இந்த சுற்றுலாவிற்கு கிளம்பிய நேரத்திலிருந்து தோன்றிய அந்த எண்ணம் இப்போதும் நேசமலருக்குள் தோன்றி அதை வலுவடைய வைத்தது.
தான் நல்ல நிலைமைக்கு வந்த பிறகு இவர்களை இப்படி கூட்டிவந்து எதற்குமே கவலைப்பட விடாமல் சந்தோசமாக பயணிக்க வைக்க வேண்டும் என்று உறுதியெடுத்துக்கொண்டாள்.
அவளது எண்ணத்தை அவளது கணவன் பின்னாளில் அவளது விருப்பம் பற்றி தெரியாமலே நிறைவேற்றினான் என்பது வேறு விசயம்.
சூரிய உதயத்தைப் கண்டு ரசித்தவர்கள் கிளம்பி அங்கிருந்த கடைகளை வேடிக்கைப் பார்த்து தங்களுக்கு வேண்டுவனவற்றை வாங்கத் தொடங்கினர்.
அப்போதே ஒரு நடுத்தர வயது பெண்மணி அங்கிருந்த படிக்கட்டுகளில் வரிசையாக பாத்திரங்களை அடுக்கியிருந்தார். அதில் இட்லி, தோசை, ஆப்பம் போன்ற பலகாரங்களும் கலந்த சாதங்களும் இரண்டு வகை சட்னி, சாம்பாருடன் உணவ
...
This story is now available on Chillzee KiMo.
...
aan en santhosham" href="/stories/tamil-thodarkathai-all-list/9245-nee-thaan-en-santhosham-rasu-12" rel="alternate">Episode # 12
{kunena_discuss:1114}