(Reading time: 17 - 34 minutes)

மாமா இந்த குண்டாத்தா  ஓவரா  சொல்லுது. அவனுக்கு சின்ன அடி தான் கொஞ்சம் தான் ரத்தம். இது பெரிய ரத்த வெள்ளம் என்று சொல்லுது. என்னை கண்டால்  இதுக்கு ஆகவே செய்யாது அதான்  உங்களிடம் மாட்டி  விடுகிறது.

அப்ப  நீ  அவன் மண்டையை உடைத்தாய் அப்படி தானே

ஆமாம்

ஏன்

அவன் அவன் .... கண் கலங்கியது கீர்த்திக்கு

எல்லாம் இந்த பிரசாத் நாய்யினால்  வந்தது.

அழாத கீர்த்தி நிலைமை  பெரியதாக இருக்கும் போல. நீ  என்ன நடந்தது என்று சொன்னால்  தான் என்னால் யோசிக்க முடியும். அவள் ஆழுகையில்  கோபத்தை கை விட்டான்.

லாப்  ல இருந்து வெளியே  வரும் போது கிட்ட வந்து நின்று லவ் பண்றேன் என்று சொன்னான் பிரசாத்.

காலேஜ்ஜில் இது சாதாரண விசயம் தானே கீர்த்தி அதற்கு இப்படி செய்யலாமா மா

லூசு மாமா முதலில் சொல்றதை கேளுங்கள்

ஆமா டீ என் வேலையை போட்டு விட்டு உனக்கு பஞ்சாயத்து பண்ண வந்திருக்கேன்ல எனக்கு தேவை தான் சொல்லி தொலை

பல தடவை காதலிக்கிறதா சொன்னான் மாமா நானும்  வேற ஒருத்தரை  லவ் பண்றேன் என்று சொல்லிவிட்டேன்  ஆனாலும்  அவன் கேட்கவில்லை. இன்று ரொம்ப அதிகமா நடந்து கிட்டான். பக்கத்தில் யாருமே இல்லை அதனால் கையை பிடித்து இழுத்தான் அதான் கோபத்தில் கதவு மூட இருந்த கட்டையை வைத்து அடித்தேன் 

அவனுக்கும் இப்போது என்ன செய்வது என்று தெரிய வில்லை. அவள் செய்தது சரியான காரியம் தான் ஆனால் அடுத்து  என்று  மட்டும் புரிய  வில்லை. அழாத கீர்த்தி நீ  செய்தது  தப்பு இல்லை  சரி பண்ணிவிடலாம்.

அவன் செத்து போய்ருவானா  மாமா என்னை ஜெயிலில் போட்டு விடுவாங்களா  உடனே நீங்க வேற கல்யாணம் செய்து கொள்ளுவீங்களா.

அவள் கேள்வியில் அவன் இறுக்கம் குறைந்தது. அப்படி நடந்தால் எனக்கு விடுதலை தானே  கீர்த்தி சிரித்து  கொண்டே கேட்டான்.

அவன் சிரிப்பில் அவளுக்கும் புன்னகை  வந்தது.

சரி நீ  என் இதை உங்க மேடம்  கிட்ட சொல்லவில்லை.

இல்லை மாமா இந்த விசயம்வெளியே தெரிந்தால் அவன் பதிப்பு கெடும்

அம்புட்டு நல்லவளா நீ

அது மட்டும் இல்லை சொன்னால்  என்னையும் ஏதாவது நினைப்பார்கள்.  சொல்லவும் ஒரு மாதிரி இருந்தது அதனால் தாந்.இது தெரிந்தால் யாராவது அவனுடன் என்னை சேர்த்து வைத்து பேசுவார்கள் விளையாட்டுக்கு கூட என் பெயர் உங்கள் பெயர் தவிர வேறு யாருடனும் சம்பந்த பாடுவதை நான் விரும்ப வில்லை.

அவள் காதலில் அவன் மனம் தடுமாற தான் செய்தது. அப்ப நீ அவனிடம் காதலிக்கிறேன் என்று சொன்னது என்னையா கீர்த்தி

அவனை முறைத்தாள் கீர்த்தி. பின் அச்சசோ  உங்களுக்கு தெரியாதா  மாமா. ஊரில் நம்ம வீட்டுக்கு பின்னாடி ஒருத்தன் இருந்தானே ஒல்லியாக  ஹாண்ட்சோமக. அவன் தான். உங்களுக்கு கூட தெரியுமே கிருஷ்ணன். அவன்  தான்

ஓ அப்படியா கீர்த்தி எனக்கு அவனை தெரியும். ஆனால் உன் காதல் அவன் மேல் இருந்தது தெரியாது. ஐயோ  பாவம் நீ

எதுக்கு மாமா

நேற்று சொல்ல மறந்து விட்டேன். நேற்று காலையில் தான் அந்த 85 வயது குமரன்  இறந்து விட்டானாம். உன் காதல் இப்படியா முடிய  வேண்டும். அவனை அவள் முறைத்து கொண்டு இருக்கும் போதே மணிமேகலை வந்தார்.

என்ன ஸர்  கேட்டீங்களா.

மேடம்  ப்லீஸ் அவன் தப்பா நடக்க  முயற்சி செய்ததால் இவள் அடித்திருக்கிறாள் அந்த நேரத்தில் யாராக  இருந்தாலும் இப்படி தானே செய்வார்கள். நீங்கள் இந்த விசயத்தை பெரிது படுத்த வேண்டாம்.விசயம் வெளியே தெரிந்தால் எங்களுக்கும் அவமானம் அந்த பையனுடைய  படிப்பும் பாதிக்க  படும்.

சரி நான் இன்னும் பிரின்ஸிபாலிடம்  சொல்ல வில்லை. ஆனால் அவர்கள் வீட்டில் புகார்  செய்தால்  பிரச்சனை  பெரிதாகுமே.

நாங்கள் இப்போதே அந்த பையனை பார்த்து பேசி விசயத்தை எங்களுக்குள்  முடித்து கொள்கிறோம். இனி அவன் இப்படி செய்யாதவாறு அவனை வார்ன்  பண்ணுங்க போதும்.

சரி அவனை மருத்துவமனையில் போய் பாருங்கள். கீர்த்தனா  இன்னொரு தடவை இப்படி செய்தால்  விளைவுகள் வேறு மாதிரி இருக்கும். இந்த முறை உன் மீது பிழை இல்லை தான். அதனால் விடுகிறேன்.ஆனால் வகுப்பு நடக்கும் போது சாப்பிடுவதை மட்டும் இனி செய்யாதே.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.