(Reading time: 23 - 46 minutes)

'ரியாயிடும். இன்னும் கொஞ்ச நாள்..... சரியாயிடும்......எல்லாம் சரியாயிடும்  ' சொல்லிக்கொண்டே அவளை பரிசோத்திதான் விஷ்வா. வலியில் கண்ணீர் கன்னம் தாண்டி வழிந்துக்கொண்டே இருந்தது அவளுக்கு.

'மறுபடியும் கட்டு போட்டு விடறேன்.  இன்னும் ஒரு வாரம் பிளாஸ்டர் இருக்கட்டும். அதுக்கு அப்புறம் பிரிச்சிடுவோம் சரியா...' அவன் சொல்ல அவள் தலை அசைக்க அவள் கண்ணீரை துடைத்து விட்டான் அவன்.

சில நொடிகள் அவளையே பார்த்திருந்தவன் மெல்ல சொன்னான். 'கொஞ்சம் தள்ளி போனாலும் நம்ம கல்யாணம் கண்டிப்பா நடக்கும். அதுக்கு முன்னாடி 'எது நடந்தாலும் பயப்படாதே. நான் உன்னை விட்டுடுட மாட்டேன்..'

.ஏன் என்ன நடக்க போகிறது..'  அவள் அவனை கேள்வியாக பார்க்க

'இல்ல உங்க அண்ணன் கல்யாணம் வருதில்ல அதான் சொன்னேன்..' புரியவில்லை அவளுக்கு. முகம் நிறைய குழப்பம். அவள் முகம் படித்து புன்னகையை இதழ்களில் ஓடவிட்டுக்கொண்டான் விஷ்வா.

'ரொம்ப குழப்பிக்காதே. நான் பார்த்துக்கறேன். என்னமோ சொல்லணும்ன்னு தோணிச்சு அதான்..' என அவள் கன்னம் தட்டிவிட்டு நகர்ந்தான் அவன்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா" - சமூக அக்கறையுள்ள குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

தே நேரத்தில்

அந்த பெரிய நகைக்கடையில் இருந்தான் பரத்.

'ஹாய் பரத்..' அவனுக்கு பின்னால் இருந்து அஸ்வினியின் குரல்.

அவன் சுழன்று திரும்ப அவளருகில் அபர்ணாவும் நின்றிருந்தாள். மெரூன் நிற சுரிதாரும், காதிலும், கழுத்திலும் கைகளிலும் அதற்கேற்ற அணிகலன்களும், முகத்தில் தேங்கி நிற்கும் கல்யாண களையுமாக அவள்.

'ஹலோ மேடம் வாங்க வாங்க வாங்க..' உற்சாகம் ஓடி வந்து ஒட்டிக்கொண்டது அவனிடத்தில். 'ஆன்லைன்லே உங்க பாட்டு செம ஹிட். தெரியுமா???

சந்தோஷ புன்னகையுடன் தலை அசைத்தாள் அபர்ணா.

'சூப்பரா இருக்கு பரத். நானும் கேட்டேன்..' என்றாள் அஸ்வினி. 'நாங்க ஆர்டர் கொடுத்த நகை வாங்க வந்தோம். சார் என்ன நகை கடை பக்கம்??? யாருக்கு வாங்க வந்தீங்க..' அஸ்வினி தெரிந்துக்கொண்டே கிளற

'நான் வேறே யாருக்கு வாங்குவேன்..' சொல்லியே விட்டான் அவன்.

'சரி சரி சரி நடத்துங்க.. நான் கொஞ்சம் கீழே போயிட்டு வரேன். நீ இங்கேயே இரு அபர்ணா...' அழகாய் விலகிக்கொண்டாள் அஸ்வினி.

'யாருக்கு நகை. எனக்கா..' அவசரமாக கேட்டாள் அபர்ணா.

'எஸ் உன் கல்யாணத்துக்கு

'ப்ளீஸ் .. பரத்.. அதெல்லாம் வேண்டாம்.. அப்பா நிறைய வாங்கி இருக்காங்க..'

'அவர் வாங்கட்டும். நானும் வாங்குவேன். இப்போ நான் உன் அத்தை பையன். நான் வாங்குறதை எல்லாம் நீ தடுக்க முடியாது.. கமான் எதெல்லாம்  பிடிச்சிருக்கு சொல்லு..'

'ப்ளீஸ்... வேண்டாம் பரத்..'

'சரி விடு மத்ததை எல்லாம் நான் செலக்ட் பண்ணிக்கறேன். மோதிரம் மட்டுமாவது நீ செலக்ட் பண்ணு. சைஸ் போட்டு பாரு..' அவன் கட்டாய படுத்த வேறு வழி இல்லாமல் அதில் மிக அழகானதொரு ஒரு மோதிரத்தை தேர்ந்தெடுத்தாள் அவள்.

மலர்ந்த முகத்துடன் அதை அவள் அவனிடம் நீட்ட 'பிடிச்சிருக்கா??? என்றான் இதமாக

அழகான சிரிப்புடன் அவள் தலை அசைக்க அது சட்டென அவனது நினைவலைகளை எங்கோ தள்ளிக்கொண்டு சென்றது.

அன்று விருது வழங்கும் விழா முடிந்ததும் அவளிடம் கேட்டேனே ' சேர்த்து வெச்சிடலாமா இந்த அபர்ணாவை அருண்கூட??? சீக்கிரமா முடிச்சிடலாமா கல்யாணத்தை???' என.. அப்போதும் இப்படித்தானே மலர்ந்தது அவள் முகம்.

'என்னை முழுவதுமாக நம்புகிறாளே இவள். இவளுக்கு நான் துரோகம் செய்ய போகிறேனே??? உயிர் வரை சுட்டது குற்ற உணர்ச்சி.

சில நொடிகள் வேறேதோ நகைகளை ஆராயும் பாவனையில் விலகி சென்று நின்றுக்கொண்டான். பின்னர் எதையோ யோசித்தவனாக அவள் அருகில் வந்தான்.

'அபர்ணா கிட்டே நான் ஒண்ணு கேட்பேன் கரெக்டா பதில் சொல்லணும்..'

'கேளுங்க பரத்...'

'அருண்... அன்னைக்கு நடந்ததுக்கு சாரி கேட்டாரா.???'

ஒரு வேளை செய்தது தப்பு என்று அவன் உணர்ந்திருந்தால் கூட போதும், நான் விலகிக்கொள்கிறேன் அவள் மகிழ்சிக்காக நான் விலகிக்கொள்கிறேன்!!!

பதில் வரவில்லை அவளிடமிருந்து!!! அப்படி நடத்திருந்தால் உடனடியாக வந்திருக்க வேண்டுமே பதில்!!! வரவில்லை!!

அதுக்கு அப்புறம் பேசினார் பரத். 'என்ன பாட்டு பாடி இருக்கே.. யார் கூட பாடி இருக்கேன்னு விசாரிச்சார்.. ' என்றாள் சம்மந்தமே இல்லாமல்.

ஸோ.. அப்போ சாரி கூட கேட்கலை... இல்லையா???'' என்றான் கொஞ்சம் கொஞ்சமாக கொதிப்பு ஏறிக்கொண்டிருக்கும் குரலில்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.