“என்னடி இப்படி சொல்றாங்க? மேலெல்லாம் ஒரே மண்ணா வேற இருக்கு. இத்தோட எப்படி இருக்கிறது? குளிக்கிற இடம் எங்கே இருக்குன்னு கேட்டு குளிச்சிட்டு வரனும்னு நினைச்சாலும் மீண்டும் இந்த வரிசையில் நிற்கிறதை நினைச்சா பயமா இருக்கு. இப்பவே இவ்வளவு நேரமாயிடுச்சு. இன்னும் காலையில் சாப்பிடலை. கோயில்ல போய் சாமி கும்பிடனும். ஒருத்தங்க பேச்சு வாக்கில் சொன்னது வேற எனக்கு கண்ணைக்கட்டுது. இன்னிக்கு இருக்கிற கூட்டத்துக்கு எப்படியும் சாமி கும்பிட்டு வர மூனு மணியாகும்னு சொன்னாங்க. இனி நாம போய் குளிச்சுட்டு வந்தா எவ்வளவு நேரமாகுமோ?”
“அக்கா! இன்னிக்கு ஒருநாள் அட்ஜஸ்ட் பண்ணிப்போம்க்கா. வீட்டை விட்டு வெளியில் வந்துட்டா அதுக்கேத்த மாதிரி தான் நடந்துக்கனும்.”
கொடிமலர் அவளை சமாதானப்படுத்த
“நீ ஒருவாட்டி குளிக்கிறதே அதிசயம். அத
...
This story is now available on Chillzee KiMo.
...
ரூபாய் என்று கட்டணம் செலுத்திவிட்டு அந்த வழிகளில் செல்லலாம். இவை எல்லாவற்றையும் விட வி.ஐ.பிக்களுக்கு என்றும் தனி வழி இருந்தது.
கையில் இருக்கும் பணத்தில் கட்டணம் செலுத்திவிட்டால் செலவுக்குப் பணம் போதாது. அதனால் அவர்கள் கட்டணம் இல்லாது செல்லும் பொது தரிசனத்திலேயே சென்று நின்று கொண்டனர்.