23. புதிர் போடும் நெஞ்சம் - உஷா
புதிர் 23
நான் அப்டேட் கொடுக்கிறதுக்குள்ளே தமிழ் நாடு எத்தனையோ மாற்றங்களை சந்திச்சிடுச்சு! எங்க வீட்டுல... Bacterial Infection to Viral Infection எல்லாம் எங்களை வைச்சு செஞ்சுடுச்சு! அதுலயும் என் ஸ்ரேயா கோஷல் வாய்ஸ் மொட்டை ராஜேந்திர் வாய்ஸ்ல ப்ளே ஆனது மரண கொடுமை!
இந்த அப்டேட் கொடுத்தே ஆகணும்னு ஒரு நாலு நாளா இரண்டு மணி வரையும் முழிச்சு டைப் பண்றேன்.. பகல்ல passion க்கு டைம் ஒதுக்க முடியலை! ஸாரி ஃப்ரண்ட்ஸ்! எல்லாரும் என் தாமதத்தை புரிஞ்சிப்பீங்க... நானும் உங்க காத்திருப்பை புரிஞ்சிருக்கேன். அடுத்த அப்டேட் துரிதமா கொடுக்க முயற்சி பண்றேன்!
Wish you Happy new Year, a happy Pongal! Happy Republic Day!!!
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ!
உனை நோக்கியே
எனை ஈர்க்கிறாயே!!!
“நீங்க தப்பா... நீங்க தப்பபா .. இப்போ இல்லை.. ஆரம்பத்திலே இருந்தே... அப்படி தான்... ”,
வேதனையுடன் அவள் குற்றம் சாட்டுவதைக் கண்டு..
‘ஆரம்பத்திலே வா??’, திகைத்தான் ஆர்யமன்..
“எனக்கு தான் உங்க மனசுலே என்ன இருக்குன்னு இத்தனை நாளா தெரியலை! நான் வெட் ஃப்ளோர்ல பேலன்ஸ்காக பிடிக்க வந்தப்போ.. தொடாதேன்னு திட்டுனீங்களே.. அப்பவே புரிஞ்சிருக்கணும்...”
“அன்னைக்கு புரியலைன்னா கூட பரவாயில்லை.. இன்னைக்கு ஃபளர்ட் பண்ணாதேன்னு சொன்னீங்களே அப்ப புரிஞ்சிருக்கணும்...”
“அதான் இல்லை.. பைக்ல ஏறுறப்போ தள்ளி உட்கார சொன்னப்பவாவது....”, என்று இழுத்தவள்...
“ஆனா... இப்ப... இப்ப நீங்க இப்படி முகத்தை சுழிச்சு.. கண்ணை இறுக்க மூடி தலையை உலுக்குனீங்களே”,
அவனைப் போலவே செய்து காட்டிவாறு, “அப்ப தான்.. அப்ப தான்.. புரிஞ்சது”,
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
படிக்க தவறாதீர்கள்..
சொல்லும் பொழுதே கமறியது அவளுக்கு!
ஒவ்வொரு நிகழ்வும் இவளிடம் அலைபாய்ந்ததை எடுத்து காட்ட இவ்வளவு உன்னிப்பாக தன்னை கவனித்து இருக்கிறாளா? என்ற திகைப்பு ஒரு புறம்... ‘ஏன்டா இப்படி செய்தேன்னு கேட்கிறதை விட்டுட்டு இவளையே ஹர்ட் பண்றாளே’, என்ற கவலை மறுபுறமாக...
‘இதற்கு என்னை தண்டித்து விடேன்’, என்பது போல அவளையே பார்த்து நின்றான் அவன்! அவளோ தான் நினைத்து வருந்தியதை.... தன் வேதனையை.... அதே வலியுடன் அப்படியே அவனிடம் கொட்டினாள்!
“இப்போ நிஜமாவே பேலன்ஸ் இல்லாம தான் உங்களை பிடிக்க வேண்டியதாகிடுச்சு... நீங்க நினைக்கிறது போல.. தப்பான பொண்ணு இல்லை நான்! ”,
நைந்த போய் வெளி வந்தன வார்த்தைகள்!!!!
தன் செயலை அவள் புரிந்து கொண்ட விதமும்.. அவளை அவளே தாழ்த்தி வருத்தி கொள்வதை கொடுமையான தண்டனை எதுவும் இருக்க முடியாது என்பதை உணர்ந்தது என்னவோ ஒரு ஷணம் தான்..
அதற்குள் அவள் சொன்ன “தப்பான பொண்ணு”, என்று வார்த்தையில் வெகுண்டெழுந்தவனுக்கு சற்று முன் இருந்த குற்ற உணர்வு வருத்தமெல்லாம் மறைந்து பளார் பளாரென்று அறைய வேண்டுமென்று தான் ஆத்திரம் வந்தது அவனுக்கு...
“அந்த ஃபிலோமினா மாதிரி பிகேவ் பண்றேன்னு..”, என்று தொடர்ந்தவளை
“நிறுத்துடி!!!”, உறுமலோடு இடைவெட்டியவன்..
“கிறுக்குத்தனமா எதையாவது உளறினே கொலையே பண்ணிடுவேன்!!!!”
என்ற கத்தலில்... பேச்சற்று போனாள்!
அவளை சொன்ன விதத்தில் கலவரமடைந்தாலும்.. அந்த உரிமையான அதட்டலில் தன்னை தவறாக எதுவும் நினைக்கவில்லை இத்தனை நேரம் குழம்பிய மனதிற்கு ஆறுதல் கிடைத்தது. ஆனாலும், என்னை ஏன் ஒதுக்குகிறான் என்ற கேள்விக்கு பதில் கிடைக்காது ஆதங்க பட்ட மனது...
“நான் என்ன செய்ய? காம்ஃபிளிமென்ட் பண்ணா ஃப்ளர்ட்ன்னு சொல்றீங்க! அதுவும் அது கன்னக்குழிக்கு மட்டும் தான்.... குண்டு முழிக்கு இல்லை”
என்று சொல்லும் பொழுதே அவன் விழியை ஆராய்தலுடன் நோக்கியது அவள் பார்வை...
சட்டு சட்டென்று மன நிலையை மாற்றி கொள்ள அவளைப் போல இவனால் முடியவில்லை!!! ஆனாலும்.. ‘ஈஸியா காம்பிளிமென்ட்ன்னு சொல்லிட்டாளே’, என்று மனதோரம் எரிச்சல் உண்டாக்க...
“காம்ப்ளிமென்ட்டா நினைக்கிறதை எல்லாம் சொல்லுவியா? அப்போ உன்னோட லிப்ஸ் சூப்பர்ன்னு நான் பதிலுக்கு சொல்லலாமா???”
போகிற போக்கில் சொன்னவன் பார்வை மாய விசையாய் இழுத்த அதரங்களில் உரச அதன் ஈர்ப்பில் சிக்கி விடுவோமா என்று பயந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவசர அவசரமாக விலகி ஓடியது!
பார்வை அகன்றாலும்.. பதிந்தது அகன்று போகுமா??? இன்னும் அந்த அதரங்கள் மனக் கண்ணிலே நின்று இவன் உயிரை குடித்துக் கொண்டிருந்தன.
அஞ்சனா, கோலிக் குண்டை உருட்டி விட்டது போல உருளும் அவன் கருவிழிகளையே கண் கொட்டாது பார்த்து... குண்டு முழியும் நல்லா தானே இருக்கு என்ற யோசனையில் இருந்தவள்.... அவனின் அந்த விவகாரமான கேள்வியில் அதிர்ந்து அவனைப் பார்த்தாள்!!!
அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது புரியாமல்!
துளி கூட சந்தேகப்படாமல் தன்னை ஏறிட்டவளிடம் உண்மை சொல்லி அவள் நம்பிக்கையை குலைக்கும் தைரியமும் இல்லை! பொய் சொல்லி அந்த நம்பிக்கையை காப்பாற்றும் தைரியமும் இல்லை இவனிடம்!