(Reading time: 9 - 17 minutes)

“ஆமாம் பாரதி....  இன்னைக்கு அந்த நடிகரோட கேஸ் ஒப்பன் பண்ணி இருக்கோம்.... அதைப்பத்தி பேசணும்....”

“கண்டிப்பா சார்.... இன்னும் அரை மணிநேரத்துல நானும், சாரங்கனும் அங்க இருப்போம்....”, மதியிடம் பேசிவிட்டு விஷயத்தை சாரங்கனிடம் கூறினாள் பாரதி. பின்னர் இருவரும் தங்கள் பெற்றோரிடம் சொல்லிவிட்டு சந்திரனின் இல்லம் நோக்கி சென்றனர்.

வாம்மா பாரதி, வா சாரங்கா.... ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்து எத்தனை நாளாச்சு....”,சந்திரனின் மனைவி இருவரையும் வரவேற்றாள்.

“அண்ணி, உங்க வீட்டுக்காரர் எங்க ரெண்டு பேரையும் எங்க ஃப்ரீயா இருக்க விடறார்.... அவர் பாயிண்ட்ஸ் எடுக்க சோம்பேறித்தனம் பட்டுட்டு எங்க தலைல எல்லா வேலையும் கட்டிடறாரு.... வீட்டுக்கே தூங்க மட்டும்தான் போறோம் அண்ணி....”,சாரங்கன் வராத கண்ணீரைத் துடைத்தபடியே கூற....

“எங்க வீட்டுக்கு தூங்க மட்டும் போன மூஞ்சியைக் காட்டு பார்ப்போம்....”,என்றபடியே உள்ளிருந்து வந்தார் சந்திரன்.

“ஹி ஹி சீனியர் நீங்க இங்கதான் இருந்தீங்களா....  நாங்க சும்மா அண்ணியை entertain பண்ணிட்டு இருந்தோம்....”

“உன் வேலை எல்லாம் தெரியும்டா.... சரி உள்ள வந்து உக்காருங்க..... சுதாம்மா ரெண்டுத்துக்கும் சாப்பிட ஏதானும் எடுத்துட்டு வாம்மா...”,சந்திரன் தன் மனைவியிடம் கூற அவர் சிரித்தபடியே சமையலறை சென்றார். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே மதியும் வந்து சேர அனைவரும் சென்று சந்திரனின் அலுவலக அறையில் அமர்ந்தார்கள்.

“சொல்லுங்க மதி....  அந்த நடிகர் நரேஷ் மேல என்ன சார்ஜ் போட்டு இருக்கீங்க....”

“நமக்குத் தெரிஞ்ச பொண்ணை வச்சு அவர் மேல கம்ப்ளைன்ட் கொடுக்க வச்சிருக்கேன்.... அவர் அந்தப் பொண்ணுக்கு பாலியல் ரீதியா  தொந்தரவு தர்றதா  கம்ப்ளைன்ட் பதிவு ஆகி இருக்கு”

“அது எப்படி மதி யாரோ ஒரு பெண்ணை வச்சு அப்படி பண்ண முடியும்....  சாட்சி வேணுமே.... வெறும் வாயால சொல்றது மட்டும் செல்லுபடியாகாது இல்லை....”

“ஹ்ம்ம் நீங்க சொல்றது சரிதான் சந்திரன் சார்.... நாம முதல்ல அந்தாளை சட்டத்தோட பிடிக்குள்ள கொண்டு வர்றதுக்குதான் இந்த  FIR.... இதை வச்சு அவன் பண்ணின ஒரு ஒரு தப்பையும் வெளிய கொண்டு வரணும்....”,மதி சொல்ல இது எந்த அளவிற்கு சரியாக வரும் என்று யோசிக்க ஆரம்பித்தார் சந்திரன்.

“சந்திரன் சார், இதுல அந்தப் பெண் சார்பா நீங்க ஆஜர் ஆக முடியுமா.... இந்த கேஸ்ல உங்களுக்கு வேலை நிறைய இருக்கும்.... நீங்க சாட்சிகள் ரெடி பண்ணனும்.... சம்மந்தமே இல்லாத விஷயங்களை எல்லாம் சம்மந்தபடுத்தணும்....”

“நான் எடுத்து நடத்தறேன் மதி..... ஆனா யாரோ ஒரு பெண்ணை இதுல இழுக்கறதைவிட அந்தத் துணை நடிகையையே நாம ஏன் சம்மந்தப்படுத்தக்கூடாது....”

“சார் அந்தப் பொண்ணு சாட்சி சொல்ல வருமான்னு தெரியலை.... அது ஏற்கனவே குடும்ப கஷ்டத்துனாலதான் நடிக்க வந்திருக்கு..... அன்னைக்கு எடுத்த வீடியோலையே அது முடிஞ்ச வரைக்கும் அந்த ஆள் கிட்ட கெஞ்சி  பார்த்துட்டு முடியாமதான் அந்த ஆளோட ஆசைக்கு இணங்கி இருக்கு....”

“ஹ்ம்ம் நீங்க சொல்றது புரியுது மதி.... இருந்தாலும் இதுல ரிஸ்க் இருக்கு....”,சந்திரன் சொல்ல, சாரங்கன் நடுவில் இடைப்புக வந்தான், “ இருங்கடா உடனே நீங்க ரெண்டு பேரும் ரிஸ்க் எடுக்கறது எங்களுக்கு ரஸ்க் சாப்பிடறா மாதிரின்னு ஆரம்பிக்காதீங்க....”

“ஹிஹி சீனியர் எங்க மைன்ட் வாய்ஸ் கரெக்ட்டா கேட்ச் பண்ணிட்டீங்க....”,சாரங்கன் சொல்ல சந்திரன் அவனை முறைத்தார்.

“மதி இந்தப் பெண்ணை எனக்குத் தெரியவே தெரியாதுன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பான் அந்த நரேஷ்.... அதுனாலதான் நான் அந்த துணை நடிகையே இருந்தா பெட்டெரா இருக்கும்ன்னு  feel பண்றேன்”

“சந்திரன் இவங்களும் சினிமால நடிச்சவங்கதான்.... அதுவும் அந்தாள் கூட கொஞ்ச நாள் தொடர்புலையும் இருந்து  இருக்காங்க... ஸோ அந்த விஷயத்துல உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்.....”

“ஓ அப்போ அந்த பொண்ணு நாளைக்கு அந்த நரேஷ் மிரட்டினான்னு பின் வாங்கிட மாட்டாங்களே....”

“அதுக்கு வாய்ப்பில்லை சந்திரன்.... ஏன்னா அந்தப் பொண்ணுமே அவன் மேல செம்ம கடுப்புல இருக்கு....”

“பாரதி நீ நாளைக்கு காலைல அந்த பொண்ணு வீட்டுக்குப் போய் முழு டீடைல்ஸ் கலெக்ட் பண்ணிடு.... அதே மாதிரி கேள்விகள் எந்த மாதிரி இருக்கும்.... அதுக்கு அவங்க எப்படி பதில் சொல்லணும் அப்படின்னும் கிளியரா சொல்லிக்கொடுத்திடு....”

“மதி அந்த பையன் எப்படி இருக்கான்.... இன்னும் மருத்துவமனைலதான் இருக்கானா....”

“ஆமாம் சந்திரன்..... இன்னும் அங்கதான் இருக்கான்... அத்தனை சீக்கிரம் எல்லாம் அவன் வீட்டுக்கு வர சான்சே இல்லை.... அடிச்சு நாலு நாள் ஆச்சு இன்னும் கண்ணு முழிச்சே பார்க்கலை அவன்.....”,மதி சொல்ல சந்திரன் சாரங்கனையும், பாரதியையும் முறைத்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.