காலை எட்டு மணியை தொட்டப் பின்பும் கதிரவன் ஏனோ தன் பார்வையை ஊட்டியின் மீது செலுத்தவில்லை.. பனிமகளும் பூக்களை வருடிக் கொண்டிருந்தாள் தன் ஈர ஸ்பரிசத்தால்..
இவையெல்லாம் ரசித்தவண்ணம் தன் ஆடி 6'யில் சாய்ந்தபடி நின்றுகொண்டிருந்தார் அவர் ஒரு மரத்தின் கீழ்..
"இப்போ நீங்க இங்க எதுக்காக வந்திருக்கறீங்க..??",என்றாள் க்ரியா அவரை நோக்கி கோபமாக..
"ரொம்ப நாள் ஆச்சு உன்ன பார்த்து.. அதான்..",தயக்கத்துடன் ஒலித்தது அந்தக் குரல்..
"ப்ச்.. இப்போ பார்த்தாச்சுல..?? கிளம்புங்க..",என்றாள் முள்ளாக..
"ஏமா இப்படி சொல்ற..?? என்ன இருந்தாலும் நான் உன் அப்பாவோட....."
"போதும் நிறுத்துங்க.. என் அப்பாவோட தம்பி.. அதானே சொல்லப் போறீங்க..?? அதை சொல்ல உங்களுக்கு தகுதி இல்லை.."
"க்ரியா.. நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளுமா.. அன்னைக்கு என்ன நடந்துச்சுனா..."
"ஜஸ்ட் ஸ்டாப் இட்.. எனக்கு எதுவும் கேக்க வேண்டாம்..",என்று ஆங்காரமாக கத்தினாள்..
அவள் அவ்வாறு கத்துவதை கேட்டு சிறிது அதிர்ந்து போயினும்,"க்ரியா நான் சொல்ல வருவதை..",மீண்டும் தொடங்கினார் அவர்..
க்ரியாவை காணோம் என்று தேடித் கொண்டிருந்த தாத்தா அவளை அந்நபருடன் கண்டு வேக வேகமாய் அவர்களை நெருங்கி ,"ஹே.. கொலைகாரப் பாவி.. முதல்ல என் இரண்டு பெண்களையும் என் கிட்ட இருந்து நீயும் உன் குடும்பமும் பிரிச்சீங்க .. இப்போ என் பெயர்த்தியை எங்கக்கிட்ட இருந்து பிரிக்கப் பார்க்கறீங்களா..??",என்றார் காட்டமாக..
ப்ரணதீசனைக் கண்டதும் ஒரு நிமிடம் பொலிவடைந்த அவரது மனம் அவரின் சுடு சொற்களை கேட்டு வருந்தினாலும்,"மாமா..நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளுங்க ..."
"போதும்பா.. நீ சொன்னதெல்லாம் நாங்க ஆயிரம் முறை கேட்டாச்சு.. அதுக்கு பலனா நிறைய இழந்தாச்சு..இப்போ மிச்சம் இருக்கறது...",என்று க்ரியாவை நோக்கியவர் அவரிடம் திரும்பி,"எங்களை விட்டிடுப்பா..",என்று கைகூப்பினார்..
அவரின் அந்நிலையை காண சகிக்காத கிரியாவோ,"தாத்தா..இவருக்கிட்டையெல்லாம் கெஞ்சாதீங்க",என்று விட்டு அவரை இழுத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடக்கத்தொடங்கினாள்..
அவர்கள் இருவரும் செல்லும் பாதையை வெறித்துக் கொண்டிருந்தவரின் மனம் பலமாக அடிப்பட்டுக் கிடந்தது..
ஹெலோ மக்களே..!!
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!!
வியூகம் வகுக்கலாம்...
{kunena_discuss:1111}