கோபத்தில் தான் இருந்தேன் இந்த அபர்ணா வேற ரொம்ப பயந்து போய் இருந்தாள் அதனால அடக்கிக்கிட்டேன் அவள் போன பிறகு கொஞ்சம் கோபம் குறைந்து விட்டது. சரி திட்டுவோம் என்று அவளை பார்த்தால் என்னமோ நான் லவ் சொன்ன மாதிரி வெக்கபட்டு சிரித்து கொண்டு இருந்தாள் .
ம்ம் அப்புறம்
அப்புறம் என்ன எனக்கு வந்தது பாரு கோபம். நீ பொய்யா சொன்னதை நான் உண்மையாக நடத்துக்கிறேன் பாரு என்று சொல்லி பக்கத்தில் போனேன்.
டேய் போதும் டா நான் ஒரு சின்ன பையன் . என்ன கெட்ட பையனா மாட்றாதே
இன்று இங்க ஒரு கொலை விழ போகுது. சொல்றதை முழுசா தான் கேளேன் டா பரதேசி. அவளை பழி வாங்க தான் அவள் அருகில் போனேன்.கிஸ் செய்ய நினைக்க கூட இல்லை சும்மா மிரட்ட தான் போனேன்.
ஹ்ம் சரி அப்றம் என்ன தான் நடந்தது நீ பக்கத்துல வந்துவிட்டாய் என்று சொல்லி அடித்தாளா உன்னை
அவள் என்னை அடிக்கிறது உனக்கு இத்தனை ஆனந்தமா டா . அவளிடம் அடி வாங்கி குடுக்கணும் என்று காத்திருக்க போல. உன்னை அப்பறம் பார்த்து கொள்கிறேன். அவள் என்னை அடித்தாள் கூட பரவா இல்லையே டா
பின்ன என்ன தான் நடந்தது. எனக்கு மண்டையே வெடிக்குது
அது அது வந்து...
உன் முகம் எதுக்கு இப்படி ஆகுது வெக்கமெல்லாம் படுகிற மாதிரி இருக்கு கேவலாமா இருக்கு டா ஒழுங்கா சொல்லி தொலை. சரி சரி முறைக்காதே அழகாக தான் வெக்க படுகிறாய் ஆனால் நான் பார்த்து என்ன செய்ய போகிறேன்
போயும் போயும் உன்னிடம் போய் சொல்ல வந்தேன் பாரு என்னை சொல்லணும் போடா நான் போகிறேன்
அடேய் மீதி கதையை சொல்லாமல் போகிறாயே இனி கிண்டல் செய்யமாட்டேன் ப்லீஸ் தங்கம்மில்ல செல்லமில்ல சொல்லு டா ( எனக்கு வர போகும் பொண்டாட்டிய கூட இப்படி கொஞ்சுவேணா என்று தெரிய வில்லை)
அவளை தொட கூட செய்யவில்லை அவள் முகத்தை பார்த்து கொண்டே பக்கத்தில் போனேன் டா. அவள் வெக்க பட்டு கொண்டு குனிந்தே இருந்தாள். சரி பயமுறுத்தியது போதும் என்று நினைத்து கொண்டு திரும்பலாம் என்று நினைத்தால் ...
நினைத்தால் என்ன கார்த்திக் நடந்தது
அவள் என்னைய பிடித்து கிஸ் பண்ணிவிட்டாள் வினோத்
ஐயோ அம்மா ஹா ஹா ஐயோ முடியவில்லை என்னால ஹா ஹா ப்லீஸ் டா சிரிச்சுக்குறேன் என்னால முடியவே இல்லை . இப்படி ஒரு விசயத்தை நான் நினைத்து கூட பார்க்க வில்லை டா கார்த்திக்.
நண்பன் சிரிப்பில் எரிச்சல் அடைந்தான் கார்த்திக். கார்த்திக் முகத்தை பார்த்து விட்டு தான் சிரிப்பை கஸ்ட பட்டு அடக்கினான் வினோத்
கீர்த்தியா டா அப்படி செய்தாள் என்னால நம்பவே முடியவில்லை அவள் சரியான வாலு என்று தெரியும். ஆனால் இந்த விசயத்தில் நிஜமாவே நம்ப முடியவில்லை
ஹ்ம் ஆமா டா அந்த பிசாசு தான்
சரி நீ அடுத்து என்ன செய்தாய்
என்ன செய்ய சொல்கிறாய் தள்ளி விட பார்க்கிறேன் முடியவே இல்லை . அப்படி இறுக்கமாக பிடித்து வைத்திருந்தாள் அப்ப தான் நீ கதவை தட்டினாய். எரும மாடே வந்தது தான் வந்த கொஞ்சம் சீக்கிரம் வந்துருக்க கூடாது.
இவனுக்கு இருக்கிற திமுரு இருக்கே நானே பூஜை வேலை கரடி மாதிரி போய் இருக்கேன் அவள் என்னை அப்படி தான் திட்டி இருப்பாள் அதுக்கு என்ன பழி வாங்க காத்திருக்கலோ தெரியவில்லை. நல்லா கிஸ்சையும் அனுபவித்து விட்டு ஏன் டா லேடா வந்த என்று என்னைய கேக்குறான் பாரேன்
அவளுக்கும் உன்னை பிடிக்காமல் தானே கார்த்திக் கல்யாணம் செய்து கொண்டாள் . இப்ப இப்படி சொல்கிறாய்
அவளுக்கு என்னை பிடிக்காது என்று உனக்கு யாரு சொன்னா . அது எல்லாம் அவளுக்கு என்னை பிடிக்கும் அவளும் விரும்பி தான் செய்து கொண்டாள். சரியான கேடீ டா அவள். 10 வயசிலே கல்யாணம் செய்து கொள்வோமா மாமா என்று கேட்டவ டா அவள் . எத்தனை நாள் அவளிடம் இருந்து தப்பித்து ஓடியிருக்கேன் தெரியுமா.
என்ன டா சொல்கிறாய்
என்னத்தை சொல்ல சொல்கிறாய் . என் பக்கத்துல கூட நிட்க மாட்டாள் ஆனால் எங்கே இருந்தாலும் என்னையே பார்த்து கொண்டே இருப்பாள். அவள் வீட்டுக்கு வந்தாலே நான் எங்கேயாவது ஓடி ஒளிந்து கொள்வேன் குறு குறு என்று பார்த்து கொண்டே இருப்பாள் நான் அவளை திரும்பி கூட பார்க்க மாட்டேன் ஆனால் அவள் பார்க்கிறது மட்டும் எனக்கு தெரியும்
உனக்கு அவளை பிடிக்காதா கார்த்திக்.