"பாரு!பாருக்கும்,நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!அவ யாரு உனக்கு இப்படி அடம் பிடிக்கிற?"-அவன் கடும் சொற்களை பிரயோகிக்க,பார்வதியின் மனம் கதிகலங்கி போனது.
"என் அம்மா!"-சளைக்காமல் பதிலளித்தான் விஷ்வா.நிலை விபரீதத்தை தொட,இருவரும் ஆடிப்போயினர்.
"எனக்கு அம்மா வேணும்!"-மீண்டும் அழ ஆரம்பித்தான்.
"விஷ்வா!நான் சொல்றதைக் கேளு!இப்படி எல்லாம் பேச கூடாது!தப்பு!என்னால வர முடியாது விஷ்வா!நான் உன் அம்மாவும் கிடையாது!அடம் பிடிக்காம அப்பாக்கூட போகணும்!"-அவன் கன்னத்தைப் பற்றியப்படி பேசினாள் அவள்.
அவள் கரங்களை தட்டிவிட்டவன்,
"போ!நீயும் என்னை விட்டு போ!அப்பாக்கு தான் அம்மா (மனைவி) வேணாம்னா,என்னையும் அம்மா இல்லாம வளர்க்க பார்க்கிறார்!"-கொடிய விஷம் கொண்டு அவன் தாக்க,செயலிழந்து போனான் ருத்ரா.
"யாரும் என் கூட பேசாதீங்க!"-அழுதப்படி ஓடியவன்,சென்று காரில் ஏறிக்கொண்டு அழ ஆரம்பித்தான்.ஈன்ற புதல்வனே உயிரோடு கொன்றுவிட,சிலையாகிப் போனான் ருத்ரா.
"சார்?"
"அவன் லக்கேஜை மனோ வந்து எடுத்துப்பான்!"-என்று கூறிவிட்டு விரைந்து அங்கிருந்து கிளம்பினான் ருத்ரா.மனம் முழுதும் வலி!வேதனை!!கண்கள் மௌனமாக கரைய செய்தன!!மிக மௌனமாக!!
தொடரும்
{kunena_discuss:1070}