(Reading time: 13 - 26 minutes)

நான் டீ சொன்னா உனக்கு அவ்வளவு பிடிக்குமா?....”

“……………………..”

“சொல்லுடி… கேட்குறேன்ல… ப்ளீஸ்….”

“அது உங்களுக்கு தெரியாதா?....”

“ப்ச்… நீ சொல்லு இப்போ…. நான் உன் வாயால கேட்கணும்… சொல்லுடி… ப்ளீஸ்…”

அவன் குரல் கெஞ்சி குழைய, அவள் முகமோ சிவக்க ஆரம்பித்தது…

“நான் கேட்டுட்டே இருக்குறேன்… நீ என்னையே பார்த்துட்டிருக்க?... ஏண்டி….”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "மனதோர மழைச்சாரல் நீயாகினாய்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

“உங்களை நான் இன்னைக்குத்தான் இவ்வளவு பக்கத்துல பார்க்குறேன்… ரொம்ப அழகா இருக்குறீங்க… என்னால உங்களை விட்டு கண்ணை எடுக்கவே முடியலை…. எப்பவும் உங்க போட்டோவை தான் நான் பார்த்துப்பேன்… அப்பவே என்னால உங்களை விட்டு பார்வையை எடுக்க முடியாது… ஆனா இன்னைக்கு நேர்ல, இவ்வளவு நெருக்கமா பார்க்குறப்போ இமைக்கணும்னு கூட எனக்கு தோணலை….”

அவன் கண்களைப் பார்த்தவாறு அவள் கூற, அவள் கண்களிலும், வார்த்தைகளிலும் தெரிந்த காதலில் அவன் வீழ்ந்தான்…

“ச………………..கி………………………” என்றவன் அவளையேப் பார்க்க, அவன் கரங்கள் அவளை நோக்கி உயர, அவள் இமைகள் தாழ்ந்தது….

அவளின் அந்த நாணம், அவனை மேலும் தடுமாற வைக்க,

“நான்…… உன்……. கை…..யைப்…………….. பி….டி…ச்….சு….க்க…..வா???............”

மனதிலிருந்த வார்த்தைகளை கேட்டே விட்டான் அவன்…

இத்தனை நாள் அவள் சொன்ன அதே வார்த்தைகள், அவள் கேட்கும்போதெல்லாம், அலட்சியம் செய்த வார்த்தைகள், இன்று அவனது இதழிலிலிருந்து வெளிவர, அவள் கண்கள் கலங்கியது வேகமாய்…

“அழாதடி… லூசு……….. நீ அழுதா நானும் அழுவேன்….”

அவன் அவள் விழி நீர் துடைக்க கரங்களை உயர்த்த, அவள் தவிப்புடன் விழி மூடிக்கொண்டாள்…

அவள் அவனை வதைக்கிறாளா?... இல்லை அவன் அவளை வதைக்கிறானா?... இருவருக்குமே தெரியவில்லை…

ஒருவரில் ஒருவர் கரையத்துவங்கியிருந்தனர் மிச்சமே இல்லாது…

“சொல்லுடி சகி… உன் கையைப்… பிடிச்சிக்கவா?............”

அவன் மீண்டும் தவிப்புடன் கேட்க, அவள் முகத்திலோ நாணத்தின் அடையாளம் வெகுவாய்…

அதை ரசித்தவனின் இதழில் புன்னகை உதித்த வேளை, அவன் கரங்கள் தனது இணையினை சேர துடித்தது…

அவன் அவளின் விரல் பற்ற முனைய, அவளது விரல்களோ தந்தி அடிக்கத் துவங்கியது….

“மெஸேஜ்ல மட்டும் என்ன தைரியம் என் சகிக்கு?... நேர்ல அத்தனையும் காணாம போயிடுச்சு போல?...”

அவன் கிண்டலாக கேட்க,

“ம்ம்ம்…. கார்த்தி……………” என்று சிணுங்கினாள் அவள்…

“ஏற்கனவே முடியலைடி… இதுல இப்படி எல்லாம் பண்ணின, அப்புறம் எல்லாம் என் கைமீறிடும்… சொல்லிட்டேன்….”

அவன் தனது நிலையை வாய்விட்டே கூற, அவளோ சட்டென தன் முகம் மறைத்துக்கொண்டாள்….

“லூசு… கார்த்தி…..”

அவள் செல்லமாக திட்ட,

“முதல்ல…. கையை எடு… அப்புறம் திட்டு….” என்றான் அவன்…

அவன் சொற்படி அவள் தன் கரங்களை எடுக்க, அதற்காகவே காத்திருந்தவன் போல், அவள் விரல் பற்றினான் அவன் சட்டென….

சட்டென மேனி எங்கும் ஓர் அதிர்வு உண்டாக, அவள் அப்படியே தொய்ந்து போக,

“ஐ… லவ்… யூ…டி… சகி…. ஐ… லவ்… யூ……” என்றான் அவள் விரல் பற்றி தன் நெஞ்சோடு சேர்த்து வைத்துக்கொண்டு…

அவனின் காதலில் கரைந்தவள், அவனையே புன்னகையுடன் பார்க்க,

“நீ எதும் சொல்லமாட்டீயா?....” என்றான் ஏக்கத்துடன்…

“ம்ம்ம்…. சொல்லலாமே…”

அவள் குரலில் ஒரு கேலி தெறிக்க,

“சொல்லுடி…..” என்றான் அவன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.