அவள் பின்னேயே அவளது தங்கைகளும் வந்திருந்ததால் அவர்களும் கைகளைப் பற்றியபடி நின்றனர்.
அவர்களுக்கு அலை வரும்போது என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்ததால் வளர்மதி மீண்டும் தண்ணீருக்குள் மூழ்காமல் தப்பினாள்.
நேசமலர் தன் அண்ணன் எங்கே என்று தேடினாள்.
அவன் தன் மனைவியைக் கண்டு கொள்ளாமல் தனியே நீராடிக்கொண்டிருந்தான்.
தன் அப்பாவின் வாரிசு. அதை அப்படியே நிரூபிக்கிறான். மனைவியை தன்னுடன் அழைத்துக்கொண்டால் அவனுக்கு கௌரவக் குறைச்சலாக எண்ணியிருப்பான்.
வளர்மதி மேல் அவர்களுக்கு எந்த கோபமும் தனிப்பட்டு இல்லை.
அவர்கள் திருமணத்திற்குப் பிறகு சதாரணமாக என்ன சொன்னாலும் கோபித்துக்கொண்டு மாமனார் வீட்டில் போய் அமர்ந்துகொண்டான்.
அவனை வளர்மதிதான் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள். அவள் அவனை
...
This story is now available on Chillzee KiMo.
...
குளிச்சாதான் நிம்மதியா இருக்கும்.”
தன் சகோதரிகளிடம் சொன்னாள்.
அவர்களுக்குப் பின்னே நின்றிருந்த ஒரு பெண்மணி அவர்களின் பேச்சைக் கேட்டார்.
“அம்மாடி! இது புனித தீர்த்தம். இங்கே குளிச்சதுக்குப் பின்னாடி குளிக்க கூடாதும்மா.”
என்ற உடன் அவளுக்குத் தூக்கி வாரிப்போட்டது.