(Reading time: 13 - 26 minutes)

டாக்டர் உன்னை ஸ்ட்ரெயின் பண்ண விடக்கூடாதுன்னு சொல்லிட்டு போனார்… ஆனா பாரு… நாங்க உங்கிட்ட பேசிட்டே இருக்குறோம்… நீ ரெஸ்ட் எடும்மா… நாங்க வெளியே இருக்குறோம்… எதும் வேணும்னா கூப்பிடு சரியா?...”

வாசந்தி மருமகளின் கன்னம் தடவி கூற, அவளும், சரி என்றாள்…

அறையை விட்டு வெளியே வந்த ஜானவியின் தந்தை, அங்கே சரயூவிடம் பேச முயற்சி செய்ய, அவளோ முகம் திருப்பிக்கொண்டிருப்பதைக் கண்டார்…

அவர் வரும் அரவம் உணர்ந்து அவள் சிரிக்க, அவரும் அவளைப் பார்த்து சிரித்துவிட்டு,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்..

“தம்பி மேல கோபப்படாதம்மா… அவர் நிலைமையும் ரொம்ப பாவம்… கடைசி நேரத்துல தான் எல்லாமே நடந்தது… அதனால அவர் மேல கோபப்படாதம்மா….”

அவர் தன்மையாய் கூற, அவள் முகத்திலோ யோசனை படர்ந்தது…

பின்னர், நடந்ததை அவர் விளக்க, அவள் முகம் தெளிவடைந்தது… எனினும், அவன் தன்னிடம் மறைத்துவிட்டான் என்ற கோபம் மேலோங்க,

“உங்களுக்காகத்தான்ப்பா நான் இவனை மன்னிச்சி விடுறேன்…” என்றாள் அர்னவினை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே…

“சரிம்மா… நாங்க போயிட்டு வரோம்…” என்றவர்,

“நீங்க போய் ஜானவியைப் பாருங்க மாப்பிள்ளை….” என சொல்ல, அவன் அவரைப்பார்த்தான்…

“நாங்க முதல்ல போய் பார்க்கட்டும்னு நீங்க விட்டுக்கொடுத்தீங்க… இனி யாருக்காகவும் விட்டுக்கொடுக்க வேண்டாம்… போங்க… போய் பாருங்க… மனசு விட்டு பேசுங்க….”என்றபடி, அர்னவின் தந்தை மற்றும் திலீப்புடன் கிளம்ப, வாசந்தியும், ஜானவின் அன்னையும் அறைக்கு வெளியே இருந்த சேரில் அமர்ந்து கதை பேச ஆரம்பிக்க, சரயூவும் அங்கே செல்ல,

அவன் அதற்கு மேலும் தாமதிக்காமல், அவளது அறைக்குள் நுழைந்தான்…

கண் மூடி படுத்திருந்தவள், அறைக்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு விழிக்க, அங்கே அவளின் கார்த்தி நின்றிருந்தான்…

“கார்த்தி…………..” முகம் எங்கும் சந்தோஷத்துடன் அவள் கூற, நாலே எட்டில் அவளை நெருங்கினான் அவன் வேகமாய்…

“ஏண்டி இப்படி பண்ணின?... என் நிலைமையை கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தீயாடி?..... நீ இல்லாம நான் மட்டும் இருந்துடுவேனா?... லூசு…..”

அவன் கோபமாக தன் மனதை கொட்ட, அவள் முகத்திலோ புன்னகை தவழ்ந்தது… கூடவே விழிகளில் நீரும் பெருகியது…

“நான் இங்க வலியில இருக்குறேன்… நீ சிரிக்குறீயா?...”

“…………………………..”

“உன்னை அங்க எந்த நிலைமையில….. நா…… எப்படி இருந்துச்சு தெரியுமாடீ?.... உசுர யாரோ சட்டுன்னு பறிச்சிட்ட மாதிரி இருந்துச்சுடி…. ஏண்டி இப்படி பண்ணின?.... லூசு மாதிரி…..”

“……………………………”

“நான் கேட்டுட்டே இருக்குறேன்ல… பேசுடி…..”

“……………………………”

“ப்ளீஸ்டி… எதாச்சும் சொல்லு……”

“ஏழு தடவை……”

“என்ன?....”

“ஏழு தடவைன்னு சொன்னேன்…”

அவன் புரியாமல் விழிக்க,

“இதோட இப்ப மட்டும் ஏழு தடவை டீ சொல்லிட்டீங்க… அததான் சொன்னேன்….”

அவள் சொல்லி முடித்ததும், அவன் முகத்தில் அதுவரை இருந்த இறுக்கம் சற்றே தளர்ந்தது….

“லூசு…..” என சொல்லிக்கொண்டே அவள் படுத்திருந்த பெட்டில் அவன் அமர, அவள் எழுந்து கொள்ள முயற்சித்தாள்…

“படு… ஸ்ட்ரெயின் பண்ணாத….”

“………………….”

அவள் எழுந்து அமர்ந்தாள், அவன் சொல்லியும் கேளாமல்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.