உங்க அப்பா கிட்ட இவ்வளவு பெரிய மீசை எப்படி வளர்ப்பது என்று கேட்டு சொல்வாயா என்றான்.
அதை கேட்டு அவனை முறைக்க மட்டும் செய்ய அவள் சாதாரண பெண்ணா கீர்த்தியின் தோழியாச்சே அவன் மண்டையில் நன்கு என்று கொட்டு வைத்தாள்.
ஆ என்று அலரியவனின் முகத்தின் அருகில் ஒரு விரலை மட்டும் நீட்டி மூச்சு கத்துன மூஞ்சிலே குத்திவிடுவேன் . ஒரு நிமிசம் எண்ணலாம் நினைசுட்டேன். மீசை வளரனுமாம். நான் கேட்டேனா மீசை வளர்கணும் என்று.
அவள் கொட்டியததில் எரிச்சலில் இருந்தவன் அவள் மிரட்டியதும் கண்களில் சுவாரசியம் வந்தது. சாமியாரா டா நீ. பக்கத்துல ஒரு சூப்பராண பொன்ன வைத்துகொண்டு அவன் அவன் எனனென்னமோ ஆராச்சி பண்ணுவான். நீ மீசை ஆராச்சி பண்ற. அதுவும் எங்க அப்பா வை வச்சு.
அவள் சொன்னதில் சிரித்தவன் சுப்பெரான பொண்ணு யாரு
ஓய் என்ன நக்கலா ஆனால் சிரிப்பு தான் வரவே இல்ல. நான் சூப்பராண பொண்ணு தான் எங்க இல்லை என்று சொல்லு பாப்போம். யாருக்கும் எப்படியோ ஆனால் உனக்கு நான் சூப்பர் தான்.
எப்படி இப்படி உறுதியாக சொல்ற. கண்ணாடியில் உன் முகத்தை பார்த்தது இல்லையா என்று நக்கலாக கேட்டான்.
அதை ஒரு சதவீதம் கூட கண்டு கொள்ளாதவளாய் அப்ப நல்லா இல்லாத என்னை எதுக்கு அன்று அப்படி பார்த்தாய். விழுங்கி விடுவதை போல்.
பதில் சொல்ல தெரியாமல் தடுமாறியவன் கோபத்தை கையில் எடுத்தான் ஏய் என்ன வா போ என்று பேசிட்டு இருக்க. மரியாதை அவசியம் மேடம் .
கொத்தாக அவன் சட்டையை பிடித்தவள் என்ன மிரட்ற இப்படி தான் கூப்பிடுவேன் உன்னால முடிஞ்சத்தை செஞ்சிக்கோ போடா என்றாள்.
ஏய் பெரிய ரவுடியா டீ நீ என்று கேட்டாலும் அவன் மனம் ஆனந்ததில் இருந்தது.
ஆமா ரௌடீ தான் என்கிட்ட இனி வசிக்கிட்டா பாத்துக்கோ
என்ன பன்னுவ அடிச்சிறுவியோ
ஆமா டா அடிப்பேன்
அது வரைக்கும் என் கை சும்மா இருக்குமோ. திருப்பி அடிப்பேன்
அடி டா அடி டா பாக்கலாம்.
தன் சட்டையை பற்றியிருந்த அவள் கைகளை மெதுவாக எடுத்து கீழே விட்டவன் அடிச்சிறுவானோ ஓவரா பேசிவிட்டோம் போலவே என்று பயந்து கொண்டிருந்தவளை தன்னை நோக்கி இழுத்து அனைத்து பேசிய இதழ்களை அவன் இதழ்களால் சிறை பிடித்தான். சுற்றி இருந்த இருள் அவனுக்கு உதவியாக இருந்தது.
மெதுவாக விலகியவன் கண்களை மூடி இருந்த அவளை மென் சிரிப்புடன் பார்த்தான். எதிர்பாராமல் நடந்ததால் அவள் உடல் நடுங்கி கொண்டு இருந்தது.
எப்படி அடித்தேன் பார்த்தாயா. இன்னும் அந்த கீர்த்தி ரௌடீ கூட சேர்ந்து ரௌடீ தனம் செய்தால் இப்படி தான் அடிப்பேன் என்றவனை கண்களை திறந்து பார்த்தாள்.
அவனை பார்க்க முடியாமல் தலை குனிந்தவளை பார்த்தவன் ஸாரீ டா வேணும் என்று செய்யலை என்றான். உன்னிடம் சில விசயம் பேசிய பின் தான் இதெல்லாம் என்று நினைத்தேன் ஆனால் என்னையே அறியாமல் நடந்து விட்டது. தூங்கும் முன் எனக்கு போன் செய்வாயா
ம்ம்ம் என்று தலை அசைத்தாள்.
உனக்கு என்னை பிடித்திருக்கா என்று கேட்டான்.
அவனை பார்த்து முறைத்தவள் கேக்குற கேள்வியை பாரு உனக்கு தெரியாதா அது தெரியாமல் தான் என்னை என்னை...
உன்னை உன்னை என்ன செய்தேன் சொல்லு பார்ப்போம்
போ வினோ
ஹே அப்பு குட்டி செல்ல பெயர் வச்சி கூப்பிடுற . எனக்கும் உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. முதல் முறை பார்த்த அப்பவே எனக்கு தேவதையாக தான் தெரிந்தாய். ஆனால் இந்த கண்ணாடி மட்டும் பிடிக்க வில்லை. அன்றும் பிடிக்க வில்லை இன்னைக்கும் பாதியிலே பழி வாங்கிட்டு
என்ன பழி வாங்கியது
அது மட்டும் இடிக்காமல் இருந்திருந்தால் கதைகளில் வருவது போல நீண்ட மூதாத்தை பரிசளிததான் என்று இருக்குமே அது போல இருந்திருக்கும். இடித்ததால் பாதியில் விலக வேண்டியதாக போயிற்று.
அவன் சொன்னதை கேட்டு நறுக்கென்று கிள்ளினாள் இரண்டு நிமிடம் கொஞ்சி விட்டு மறக்காமல் போணில் அழைக்க சொல்லி விட்டு மறுபடியும் முத்தததை ஞாபக படுத்தி விட்டு அவளை சிவக்க வைத்து விட்டு விடை பெற்றான் வினோத்.
மனம் சந்தோசத்தில் மிதந்தாலும் ஏதோ ஒரு பயம் அவனை இம்சித்தது. யோசனையிலே வீட்டுக்கு வந்தவன் காத்து கொண்டிருந்த கீர்த்தியை பார்த்தான். மனத்தை கொஞ்சம் சமன் செய்தவன் என்ன கீர்த்தி மேடம் உங்க மாமாக்கு காத்திருக்கீங்களோ