(Reading time: 22 - 43 minutes)

அப்ப  ஏன்  திறக்க வர வில்லை.

ரெண்டு பேரும்  போட்டி போட்டு ஒரு வாக்குவாதம் நடத்தி விட்டு வந்து தானே திறக்க முடியும். இது எங்கள் வீட்டில் பழகி போன ஒன்று. நான்  வெளியே தானே இருக்கிறேன் அதனால் கொஞ்சம் சீக்கிரம் வந்து திறந்திருவாங்க . நானும் உள்ளே இருந்தால் மூணு பெரும் சண்டை போட்டு முடிக்க இன்னும் நேரம் ஆகும்

இப்ப தெரியுது கீர்த்தி வாலு  கூட நீ எப்படி ப்ரண்டா  இருக்க என்று. வானரம் வானரம் கூட தானே  சேரும்.

கதவு திறந்த அன்னையிடம் கீர்த்தி அண்ணன் என்றே அறிமுக படுத்தினாள்  தந்தையிடமும் அதையே சொன்னாள்

கீர்த்தி தான் மா துணைக்கு அனுப்பி வைத்தாள்.அம்மா ஏதாவது சாப்பிட குடு  நான் பேக்கை  ரூமில் வைத்து விட்டு வருகிறேன்

உக்காருங்க ஸர் . அப்பா இது கீர்த்தி அண்ணன் அன்று சொன்னேன்ல அவங்க தான்.  அவரிடம் சொன்னவள் அவன் காதில் விழுமாறு எங்க அப்பா கேள்வி கேட்டே சாகடிப்பாரு. உங்களுக்கு ஸ்கூல் படிக்கும் போது உள்ள பீளிங்  வரும் கண்டுக்காதீங்க என்று சொல்லி விட்டு மேலே சென்றாள்.

அப்பு அப்பாவிடம் பேசிக்கொண்டு இருங்கள் நான் சாப்பிட ஏதாவது எடுத்து கொண்டு வருகிறேன் என்று சொல்லி  விட்டு சென்று விட்டார் சிவகாமி

உக்காருங்க தம்பி என்றார் வேதாசலம் அபர்ணாவின்  அப்பா. ரொம்ப நன்றி தம்பி துணைக்கு வந்தத்துக்கு ஒரு காஃபீ சாப்பிடுங்கள். நான் வரவா என்று கேட்டால் நானே வந்து விடுவேனு சொல்லிட்டாள்

பரவா  இல்லை அங்கிள்  நான் கிளம்புறேன் வீட்டிலே காஃபீ  குடித்து  விட்டு தான் வந்தேன்.

அதற்கு என்ன தம்பி அப்ப  சாப்பிட்டு விட்டே செல்லலாம்  என்றார்.

தெரியாதவர்கள் வீடு அதனால்  சாதாரணமாக இருக்க முடியாமல் தடுமாறினான். அதுவும் அவரின் மீசையை பார்த்து அரன்டே  விட்டான். பேச்சுக்கு கூட மீசை இல்லாத  தன்  உதட்டு  மேலே தடவி கொண்டு அமர்ந்தான்.

பயந்து கொண்டு அமரந்தவன் அவருடைய பேச்சில் சாதாரணமாக  ஆகி விட்டான். ஆனால் அவரின் பார்வை இவனை கூர்மையுடன்  அளவிட்டதையும்  கண்டு கொண்டான்

அவனுடைய  ஜாதகத்தையே வாங்கி விட்டு தான் அவனை விட்டார். அதுவும் அபர்ணா மேலே இருந்து வந்ததால்.

மூவரையும் சாப்பிட அழைத்தார் சிவகாமி. எத்தனை  தடவையோ மறுத்து  பார்த்து விட்டான் அவர்கள் விட வில்லை. சாப்பிட அமர்ந்ததும்  மகளை பார்த்தார் வேதாசலம். அவள் பார்வை நொடிக்கோரு தரம் அவனை வருடுவதை பார்த்தவர் மனம் யோசனையில் ஆழ்ந்தது. ஆனால் அவனை பார்த்தால் அவன் ஒரு நொடி கூட அவளை பார்க்க வில்லை அதுவே அவன் மேல் ஒரு நல்ல அபிப்ராயத்தை விதைத்தது அவருக்கு.

சாப்பிட்டு விட்டு அவன் அவள்  பெற்றவர்களிடம் விடை பெற்றான்.

அம்மா அப்பா வந்தால் வீட்டுக்கு அழைத்துகொண்டு  வாங்க தம்பி பிறகு கீர்த்தி டார்லிங்க  கேட்டதாக  சொல்லுங்க என்று விடை கொடுத்தார் வேதாசலம்.

வாசல் வரைக்கும் போய் விட்டுட்டு வறேன் பா என்று சொல்லி கூடவே வந்தாள்.

கேட்  அருகே வந்த பின்னும் அவன் அவளை பார்க்க வில்லை.

என் மேல உங்களுக்கு ஏதாவது கோபமா

என்ன வென்று அவளை பார்த்தான்

என் முகத்தை கூட பார்க்கவே இல்லை அன்னைக்கு நான் சண்ட  போடுகிற மாதிரி பேசியது தப்பு தான் ஆனால் அதற்க்கு  இத்தனை கோபமா

சே அப்படி எல்லாம் கோபம் இல்லையே

நம்பிவிட்டேன் என்ற போது அவள் குரல் உள்ளே சென்று விட்டது.

சரி நான் கிளம்புறேன்

ஹ்ம்ம்ம்

அவன் சென்றதும் ஏதோ தனிமையாக உணர்ந்தாள்  அபர்ணா

அவளை விட்டு ரெண்டு அடி எடுத்து வைத்தவன் அவள் முகத்தில் இருந்த கலக்கத்தில் உருகி போனான். ஏனோ அவளை கடந்து செல்லவே பிடிக்க வில்லை அவனுக்கு. அவளும் அவனையே தான் பார்த்து கொண்டிருந்தாள் . அடுத்த நொடி அவளை நெருங்கியவன்  உன்கிட்ட ஒண்ணு கேட்கவேண்டுமே  என்றான் ஏதோ ரகசியம் போல்.

உள்ளம் பட  பட என்று அடித்தது  அபர்ணாவுக்கு . என்ன என்றாள் சத்தமே வராத குரலில்

நீ  நீ  ஒரு உதவி செய்யணும்.

என்ன உதவி சொல்லுங்க.

கீர்த்தி முன்பு ஒரு தடவை உன் பொண்டாட்டி கையால் உனக்கு பூரி கட்டையால் அடி வாங்கி தருவேன் என்று. அதுக்கு ஏற்ற மாதிரி ஒரு கேள்வியை கேட்டு அடியை  ரிஸர்வ் செய்தான்.

ஆசையோடு அவனை பார்த்து கொண்டிருந்தவளை நெருங்கி சுற்றி முற்றி பார்த்து அவளுக்கு ரத்த  அழுததத்தை எகிர  செய்தான். முத்தம் கித்தம்    குடுத்துருவானோ மனதுக்குள் பயந்தாள்  அபர்ணா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.