“அம்மு என்னன்னு என்கிட்டயாச்சும் சொல்லுமா”
“ப்ளீஸ் அண்ணி என்ன எதுவும் கேக்காதீங்க”
“என்ன அம்மு பேசுற நீ. நீ எதையோ உள்ளே வச்சு இப்படி மருகிகிட்டு இருக்கிறதை வேடிக்கை பார்த்துட்டு இருக்க சொல்றியா”
“அண்ணி ப்ளீஸ் என்னை எதுவும் கேக்காதீங்க...நீங்க என்ன வற்புறுத்தினா அம்மா போன இடத்துக்கே நானும் போயிருவேன்” ஏதோ ஒரு வேகத்தில் வர்ஷினி அப்படி சொல்லிவிட்டாள்.
கைகளிலே காபி கோப்பைகளை ஏந்தி நின்ற வருண் அதைக் கேட்டதும் திகைப்பில் கப்களை நழுவ விட்டான்.
அவள் கூறியது உரைக்க, “அம்மு” என்று உரக்க அழைத்தபடியே அவள் மீது கையை லேசாக ஓங்கி விட சுதாரித்துக் கொண்ட காயத்ரி அவனை பிடித்து சமாதனம் செய்ய முற்பட்டாள்.
“வருண் நீங்க டென்ஷன் ஆகாதீங்க. நான் பார்த்துகிறேன்”
“என்ன பேச்சு பேசுறா பாரு காயூ”
“அம்மு உன்னை யாரும் இனி எதுவுமே கேக்க மாட்டோம். சரியா. நீ எப்போவும் எந்த தப்பான முடிவுக்கும் போக மாட்டன்னு எனக்கு ப்ராமிஸ் செய்”
காயத்ரி கேட்க அவர்கள் இருவரிடமும் மாறி மாறி மன்னிப்பு கேட்டவள் காயத்ரியிடம் சத்தியம் செய்து கொடுத்து விட்டு வீட்டை நோக்கி ஓடினாள்.
அங்கே அவளது அறைக்குள் புகுந்து கதவைத் தாழிட்டவள் கட்டிலில் கவிழ்ந்து குலுங்கி குலுங்கி அழுதாள்.
“ராம் ராம் ராம்” ஓயாமல் இந்தப் பெயரை உருப்போட்ட வண்ணம் அழுதுக் கரைந்தாள். அன்னிக்கு அந்த டின்னருக்கு போயிருக்கவே கூடாது. அந்த நாளை அழிக்க முடிந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று நினைத்து நினைத்து மீண்டும் அழுதாள். அவள் நினைவுகள் அந்த நாளை நோக்கி பயணம் மேற்கொண்டன.
இதயம் துடிக்கும்
{kunena_discuss:1109}