“சீனியர் அந்த கோட்டா முடிஞ்சு போச்சு..... ஏற்கனவே அதுக்காக நிறைய திட்டு வாங்கிட்டோம்.... திரும்பி மொதல்ல இருந்து ஆரம்பிக்காதீங்க....”, சாரங்கன் சொல்ல இதெல்லாம் திருந்தாத ஜென்மம் என்ற லுக்கை விட்டார் சந்திரன்.
“ஆமாம் சீனியர் அந்தக் கேஸ் முடிஞ்சு போச்சு.... இப்போ நாம நரேஷ் கேஸ் மட்டும் பார்க்கலாம்....”, பாரதி சொல்ல, நரேஷின் கேஸ் பற்றி அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தனர்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே சாரங்கனின் கைப்பேசி அழைத்தது....
“சொல்லு மாரி....”
“தம்பி சாரங்கா..... நீயும் தங்கச்சியும் சொன்னீங்களேன்னுதான் போன முறை சும்மா விட்டோம்.... பாரு இந்த மாசமும் அந்தாள் ரேஷன் சாமானைத் தூக்கி யார் வீட்டு கல்யாணத்துக்கோ கொடுத்துட்டான்.... மணிக்கிட்ட கேட்டா என்னை என்ன பண்ண சொல்ற.... கடைக்கு வந்தாதானே நான் கொடுக்க முடியும்ன்னு சட்டம் பேசறான்....”
சாரங்கன் பேசிக்கொண்டிருக்கும்போதே என்ன விஷயம் என்று கேட்ட மதிக்கு, சாரங்கன் விஷயத்தை விளக்க, மதி அந்த ஏரியா ஆட்களை விட்டு கவுன்சிலர் மேல் புகார் அளிக்குமாறு அறிவுரை கூறினான்.
சாரங்கனும் மாரியிடம் விஷயத்தை விளக்கி விட்டு தங்கள் வீட்டிற்கு வருமாறு மாரியிடம் கூறிவிட்டு கைப்பேசியை அணைத்தான்.
“பாரதி, சாரங்கன் இப்போ நாம எடுக்கறது எல்லாம் பெரிய ஆளுங்க கேஸ்.... நடிகர், கவுன்சிலர் அப்படின்னு..... அதனால அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீங்க.... அதே மாதிரி என்ன பண்ணினாலும் என்கிட்ட சொல்லிட்டு பண்ணுங்க....”,சந்திரன் கூற அவரிடம் விடை பெற்று இருவரும் வீடு நோக்கி சென்றார்கள்.
தொடரும்
{kunena_discuss:1100}