(Reading time: 19 - 37 minutes)

வன் கலர் என்றது அவளது இளைய தங்கை வண்ணமலரைத்தான்.

அவளது கணவனும் அப்படித்தான் அழைப்பான். இவனும் தன் அண்ணனிடம் இருந்து கற்றுக்கொண்டான்.

“நான் உங்களை ரொம்ப சிரமப்படுத்தறேனா வினு?” வருத்தமுடன் கேட்டாள்.

“அப்படியில்லை அண்ணி. அன்னிக்கு அவ உங்களை எப்படி எல்லாம் பேசினா. உங்களை வீட்டுக்குள் நுழையக்கூட விடலையே.”

கோபமுடன் கூறினான்.

“அவ செஞ்சதற்கு ஏதாவது காரணம் இருக்கும் வினு.”

“என்ன பெரிசா காரணம் இருக்கப்போகுது. அவங்களோட பங்குக்கு வந்துடுவீங்கன்னுதான். வேறென்ன?”

இன்னும் அவன் கோபம் குறையவில்லை.

அவள் அப்படி பேசியிருக்காவிட்டால் கூட அவனால் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலையை செய்திருக்க முடியாது.

ஏனென்ற

...
This story is now available on Chillzee KiMo.
...

ஊனத்தை கிண்டல் செய்யறாங்க. என் திறமையை யாரும் கண்டுக்கறதில்லை. என்னை வீட்டில் கஷ்டப்பட்டு படிக்க வச்சாங்க. அதுக்கு பிரயோஜனமா இருக்கனுமே?”

“கண்டிப்பா. நீங்க நினைக்கிறது சரிதான். அவங்க உங்ககிட்ட எதையும் எதிர்பார்த்து உங்களைப் படிக்க வைக்கலை. நீங்க நல்லாருக்கனும்னுதான் படிக்க வச்சாங்க.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.