(Reading time: 18 - 35 minutes)

பின்னேயே வந்த வண்ணமலர் அவளை அமைதியாய் இருக்க விடவில்லை.

அவளிடம் இருந்தும் தப்பிக்க குளியல் அறைக்குள் புகுந்தாள்.

எவ்வளவு நேரம்தான் அங்கேயே இருக்க முடியும்.

தயக்கத்துடனே வெளியில் வந்தாள்.

வண்ணமலர் இன்னமும் அங்கேதான் நின்றுகொண்டிருந்தாள்.

‘கடன்காரி. கடன்காரி. இன்னமும் இங்கேயே நிற்கிறா.’

மனதுக்குள் தங்கையை வைதுக்கொண்டே அவள் இருப்பதை கண்டுகொள்ளாதவள் போன்று உடை மாற்றினாள்.

“என்னக்கா? என்ன முடிவெடுத்திருக்கிறே?”

அமைதியான குரலில் கேட்டவளை புரியாதவள் போன்று பார்த்தாள்.

“என்ன முடிவுடி எடுக்கனும்? எதில் எடுக்கனும்?”

“ம்ம். உனக்கு ஒன்னுமே தெரியாதுல்ல? நீ உள்ளே வந்ததும் அம்மா உன்கிட்ட பேசவே இல்லல்ல?”

நக்கலாக பதில் வந்தது அவளிடம் இருந்து.

...
This story is now available on Chillzee KiMo.
...

பண்ணிக்கிட்டான்னு வருத்தமா இருக்காங்க. இந்த நேரத்தில் நீயும் உன் திருமண விசயத்தில் அம்மா விருப்பப்படி நடந்துக்கலைன்னா ரொம்ப நொந்து போயிடுவாங்க.”

“நான் இப்ப என்ன பண்ணிட்டேன்னு நீ இப்படி அறுத்து எடுக்கிறே?”

“நீ ஏன் அம்மா கல்யாணம் பற்றி பேசின உடனே அப்படி ஒரு ரியாக்சன் கொடுத்தே?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.