36. புத்தம் புது காலை - மீரா ராம்
தன் இமைக்கதவுகளை திறந்தவளின் பார்வையில் கண்ணாடிக் கதவின் வழியே தெரிந்த உருவம் தான் முதலில் பதிந்தது…
மெல்ல விழிகளைச் சுருக்கி, விரித்து, மங்கலான தன் பார்வை தெளிவாக தெரிய ஆரம்பிக்க, அந்த உருவமும் யாருடையது என்று அவளுக்கு தெரிந்த வேளை, அவளது இதழ்கள் அவனது பெயரை உச்சரிக்க முயன்றது வேகமாய்…
“கா…….ர்…….த்……..தி………………….”
அவள் மெல்ல தன் இதழ்களைப் பிரித்து உச்சரித்து முடிக்க, வெளியேயிருந்து பார்த்துக்கொண்டிருந்த அவனுக்கோ, அப்பொழுது தான் சுவாமே வந்திருந்தது முழுமையாய்….
இதழ்கள் மலர, கண்கள் கலங்க, அவன் அவளைப் பார்த்தபடி இருக்க, அவளும் அவனை தான் பார்த்திருந்தாள்…
“ஷீ இஸ் ஃபைன் நௌ…. நீங்க போய் பார்க்கலாம்… பட் அவங்களை ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ண விடாதீங்க… ஓகே…”
டாக்டர் அவளது அறையிலிருந்து வெளிவந்து புன்னகைத்தபடி சொல்ல, அப்போது அங்கே வந்த அர்னவின் குடும்பத்தினரின் காதுகளும் அந்த வார்த்தைகள் விழ, அனைவரும் சற்றே நிம்மதியடந்தனர்…
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தீபாஸ்ன் "பெண்ணே என் மேல் பிழை" - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்..
அனைவரும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து சிரித்துக்கொள்ள, ஜானவியின் அம்மா மட்டும் கைகளை கூப்பி ஏதேதோ முணுமுணுத்துக்கொண்டிருந்தார் கலக்கத்துடன்…
அவரது அருகில் சென்ற அர்னவ், “அத்தை ஜானவி கண் முழிச்சிட்டா… இனி என்னைக்கும் அவளை கஷ்டப்பட நான் விடமாட்டேன் அத்தை… கண்ணைத் திறந்து பாருங்க அத்தை….”
அவன் குரல் கம்ம சொல்ல, அவர் கண் விழித்தார் வேகமாய்…
விழி திறந்தவரின் விழிகளிலிருந்து கண்ணீர் மளமளவென வர, சட்டென அழ ஆரம்பித்தார் அவர்…
“அத்தை… அழாதீங்க…. அவளுக்கு எதுவும் ஆகலை… அவ நல்லாயிட்டா… ப்ளீஸ் அத்தை… அழாதீங்க…”
அவன் அவர்களை சமாதானப்படுத்த,
“அவ கண்ணு முழிச்சதே போதும் தம்பி எங்களுக்கு… இனி அவ உங்க பொறுப்பு… அவளை நீங்க நல்லாப் பார்த்துப்பீங்கன்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு…”
என்றவர் தன் கணவரை திரும்பி பார்க்க, அவரும் ஆம் என்றார்…
“சரி வாங்க… முதல்ல எழுந்திருங்க…” என்றவன் அவரை கைத்தாங்கலாக எழுப்பி விட, அவரும் எழுந்து கொண்டார்…
பின் ஜானவியின் அறை நோக்கி வேகமாக செல்ல எண்ணியவன், உடனேயே அந்த முடிவை மாற்றிக்கொண்டு,
“நீங்களும் அத்தையும் போய் அவளைப் பாருங்க மாமா…” என ஜானவியின் அப்பாவிடம் அவன் கூற, அவரோ சிரித்தார்…
பின் சரி என்றபடி அவர் தன் மனைவியோடு தன் மகளைப் பார்கக உள்ளே சென்றார்…
மகளை அந்த நிலையில் காண எந்த பெற்றோருக்கு தான் மனம் வரும்?... கலங்கிய இருவரிடமும், கைகூப்பி மன்னிப்பு வேண்டினாள் ஜானவி…
“என்னை மன்னிச்சிடுங்கப்பா… மன்னிச்சிடுங்கம்மா… எனக்கு வேற வழி தெரியலை….”
என்றவள் அழ ஆரம்பிக்க, மகளின் தலையை வருடி கொடுத்தார் அவளின் தகப்பன்…
“அழாதம்மா… எங்கமேலயும் தப்பு இருக்கு… நாங்க இவர் தான் மாப்பிள்ளைன்னு சொல்லியிருந்தா நீ இப்படி ஒரு முடிவை எடுத்துருக்க மாட்ட தானம்மா?...”
“இல்லப்பா… நான் தான் தப்பு பண்ணிட்டேன்… உங்ககிட்ட இருந்து எல்லாத்தையும் மறைச்சிட்டேன்… அவர் என்னை விரும்பாத பட்சத்துல உங்ககிட்ட என்ன சொல்லி நான் சமாதானப்படுத்த முடியும்?...”
அவள் சொல்லிவிட்டு மீண்டும் அழ, ஜானவியின் அம்மா மகளை அதட்டினார்…
“போதும்ம்மா… அழததெல்லாம் போதும்.. இனியாவது நீ சந்தோஷமா இருக்கணும்… அதுதான் எங்களுக்கும் வேணும்… புரியுதா?...”
அவர் தன் மனம்விட்டு கூற, அவளும் சரி என்றாள் புன்னகையுடன்…
அதே நேரம், அங்கே அர்னவினை பிய்த்து எடுத்துக்கொண்டிருந்தாள் சரயூ…
“ஏண்டா எவ்வளவு பெரிய விஷயத்தை இத்தனை நாள் மறைச்சிருக்குற?... அவ்வளவு அழுத்தமாடா உனக்கு?...”
“……….”