(Reading time: 9 - 17 minutes)

“அதுலாம் வேணாம் காவி..”என்று விஷ்வாக் கூற,

கோபம் அடைந்தக் காவ்யா அவனை திட்டிதீர்க்க ஒரு வழியாக விஷ்வா அவள் சொன்ன திட்டத்திற்கு ஒத்துக்கொண்டான்.

விதி காவ்யாவின் மூலம் கவியின்  வாழ்க்கையில்  விளையாட ஆரம்பித்தது.கவியின்  வாழ்கையில் பயத்தை மட்டும் இல்லாமல் இன்னும் பல விஷயங்களை தனது செயலால் கற்று தரப்போகிறோம் என்று தெரியாமல் அந்த வீட்டை நோக்கி சென்றால் காவ்யா, விஷ்வாவின் துணையோடு.....

நாராயணன் தாத்தாவின் அந்த வீடு மிக பெரியதாக இருந்தது.அது ஒரு அரண்மனை என்றே சொல்லலாம்.பழையபாணியில் இருந்த அந்த வீடு கவிக்கு மிகவும் பிடித்துவிட்டது.அந்த வீட்டினுடன் கூடிய நூலகம் அதுவும் அழகாக இருந்தது.அந்த வீட்டை பாராமரிப்பவர்கள் அவ்வளவு அழகாக பராமரித்து இருந்தனர்.

அந்த வீட்டின் அழகில் தன்னையே தொலைத்திருந்தால் கவி.அந்த நூலகத்தில் அமர்ந்தவள் அவளது தாத்தா அவளிடம் வரும் வரை இந்த உலகத்தையே மறந்து அங்கு இருந்த புத்தகத்தில் தன்னை தொலைத்துவிட்டாள்.தனது வாழ்கையின் போக்கே மாறபோவது தெரியாமால்,நாவலின் போக்கில் தன்னை தொலைத்துவிட்டிருந்தாள்...........

தொடரும்

Episode # 10

Episode # 12

{kunena_discuss:1099}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.