(Reading time: 19 - 37 minutes)

மேடையில் வனிதாவுடன் பேசும்போது அவளை சாப்பிட கூப்பிட்டுப் போகச் சொல்ல கதிரை கண்களால் தேடினான். .அப்பொழுது கதிர் வனித்தாவை சுவாரஸ்யத்துடன் பார்த்துக்கொண்டு இருந்த பார்வையும் வனித்தா இவர்களுடன் பேசிக்கொண்டிருந்தாலும் அடிக்கடி பார்வையால் அவனை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்ததும் ஆச்சரியமாகிப் போனான் மஹிந்தன்

ஏனெனில், கதிரின் பார்வை பெண்களின் மேல் திரும்பி இது வரை அவன் பார்த்தது இல்லை. ஏனோ அவனின் பார்வை முதலில் தான் ழையாவை பார்வையிட்டத்து நினைவுபடுத்தியது .

கையசைத்து கதிரை அழைத்தான் மஹிந்தன். அருகில் வந்தவனிடம் ழையா வனிதாவிடம் பேச்சில் ஐக்கியமாகிய நிமிடங்களை பயன்படுத்தி  கதிருக்கு மட்டும் கேட்குமாறு , என்னடா! ழையாவின் பிரண்டை இந்த பார்வை பாக்குற, என்ன நீயும் கவுந்துட்டயா  என்று கேட்டான்.

அவன் அவ்வாறு கேட்டதும் இல்ல பாஸ் அது தான் உள்ள வந்தததில் இருந்து என்னை முறைச்சு.. முறைச்சு  பாக்குது! அதுதான் தனியாமாட்டுச்சுன்னா ஒரு வெரட்டு வெரட்டலாம்னு பாக்குறேன், என்றவனின் பார்வை மட்டும் அவளிடமே இருந்தது.

அவன் கூறியதை யோசனையுடன் பார்த்த மஹிந்தன் ம்......கூம் ,அந்த தப்பை  மட்டும் செய்திடாத கதிர். அப்படி செய்தால் பின்னாடி என்னை போல் நீயும் உன் மனம் விரும்பும் பெண்ணின் வெறுப்புக்கு ஆளாக வேண்டிவரும் நிதானமா யோசி... என்றவன் இப்போ அவங்களை சாப்பிட கூப்பிடுப் போ என்றான்.

ரிசப்ஷன் முடிய இரவு நேரம் ஆனதால் ழையாவின் அம்மா அப்பா மற்றும் வருணை மஹிந்தன் கீழே இருந்த அறைகளில் தங்குமாறு கூறியிருந்தான் முக்கியமான் விருந்தாளிகளை விடை கொடுத்து அனுப்பிவைக்கும் போது ழையாவையும் தன்னுடனே கை பிடித்தவாறு அங்கு மிங்கும் சென்று கொண்டிருந்தான் மஹிந்தன் .

ழையா நேரம் ஆனதால் மிகவும் களைத்து போய்விட்டாள். அவளின் முகம் பார்த்து, பேபி!.. என்ன ரொம்ப டையர்ட் ஆகிடுச்சா நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு, என்றவன் அவளை தங்கள் அறைக்கு கூட்டிவநது தன்னுடன் சேர்த்து அணைத்தவாறு அவன் மார்பில் சரண் புகுந்திருந்தவளின் நாடியை ஓர் கையால் நிமிர்த்தி அவளின் கண்ணோடு தன் கண்ணை உறவாடவிட்டான்.

அதில் தான் தேடும் காதல் கசிந்ததால் அவன் மனது அமைதியடைந்தது. அவன் தொழிலில் பெற்ற வெற்றிக்குக் கூட இந்தஅளவு  அவனுக்கு சந்தோசத்தை தந்ததில்லை. தான் தேடிய காதலை அவள் கண்களில் கண்டவன் தேங்க்ஸ் பேபி.... என்று கரகரப்பான குரலில் கூறியவன் அவளின் இதழில் இதழ் பொருத்தினான்.

அவன் கைகளில் அவளின்  எதிர்ப்பில்லாத சரணாகதியில் சொர்க்கலோகம் கை சேர்ந்த மிதப்பு ஏற்பட்டது. பூலோகம் இறங்க மனமில்லாமல் பறந்தவன்  திடீரெண்டு ஏதோ நினைத்தவனாக அவளிடம் இருந்து சடனாக விலகினான். தன்னை நிலைபடுத்திக்கொண்டவன் பின் ழையாவிடம் ஸ்வீட்டி கீழே உள்ளவர்களை அனுப்பிவச்சுட்டு வருகிறேன்,  என்றவன்  கீழே சென்றான்.

அவன் கீழே சென்றதும் அவளின் உடைகள் அடங்கிய பேக்கை நேற்று இரவு அங்கு கொண்டு வந்து வைத்திருந்ததை இன்னும் அவள் அலமாரியில் அடுக்கவில்லை. இன்னும் ஓர் நாள் கழித்து திரும்பவும் தன்னை முதல்முதலாக அவன் கூட்டிச்சென்ற அவளுடன் அவன்  வாழ்ந்த அந்த வீட்டிற்குத்தானே செல்லப் போகிறோம் திரும்ப கொண்டுபோகவேண்டிய உடையை எதற்கு அடுக்குவானேன் என்ற நினைவில் பேக்குடன் அலமாரியில் வைத்துவிட்டதை வேகமாக எடுத்து  மஹிந்தன் தனக்கு முதல் முதலாக வாங்கிய உடை அதில் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தாள். அதில் கீழே ஓர் கவரில் அந்த உடையும் அதற்கு பொருத்தமாக அன்று அணிந்த நகையும் இருந்தது அதை பார்த்து மனதிற்குல் சிரித்தவள் கள்ளன் என்று செல்லமாக அவனை திட்டிவிட்டு உடுத்துவதற்காக எடுத்தாள்

மஹிந்தன் ஒருமணி நேரம் கழித்து தனது அறைக்கு வந்தவன் ழையா உடுத்தியிருந்த உடை கண்ணில் பட்டவுடன் தன்னவளின் சரணம் முழுமையானது என்று தெரிந்து மகிழ்ச்சி ஊற்றெடுத்தது.

அவன் அன்று சொன்ன இனி எப்பொழுது இந்த உடை உடுத்தி சம்மதத்தை எனக்குச் சொல்கிறாயோ அதன் பிறகுதான் உன்னைத் தொடுவேன் என்று கூறியதை நினைவில் வைத்து தன் சம்மதத்தை கொடுத்தவளை ஆசையுடன் நெருங்கினான்.

அவள் அவனின் அணைப்பில்  இசைந்து நின்று அவனின் பைத்தியத்திற்கு தன்னை வைத்தியமாக கொடுக்க சித்தமானாள். அங்கே இனிய தாம்பத்யம் ஒன்று ஆரம்பமானது . 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.