக் கொள்கின்ற அவளைப் பார்த்தான்.
புதுவித பரவசமாய் இருந்தது. டீனேஜ் பையன் போல வெகு உற்சாகமாக உணர்ந்தான். அரை மணி நேரமாக அனிக்கா அவன் கண் முன் வராமல் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தாள். அவள் தன்னுடைய தோழிகளுடன் உடை மாற்றி கடலுக்கு குளிக்கச் செல்லவும் கடற்கரைப் பக்கம் போய் அமர்ந்துக் கொண்டான் அவன்.
குளிக்கின்றப் பெண்களைப் பார்ப்பது போலாகி விடும் என்று தயங்கினாலும் தன்னைப் போல கடற்கரையிலிருந்துக் கொண்டு கதைப் பேசும் மற்ற ஆண்களோடு அமர்ந்தவனாய் அவ்வப்போது கடல் பக்கம் தன் பார்வையை செலுத்தியவனாய் அமர்ந்திருந்தான்.
ஜீவன் ரூபனின் சந்தோஷமான முகத்தைக் கண்டு மகிழ்ந்தவனாக தன் நண்பர்களோடு புட்பால் விளையாடிக் கொண்டு இருந்தான். சட்டென்று திரும்பிப் பார்க்கையில் என்னவாயிற்று என் அண்னனுக்கு என்று திகைக்கும்படி இருந்தது ரூபனின் செய்கை.
அவசரமாய் எழுந்து கடலின் சற்று உள்ளே சென்றிருந்த பெண்கள் கூட்டம் நோக்கி கடல் நீரில் பாய்ந்தான் அவன், ஜீவன் பெண்கள் கூட்டத்தை கவனித்தான் அக்கூட்டத்தின் அனிக்கா இல்லை. இல்லவே இல்லை
தொடரும்
{kunena_discuss:970}