(Reading time: 15 - 30 minutes)

வளின் தந்தை அவளிடம், உன்னிடம் யாராவது எங்கு போகிறாய் என்று கேட்டால்,நீ உன் மாமா வீட்டிற்குப் போவதாக சொல்லனும்,மேலும் எதாவது கேட்டால் எதுவா இருந்தாலும் மாமாகிட்ட கேட்டுகோங்கனு சொல்லனும்.நான் சொல்லறது உனக்கு புரியுதா? என்று கேட்டான்.

புல்புல் சரியென்று தலையை ஆட்டினாலும் மனதில் கேள்வி எழும்பவே செய்தது.உண்மையில் நான் மாமா வீட்டிற்குத்தானே போகிறேன், பிறகு ஏன் அப்பா இவ்வளவு அழுத்தமா சொல்கிறார்.தன் சிந்தனையிலிருந்து விடுபட்டு புறப்படுவதற்கான வேலைகளை செய்ய அங்கிருந்து நகர்ந்தாள்.

ஏங்க இதை போய் அவகிட்ட சொல்லறீங்க. அவள் ஊமைதானே!யார் அவளை விசாரிக்கப் போறாங்க? என்றாள் பூதகி.

சைகையில் பேசறவங்க இப்ப நிறைய பேர் இருக்காங்க, அவ அந்த இடத்துக்குப் போறதுகுள்ள பல மக்களை சந்திக்க வேண்டி வரும், அதான் முன்னாலே தயார் படுத்துறேன் என்றான்.

புல்புல் சென்ற சிறிது நேரத்தில் அவன் தன் வேலைகளை முடித்து வந்துவிட்டான்.அவள் பெற்றோரிடம் அவர்கள் கேட்ட அளவு பணத்தைக் கொடுத்துவிட்டு புறப்பட ஆயத்தமானான்.

புல்புல் தன் குட்டி பையுடன் வர, இருவரிடமும் கூறிவிட்டு புறப்பட்டனர்.

ஆரம்பமாகிவிட்டது அவளின் பயணம்.இனி புல்புல்லை எவ்விடத்தில் எந்நிலையில் சந்திப்போம் என்பதற்குப் பதில் காலத்திடம்...

வேண்டும் வேண்டுமென்று

வேகமாக தேடினாலும்

கண்ணை கட்டிவிட்டு

காலம் ஆடும் ஆட்டத்தில்

விடையெல்லாம் விலகி

விரைந்து செல்கிறது...

தொலைந்து போகாமலிருக்க

தொடர்ந்து ஓடிக்கொண்டிடே  இருக்கிறேன்

அகப்படுமா?

“வணக்கம் நண்பர்களே!பிழையாக அல்லது புண்படும்படியாக இருந்தால் தயங்காமல் சுட்டிக்காட்டவும்.நன்றி!”

விடை தேடும் பல கேள்விகள் தொடரும்...

Episode 02

Episode 04

{kunena_discuss:1124}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.