(Reading time: 18 - 36 minutes)

மணிக்கணக்கில் நகர்ந்த கூட்டத்தில் மெதுவாக நடந்து ஒருவழியாக சுவாமியை தரிசித்தனர்.

அதுவும் அவர்கள் சென்ற வரிசை சிறிது தூரத்திலேயே இருந்தது.

அவர்கள் சென்று நின்ற உடனே வேகமா போங்க, நகருங்க என்று பணியாளர்கள் விரட்டினர்.

இதற்குத்தானா இந்த கஷ்டம்?. சுவாமியை நிதானமாக தரிசிக்கக்கூட இல்லையே.

நிற்கும் நேரம் எல்லாம் நேசமலர் பொரிந்து தள்ளிவிட்டாள்.

“சாமியைப் பார்க்கிறதுக்கே லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கு. பொது தரிசனத்தில் போற நாம சாமியை பக்கத்தில் கூட நின்று பார்க்க முடியாது. இதுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு வந்து வரிசையிலும் நின்று சாமியை கொஞ்சம் நிதானமா தரிசிக்க முடிஞ்சுதா?”

“நாமளே ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டா நமக்குப் பின்னாடி வர்றவங்க எப்ப பார்ப்பாங்க?”

“என்னோட ஆதங்கம் எல்லாம

...
This story is now available on Chillzee KiMo.
...

சியை ஆவலுடன் கண்டு களித்து தங்கள் செல்போன்களில் பதிந்தனர்.

“ச்சே! இந்த டப்பா செல்போனை வச்சிக்கிட்டு மத்தவங்க முன்னாடி எடுக்கவே வெட்கமாயிருக்கு.”

வண்ணமலர் நொந்துகொண்டாள்.

“நம்மகிட்ட உள்ள பொருளை மதிக்க கத்துக்கனும்.”

ஜெயசுதா கண்டிக்க உடனடியாக வாயை மூடிக்கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.