அதுக்காக அவங்க அமைதி என்று நினைக்காதே அவங்க ப்ரண்ட் கூட சேர்ந்து சரி சேட்டை பண்ணுவாங்க. ஆனால் நல்ல கமுக்கமா இருப்பாங்க. ஏன் காதல் என்று சொல்ல தெரியவில்லை டீ ஆனால் கார்த்தி இல்லாவிட்டால் இந்த கீர்த்தி இல்லை. எப்படி இருக்கு பாரு ரைமிஂக் இந்த பெயரை போய் பிடிக்கவில்லை என்று சொல்ற.
ஆனால் அவங்களுக்கு தான் என்னை பிடிக்காது.
நீயே உளராதே பிடிக்காமல் தான் உன்னை கிஸ் செஞ்சங்களோ
ஹா ஹா நீ வேற அது நான் உன்னை சும்மா வெறுப்பேத்த சொன்னது அப்படி ஒரு ஸீன் நடக்கவே இல்லை
அட பொய் கோழி.நான் உண்மை என்று நினைச்சேன் டீ சரி நான் வீட்டுக்கு கிளம்பவா மணி 6 மேல ஆகிறது
ஹே இரு டி எனக்கு ஏதாவது சமையல் சொல்லி தந்துட்டு போ. ரெண்டு பேரும் நைட் காஞ்சிப்போன ரொட்டி இல்லை தோசையா குடுத்து கொள்ளூராங்க நான் மிஸ்டர் வேதா விடம் சொல்லி கொள்கிறேன்
சரிங்க மேடம் நீயாச்சு அப்பாவா ஆச்சு. சரி வா சமைப்போம் என்று சில விசயங்களை சொல்லி குடுத்து கொண்டே சப்பாத்தியும் குருமாவும் செய்து முடித்தாள் அபர்ணா
மணி 7 ஆகியும் கார்த்திக் வந்திருக்க வில்லை. கீர்த்தி மணி 7 ஆகி விட்டது அம்மா கிட்ட 7 மணிக்கு கிளம்பி விடுவேனு சொன்ன தானே இதுக்கு மேல நேரமாக போனால் தேடுவாங்க போகட்டுமா.
சரி டீ அப்பு. தாங்க்ஸ் டீ என் மூட்டையை தூக்கிட்டு வர ஹெல்ப் செய்ததுக்கு அப்றம் இன்னைக்கு முக்கால்வாசி சமையல் நீ முடித்து விட்டு கால் வாசி சமையல் எனக்கு கற்று தந்தத்துக்கு. அன்ட்டி அங்கிள் ஐ கேட்டதாக சொல்லு .
சரி கீர்த்தி பை நாளைக்கு காலைல வீட்டுக்கு வா. அங்க இருந்து ஒண்ணா போய்ரலாம்.
சரி டீ . நீ இரு என்று அவளிடம் சொல்லி விட்டு வினோத்தை அழைத்து வினோத் அவ கூட கொஞ்சம் துணைக்கு போய்ட்டு வாயேன். தனியா போகணும் அவள். அன்னைக்காவது ஸ்கூட்டி ல வந்தாள் இன்னைக்கு நடந்து வேற போகணும் ப்லீஸ்.
பரவாஇல்லை கீர்த்தி நானே போய் விடுவேன் ரெண்டு தெரு தானே . ஆனால் அதற்குள் வெய்ட் பண்ண சொல்லு கீர்த்தி நான் ஷூ கழற்றி வைத்து விட்டு வருகிறேன் என்று சொல்லி சென்று விட்டான்.
கீர்த்தியிடம் விடை பெற்று வந்த இருவரும் அடுத்து ஒரு வார்த்தை பேச வில்லை. வார்த்தைகள் தேவையற்ற மௌனம் இருவரையும் அழகாய் சூழ்ந்திருந்தது.அதை கலைக்க இருவருக்குமே மனம் வர வில்லை.
முன்பு இருந்த அபர்ணா வாக இருந்தால் இந்நேரம் ஒரு சண்டையை கிளப்பி இருப்பாள். இப்போது அப்படி வாயாட முடிய வில்லை. ஒரே பார்வையில் பார்த்தே சாச்சுட்டான். இப்ப அமைதியின் சிகரமா வருகிறான் பாரு. பேசினால் முத்தா விழும்.
ஆனால் அபர்ணாவினால் அதற்கு மேல் அவனிடம் பேசாமல் போக முடியவில்லை. அன்னைக்கு போன் செய்தத்துக்கு ரொம்ப நன்றி. எனக்கு அதற்கு பின் தான் தூக்கமே வந்தது என்றாள் அபர்ணா
அவன் ம்ம் மட்டும் சொன்னான். பேசுறானா பாரு சரியான மடையன். அடுத்து அவளுக்கும் என்ன பேசுவது என்றே தெரிய வில்லை. அவள் தெரு வந்தவுடன் இவனை இனி எப்போது பார்க்க என்று யோசித்து கொண்டே சென்றவள் கால் இடறி விழ போகும் போது கீழே விழ விடாமல் அவள் கைகளை பற்றி கொண்டான் வினோத்.
முதல் தொடுகையில் முகம் சிலிர்த்து அவனை பார்த்தாள் அபர்ணா. அவள் கண்களில் சில நிமிடம் தன்னை தொலைத்தவன் அவளை விட்டு விலகி வீடு பக்கத்தில் வந்து விட்டோம் இனி நீ போய்விடுவாய் தானே இல்லை வீட்டில் வந்து சொல்லி விட்டுட்டு வரவா. இதுக்கு மேல தப்பா நினைப்பாங்க தானே
அந்த தொடுகையில் மனம் நிலைத்திருக்க அவனுக்கு தன் வீடு எப்படி தெரியும் என்பது கூட அவளுக்கு தோன்ற வில்லை
திடீரென்று சுதாரித்தவள் என்ன பாஸ் என்ன அடி வாங்க வைக்காமல் விட மாட்டீங்க போல
ஏன் நான் என்ன செய்தேன்
இப்படி இந்த இருட்டு நேரத்தில் ஒரு பையன் கூட தெருவுக்குள்ள வந்திருக்கேன். யாராவது ரெண்டு பேராவது பார்த்துருப்பாங்க. அவங்க சொல்லி எங்க வீட்டில என்னை பின்னி பெடல் எடுக்கவா. ஒழுங்கா வந்து வீட்டில் விட்டுவிட்டு போங்க.
எப்படி மிரட்டுகிறாள் பாரு சரி தான் நட மா போகலாம்.
ஹ்ம் அது. அப்படி வாங்க வழிக்கு.
ஐயோ பாவம் என்று துணைக்கு வந்தத்துக்கு உனக்கு இதும் வேணும் இன்னும் வேணும் டா வினோத் என்று தனக்குள்ளே சொல்லி கொண்டான்
அழைப்பு மணியை அழுத்தி விட்டு இருவரும் காத்திருந்தனர். கதவு திறக்க வில்லை. மறுபடியும் அழுத்தினாள் .
யாருமே வராததால் வீட்டில் யாரும் இல்லையா என்றான்.
அதெல்லாம் இருக்காங்க.