(Reading time: 19 - 37 minutes)

20. பெண்ணே என்மேல் பிழை!!! - தீபாஸ்

pemp

ன்று மஹிந்தனின் வீடு பார்பதற்கு சொர்கலோகம் போல் இருந்தது.  இன்னும் கொஞ்ச நேரத்தில் விழாவிற்கு ஆட்கள் வரத் துவங்கிவிடுவார்கள் கவிழையாவின் அறையில் ழையாவின் கண்கள் வாசலில் தன்னையும் அறியாமல் மஹிந்தனை தேடி அழைந்தது .

ஏனோ இரண்டு நாட்களுக்கு முன் மஹிந்தனுடனான  பேச்சுக்கு  பின் வீம்பாக அவனின் மேல் தனது கோபத்தை பிடித்து வைத்துக்கொண்டு இருக்க அவளால் இயலவில்லை

ஆனால் இந்த இரு நாட்களும் அவள் அவனை தேடினாலும் அவனை பார்க்கத்தான் அவளால் முடியவில்லை இரவு நேரம் கழித்து தூங்குவதற்கு மட்டுமே அவன் அவர்களின் அறைக்கு வந்தான் பகலில் அவனை கண்களால் காண முடியவில்லை. இன்று தான் இவ்வளவு அழங்காரத்தில் இருக்கும் போது  அவனின் பாராடுதலான ரசனையான பார்வைக்கு அவள் மனது ஏங்கியது.

இன்று விடியற்காலையிலேயே அவளின் அம்மா பார்வதியும் அப்பா ஈஸ்வரனும் தம்பி வருணும் அங்கு வந்து விட்டார்கள். உள்ளிருந்து வந்த பார்வதி கவி எதுக்கு வாசலில் நிண்று கொண்டு இருக்கிராய் உனக்கு மேக்கப் போட்டுவிட்ட பெண் வேர்க்காமல் இருக்கனும் என்றாள். நீ சும்மா சும்மா அழைந்து கொண்டே இருந்தால் வேர்த்துவிடும் வா.. இப்படி உட்கார் என்றாள் .

அம்மா நீங்க வந்தபோது அவர பார்த்தீங்களா? கீழ தானே இருக்கார் என்று கேட்டாள் .

மாப்பிள்ளை கீழேதான் இருக்கார் . பியுட்டிசியன்  இருக்கும் போது கதவை தட்டியது அவர் தான். .நீ  ரெடியாகிக்கிட்டு இருக்கேன்னு சொன்னதும் பிறகு  வருகிறேனு சொல்லிட்டார். இப்ப எதுக்கு அவரை தேடுற என்று கேட்டார் .

பார்வதி கேட்டுக் கொண்டிருக்கும் போதே அங்கு பிரசன்னமான மஹிந்தனின் காதுகளில் பார்வதி கூறிய எதுக்கு அவரை தேடுற என்ற வார்த்தையை கேட்டதும் பார்வதி இருப்பதையும் பொருட்படுத்தாமல் எதுக்கு பேபி என்னை தேடின கேட்டபடி அவளின் அருகில் வந்தவன்  மேலும் மெருகேறி தெரிந்த அவளின் அழகை கண்களில் மயக்கத்துடன் ரசித்தபடி அவளின் அருகில் அமர்ந்தான்.

மஹிந்தனின் குரல் கேட்டதும் முகம் பூவாய் மலர அவனை ஏறிட்டு ழையா பார்த்தாள் .பார்வதி வேகமாக எழுந்து கவி நீ காலை எழுந்ததில் இருந்து எதுவும் சாப்பிடவில்லைல மாப்பிள்ளைக்கும் உனக்கும்  கிச்சனில் இருக்கும் வேலையாளிடம் சாப்பாட்டை இங்கேயே கொண்டு வரச்சொல்லிவிட்டு , கீழே நம் வீட்டு சார்பாக வந்தவர்களை பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு கீழே போகப்பார்த்தாள்..

அத்தை அப்படியே எனக்கு கிரீன் டீயும் கொண்டு வரச் சொல்லுங்கள் என்றான். சரி என்னும் விதமாக தலையசைத்தவள் சென்றுவிட்டாள்

அவர் சென்றதும், திரும்பவும் எதற்கு என்ன தேடின பேபி என்று கேட்டான் .அவனின் பார்வையை சந்திக்க முடியாமல் கூச்சத்துடன் தலையைக்  குனிந்தபடி இல்ல.... ரெண்டுநாளா உங்களை பார்க்கவே முடியலையா அதனாலத்தான் கேட்டேன் என்றாள்

அப்போ ரெண்டு நாளா என்ன பார்க்கணுமுன்னு தேடியிருக்க அப்படித்தானே என்று முகத்தில் படர்ந்த சிரிப்புடன்  உல்லாசக்குரலில் கேட்டான் .

“அய்யாவுக்கு நெனப்புத்தான் ,நான் ஒண்ணும் உங்களைத் தேடலேயே சும்மா ஆளக் காணலையே என்று  கேட்டா இவரத்தேடுனாங்கலாம்” என்று அவள் குழைவாகக் கூறியதில் இருந்தே அவள் அவனை தேடினால் என்ற உண்மை அவனுக்கு தெளிவாகத் தெரிந்தது .

அவளில் சினுக்கமான இப்பேச்சு அவனுக்கு சிலிர்ப்பை தந்தது. இவளுக்கு இப்படிக்கூட பேசத்தெரியுமா? என்று ஆசையுடன் அவள் முகம் பார்த்தான் .          அவன் அவளிடம்  இத்தனை நாள் தேடிய தேடலுக்கு இன்று பதில் கிடைத்துவிடுமோ என்ற ஆசையில் அவள் கண் பார்க்க அவன் முயன்றான் .

ஆனால் அருகில் இருந்தும் அவள் முகம் பார்த்து பேசாமல் நிலம் பார்த்தபடி இம்சை செய்தாள்

ஏய்... ழையா! என்னை பார்த்துப் பேசு என்று அதிகாரமாய் பேச நினைத்தவன்  குரலில் ஏனோ அத்தனை மென்னை இருந்தது .

இத்தனை நாள் அவனை எதிர்கொள்ளும் போது அவளின் பாஸ் அவன் என்ற நினைப்பிலும் ,பணத்திமிர் பிடித்த தான் நினைத்ததை சாதிக்கும் அடாவடிக்காரன் என்றும் அவனை எதிர்ப்பது ஒன்றே குறிக்கோளாய் இருந்தவளாள் தைரியமாக அவனை எதிர்கொள்ள முடிந்தது

ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் இருவருக்கும் இடையில் நடந்த ஊடல் காரணமாக அவளிடம் அவன் வெளிப்படுத்திய அதிரடியான் காதல் வார்த்தைகள் அவளை அவனின்பால் மொத்தமாக சாய்த்தது. ஏனோ தன்னை நிர்பந்தத்தால் அவனிடத்தில் அவன் கொண்டு வந்திருந்தாலும் இப்பொழுது அடம் மிகுந்த தனது கைப்பொருளை காப்பாற்றத்துடிக்கும் பிடிவாதக் குழந்தை மஹிந்தன் என்றே அவளுக்கு எண்ணம் ஏற்பட்டது .

அவன் காதலை தான் உணர்ந்த இந்த இரண்டு நாளிலேயே அவனின் முகம் பாராது தவித்த தன் மனதை கொண்டே அவளும் அவனின் பால் காதலில் விழுந்து விட்டோம்  என்பதை உணர்ந்தாள்

உணர்ந்தபின் அவனின் அருகாமைக்கும் அவனின் பார்வைக்கும் அவனின் தொடுகைக்கும் அவள் உள்ளம் ஏங்க ஆரம்பித்தது .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.