(Reading time: 9 - 17 minutes)

துவந்து தாத்தா..,கவிய நான் எல்லார்க்கும் முன்னாடி அறைஞ்சிட்டேன்..”என்று அவன் சொல்லிமுடிக்கும் முன்பே அவனது கன்னத்தில் இடி மாதிரி இறங்கியது அடி.

அனைவரும் உறைந்து போய் நின்றனர்.ஏனென்றால் அந்த அடியை கொடுத்தவன் அவர்கள் யாரும் எதிர் பார்க்காத ஒருவன்.

விஷ்வாவை அடித்தவன் அஸ்வின்.

“அஸ்வின் அண்ணா,நான் சொல்லுறத ஒரு நிமிடம் கேளுங்க..”என்று விஷ்வா கூறுவது எதையும் காதில் வாங்காமல் அவனது சட்டையை கொத்தாக பிடித்தான் அஸ்வின்.

அங்கு என்ன நடக்கிறது என்பதை புரியாமல் பார்த்தனர் கவியின் நண்பர்கள்.

சற்றுமுன்பு கவியை அடித்தவன் இப்பொழுது கவியை அடித்ததற்காக இப்பொழுது விஷ்வாவை அடிக்கிறான்.அவனை பற்றி அவர்களால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.

கவியை திட்டிகொண்டிருந்தவன் இப்பொழுது கவியின் பக்கம் பேசுகிறான்.

“அவள அடிக்க யாரு உனக்கு உரிமை கொடுத்தது..”என்றுக் கேட்டான் அஸ்வின்.

“அண்ணா...,அது..”என்று அவன் சொல்வதை எதையும் அஸ்வின் காதில் வாங்குவதாய் இல்லை.

அவனிடம் வந்த கவி,”அவனை விடு அஸ்வின்..”என்று அவனது கைகளை விஷ்வாவின் சட்டைகளில் இருந்து பிரித்து எடுக்க முயற்சித்தாள் கவி.

“உனக்கு என்ன அடிக்க எப்படி அடிக்க உரிமை இருக்கோ அதே மாதிரி அவனுக்கும் உரிமை இருக்கு..’என்றுக் கூறினாள் கவி.

அவள் அவ்வாறு கூறியவுடன் விஷ்வாவின் சட்டை காலரிலிருந்து கையை எடுத்தவன்..,கவியின் புறம் திரும்பி அவனது தோள்பட்டையை இறுக்கமாக பற்றி,அவளது கண்களை ஊடுருவியவன்”நான் ஒன்னும் என்னோட மாமா பொண்ண அடிச்சதுக்காக இப்ப அவனை கேக்கல,என் பொண்டாட்டியை அடிச்சதுக்காக தான் கேக்குறேன்,உனக்கும் மறந்திருக்காது நீ என்னோட மனைவினு என்றுக் கூறி அவளது சுடிதாரினுள் மறைந்திறுந்த அவன் கட்டிய தாலியை வெளியில் எடுதுபோட்டான் அஸ்வின்.

அதனை பார்த்த அர்னவ்,சுதாகர்,அமர்,மித்ரா ஏன் யாமினிக் கூட அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

“உன் விழி இனி எனதெனகண்டேன் என்

உயிர் இனி நீ எனக் கொண்டேன்

நான் கண் இமைக்கும் நொடியினில்

பிரிந்தாயே..

பிணமாய் தூங்கினேன் ஏன் எழுப்பி

நீ கொன்றாய் அன்பே

கனவில் இனித்த நீ என்

நிஜத்தில் கசந்தாய் பின்பே

யார் யாரோ போலும் நாமும் இங்கே

நம்முள் பூத்த காதல் எங்கே..”

AEOM

தொடரும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:1099}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.