புல்புல்லின் முகத்தில் அதிர்ச்சியும் பயத்தையும் காட்ட,தன்னுள் மகிழ்ந்தவன்,மேலும் தொடர்ந்தான்...
உன் அக்காகூட உனக்கு அங்கு கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று கூறி அவள் முகம் பார்த்தான்.
தன் அக்கா இறந்துவிட்டாதாக அல்லவா கூறினார்கள்.இந்த மாமா என்னவோ சொல்றாரே!
புல்புல்க்கு ஒரு சகோதரி இருந்தது உண்மையே!அவளை அவள் புகைப்படத்தில் பார்த்திருக்கிறாள்.அவளை தூக்கி வைத்திருக்கும் புகைப்படும் ஒன்றுமட்டுமே அவள் அக்காவை நினைவூட்டம் சான்று.ஏனெனில் அவளுக்கு மூன்று வயதாகும்பொழுது அவள் மறைந்துவிட்டாள் என்றும் புல்புல் என்றால் அவளுக்கு மிகவும் பிரியம் என்று பாட்டி அவளிடம் கூறியுள்ளார்.
தனக்காக இல்லையென்றாலும் தன் தமக்கையை பார்க்கவாவது இந்த மாமாவுடன் செல்லதான் வேண்டும் என்று முடிவு எடுத்தாள். இப்பொழுது அவளுக்கு தன் பெற்றோரிடம் என்ன சொல்வது என்று எண்ணம் எழ,அந்த மாமாவிடமே சைகையில் கேட்டாள்.
மிகவும் மகிழ்ச்சியடைந்தவன்,அதைப்பற்றி நீ கவலைப்படாதே,உன் பெற்றோர் கேட்கும் பொழுது சரி என்று சொன்னாலே போதும் என்று கூறி அவ்விடம்விட்டு அகன்றான்.
புல்புல் தான் எப்பொழுதும் செய்யும் வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.
அங்கிருந்து சென்றவன் அவளின் பெற்றோரிடம் பேச ஆரம்பித்தான்.
நான் உன் மகளிடம் பேசிவிட்டேன்.நீங்கள் இருவரும் உங்கள் பங்கை சரியாய் நடித்து பூர்த்தி செய்யுங்கள்.அப்புறம், இங்கு அருகில் உள்ளவர்களுக்கு சந்தேகம் வராதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.எனக்கு சில வேலைகள் இருக்கு அதை செய்துவிட்டு வருகிறேன்.(அவனின் வேலையைப் பற்றி பிறகு அறிந்துகொள்ளலாம்.)இப்பொழுது பூதகி மிகவும் கடினமாய் முயன்று புல்புல்லை பாசத்தோடு அழைத்தாள்.
புல்புல்லிற்கு இது தன் தாயின் குரலா? என்று மிகப்பெரிய சந்தேகம் வந்துவிட்டது.இம்மாதிரியான குரலில்கூட தன் தாயால் பேச முடியுமா?
அவளுக்கெங்கே தெரியும்,நாணயம் படுத்தும்பாடு!அதனால் பலரின் நானயங்கள் அழிந்துவிடுகிறது என்பதெல்லாம்...
அவள் அங்கு வந்து நிற்க, அவளை கைப்பிடித்து அருகில் அமர்த்தி பாசமென்ற பெயரில் நாச வேலைக்கு வித்திட்டாள்.
ஆம்.நாசம்தான்.பெண்ணாய் பிறந்து பிற பெண்ணை வருத்தும் செயல்களை செய்தால் அனைத்தும் நாசம்தான்.பெண்மைக்கு நாசம்.தீரா களங்கம்.
ஒரு உயிர் ஆணா அல்லது பெண்ணா என்பதை உடற்கூறின் மூலம் பிரிவு படுத்தலாம்.ஆனால் ஆண்மை உள்ளவன் பெண்மை உள்ளவள் என்பது பண்பை கொண்டு மட்டுமே அமையும்.
பெண்மை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் அன்பு,அனைவரையும் அரவணைத்தல்,இரக்கம் கொள்வது,மன்னிக்கும் பண்பு இவைதாம்.
ஆண்மை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் பிறரை காத்தல், எளியோரை துன்புறுத்தாது இருத்தல், குற்றங்களை களைதல்,அஞ்சாமை இவைதாம்.
அனைத்து பாலருக்கும் இவ்விரு பண்புகளும் இருக்கும்.என்ன குழப்புகுறேனா? ஆணிற்கும் தாய்மை பண்பு உண்டு.பெண்ணிற்கும் வீரம் உண்டு.பெண்களுக்கு பெண்மை பண்புகள் சற்று அதிகமாகவும்,ஆண்களுக்கு ஆண்மை பண்புகள் சற்று அதிகமாக இருக்கும் அவ்வளவுதான்! இக்குணங்களிலிருந்து பிறழ்ந்தோர் அப்பண்புகளை அற்றவராவர். (குறிப்பிடக் காரணம் இச்சொற்கள் பலரின் வாழ்க்கையில் விளையாடியுள்ளது.பிறரை கேலி செய்வதற்கு, துன்புறுத்துவதற்கு, குற்றம் செய்ய தூண்டுவதற்கு என்று பல வகையில் சமுகத்தில் இதனின் தாக்கம் இருக்கிறது.)
கருவிற்கு வித்திடுவதால் மட்டும் ஒருவன் ஆண்மை அடைந்தவன் இல்லை,கருவை வளர்ப்பதால் மட்டும் ஒருவள் பெண்மை அடைந்தவள் இல்லை.
இனவிருத்தி எப்பொழுதும் பண்பாகாது. இது அறியாமல் அல்லது அறிந்தும் அதை எண்ணாமல், பலரும் இனவிருத்தி செய்கையை பண்போடு ஒப்பிட்டு பேசுகிறார்கள்.இனவிருத்தி குறைபாடுள்ளோரை பண்போடு ஒப்பிட்டு அவர்களை வருத்தும் செயல்கள் பல இன்றும் நிகழ்கின்றன.
புல்புல்லின் பெற்றோருக்கு இனவிருத்தி இருந்ததே தவிர,அடிப்படைப் பண்பான ஆண்மையும் பெண்மையும் இல்லை.
இப்பண்புகள் இல்லாதோரை ஆணென்றும் பெணென்றும் கூறலாமா?
உன்னை அந்த மாமா அவங்க வீட்டுக்கு அழைச்சுகிட்டுப் போறாரு,அவர் சொல்லும் வேலைகள் அனைத்தையும் தயங்காம ஒழுங்கா செய்யனும்.ஒரு மாசம் கழிச்சி நீ இங்க வந்திடலாம் என்று பூதகி கூறினாள்.
புல்புல்லும் மகிழ்ச்சியாக தலையாட்டினாள்.இவ்வளவு எளிதில் தனக்கு அனுமதி கிடைக்கும் என்று எண்ணவில்லை.அவளின் மகிழ்ச்சியைப் பார்த்து கோவம் வந்தாலும், வெளியே அமைதியான முகத்துடன் இருந்தாள் பூதகி.