என்ன பேசினாலும் இவனுக்கு கோபம் வருதே!! இவள் மனம் இன்னுமே புண்பட்டு போக...
“தெரியலை! வேற என்ன சொல்லன்னு நிஜமாவே தெரியலை ஆர்யா!!! நான் என்ன செய்தாலும் அது உங்களுக்கு கெட்டதா தான் முடியுது! அதான், இனி ஸாரி சொல்ல கூட டிஸ்டர்ப் பண்ணலை! போயிடுறேன்”
அவள் பேச்சில் உணர்வுகள் செத்து போயிருந்தது!!!
மீண்டும் மீண்டும் தன் மீதே எல்லா பழிகளையும் சுமத்தி தன்னை காயப்படுத்தி கொள்பளை கண்ட ஆர்யமனுக்கு பெருத்த கவலையாகி போனது!
‘நாம என்ன சொன்னாலும் தப்பாவே புரிஞ்சுக்கிறா.. சரி அவளா எதையோ புரிஞ்சுகிட்டு விலகி போறேங்கிறா! போகட்டும்! அதான் அவளுக்கு நல்லது!’
அதை சாதகமாக்க விழைந்தான் தான்! அத்தனை சங்கடபடுத்தி பிரிய என்னவோ மனமே வரவில்லை! போ என்ற விடவும்.. போகாதே என்று தடுக்கவும் முடியாமல் தத்தளித்தவனின் மவுனம் அவளைக் கொல்ல...
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
“போயிடுறேன் ஆர்யா......”, தழுதழுத்தது அவள் குரல்.
“பட்.....”, என்ற இரு எழுத்தை சொல்லி முடிப்பதற்குள் கண்களும் குளமாக,
“டோன்ட் எவர் ஹேட் மீ! அஞ்சனா மேல ப்ராமிஸ்”
இறைஞ்சுதலாக யாசித்தவளின் கரம் சத்தியமே செய்ய போக...
அன்பை ஆயுதமாக்கி அவள் நடத்தும் தாக்குதலில் நொறுங்கியவன்.... கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கரத்தை பற்றி தன் தலையில் வைத்து அழுத்தி அந்த சத்தியத்தை தனதாக்கினான்!!!
கரத்தை இழுத்த வேகத்தில் அவள் இன்னும் அவனை நெருங்கி நிற்க... தன் முகத்தருகே இருந்த அவள் முகத்தில்.... கண்ணீரில் பளபளத்த அவ்விரு கண்களைத் தழுவிய அவன் பார்வை.... அதுவரை சோகம் சுமந்த அந்த கண்கள் ஒளி பெறுவதை கண்ட பின் தான் திருப்தியடைந்தது!
அவன் விழி கோர்த்து நின்றவளுக்கும் அதே உணர்வு தான்! நொடிக்கும் குறைவான அந்த விழி கலப்பில் அவள் தவிப்பு
‘இது போதும்!!!!’, என்று அமைதியுற்று அடங்க....
காற்று கூட இடைபுகமுடியாத வண்ணம்... இவன் கைக்குள் சிக்குண்ட தன் கையை விலக்க…. அந்த தழுவலில் அதன் மென்மையை உணர்ந்தவனை....
‘இன்னும் கிடைக்காதா!’, என்ற தவிப்புத் துவங்கியது!
அந்த உணர்வு எழுந்த வேகத்திலே மற்றொரு பிழையை செய்து விடாதே என்று மனம் கடிய... சுதாரித்தவன் கரம் வண்டிக்கு திரும்பி ஆக்சிலேட்டரை உயர்த்தும் நேரத்தில்.. அவள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தாள்!