ஆர்யமன் வீழ வேண்டும் என்பதில் ஆசை கொண்டது அவன் துர் குணம்!
அதற்காக திட்டம் தீட்டி வீழ்த்தும் வில்லன் இல்லை அவன் - சந்தர்ப்பம் அமைந்தால் அதை நோண்டி பார்க்கும் வில்லங்கமானவன்!
அதற்கு மேல் அஞ்சனாவிடம் பரணியை பற்றி பேசாமல்,
“வேலை அதிகமாக இருக்குன்னு சசி சீக்கிரமாகவே வந்துட்டா” என்று பேச்சை திசை திருப்பினான். இவ்வாறே இருவரும் பேசிக் கொண்டே அலுவலகத்திற்குள் சென்று விட...
முகுந்த்தை பார்க்கவும், பேசவும் அஞ்சிய பரணி, அவர்கள் சென்று ஒரு ஐந்து பத்து நிமிடங்கள் கழித்த பின்னரே உள்ளே வந்தான். தனது ப்ராஜெக்ட் விங்கிற்குள் வந்தவன்.. தன் டெஸ்க்கை நோக்கி செல்லும் பொழுது..
“உங்க வீட்டு பொண்ணுன்னா இப்படி பேசுவீங்களா?”
என்று சட்டையை பிடித்து உலுக்காத குறையாக பிலு பிலுவென்று பிடித்துக் கொண்டிருந்த சசியையும்,
“பஸ்ல வர்றபோ வேற டீம்ல பேசினாங்கன்னு தான் சொன்னேன்! நம்ம அஞ்சு வெகுளின்னு நமக்கு தெரியாததா! ப்ளீஸ் டோன்ட் ட்ராக் திஸ் இன்டு இஸ்யூ”
அவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தவனையும் மாறி மாறி வேடிக்கை பார்த்தவாறு கடந்து செல்ல முயல...
அதற்குள் அவனை பார்த்து விட்ட சசி... அவனை அழைத்து அவனிடம் அன்றைய வேலைகளை பட்டியலிட,
சரி சரியென்று தலையசைத்து விட்டு வந்து தன் இருக்கையில் அமர்ந்தவன் மனம் அவர்கள் அஞ்சனாவை பற்றி பேசியதை அலசியது!
‘அவங்க சொல்ற மாதிரி கொஞ்சம் வெகுளி தானோ.. ஆனாலும், ஆம்பிளைன்னா இவ்வளோ அலையக் கூடாது.’
எண்ணிக் கொண்டிருந்தவனின் அலைபேசி ஒலிக்க... தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வருதே என்ற யோசனையுடன் எடுத்ததும்...
“நீங்க அஞ்சனா லவ்வர் தானே?”,
மறுமுனையில் வந்த ஆண் குரல் அவனுக்கு கிலியூட்ட...
‘யாரு இது?? அந்த முகுந்த்தா?? ஹய்யோ விடாமல் போன்ல விரட்டுறானா???’,
தடுமாற்றத்துடன் “இ... இ...இல்லை... நீங்க யாரு?”,
“பொக்கேவை வாங்கிட்டு லவ்வர் இல்லைங்கிறீங்க???”
“இல்லை!! நான் எதையும் வாங்கலை”, படபடப்பில் அழைப்பை மட்டுமல்ல அலைபேசியையே அணைத்து விட்டு மூச்சு கூட விடவில்லை! அதற்குள் இன்டர்காம் ஒலித்தது!! திகிலுடன் அதை எடுத்ததும் மறுமுனையில்...
தொடரும்
Next episode will be published as soon as the writer shares her next episode.
{kunena_discuss:922}
{jcomments off}
Why there is no more episodes?