(Reading time: 10 - 20 minutes)

மேடம் நீங்க தப்பா நினைக்கறீங்க, சினிமா நீங்க நினைக்கிறாமாதிரி தப்பான தொழில் இல்லை, இதோ அட்வான்ஸா இப்பவே 5லட்சம் தர்றேன். அப்புறம் நீங்க எவ்வளவு கேட்டாலும் தர்றோம். இல்லை தயாரிப்பாளர் கிட்டே சொல்லி பிளாங் செக் வாங்கித்தர்றேன்.

பணம் தந்திட்டா ஒத்துக்கொள்வேனா ? என்ன திமிர் ஸார் உங்களுக்கு ? நீங்க கூப்பிட்டதும் ஓடி வந்து நடிக்க நீங்கயென்ன மணிரத்னமா ? இல்லை சங்கரா ? பெயர் தெரியாத ஒரு உப்புமா கம்பெனியை வைச்சிகிட்டு என்னை விலை பேசறீங்களா ?இனியொரு முறை என்னைத் தொல்லை செய்தீர்களானால் பேசிக் கொண்டு இருக்கமாட்டேன். நேரா போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்திடுவேன்.

அதுவரையில் அமைதியாய் இருந்த கவினுக்குத் தன்னையும் தன் தொழிலையும் மட்டம் தட்டி பேசியதும், அடங்கமாட்டாமல் கோபம் வந்தது? அவனும் சற்று காட்டமாகவே பேசினான், பார்க்க நல்லாயிருந்தா நாலு பேர் கேக்கத்தான் செய்வான். நான் உன்னை நல்ல முறையில்தானே அப்ரோச் பண்ணினேன், அதற்கு இத்தனை அவமானப்படுத்திறியே, ஒரு பொண்ணுக்கு இத்தனை ஆணவம் இருக்கக் கூடாது ? ஒரு ஆம்பிளைன்னு கூட பார்க்காம பேசறியா, பணமும் , இந்த அழகும் தானே இப்படிப் பேச சொல்லுது உன்னை, இனிமே நீ எப்படி நடனம் ஆடுறேன்னு நானும் பார்த்திடறேன்.என்று கருவிவிட்டு வந்தவன்தான். ஆனால் அப்படி உண்மையிலேயே மாயாவிற்கு அதன்பிறகு அவன் எந்தத் தொந்தரவும் தரவில்லை,

கோபம் இருந்ததென்னவோ உண்மையாகிலும், தொழிலில் சாதிக்காமல் இந்த பழியுணர்ச்சி இதெல்லாம் தேவையில்லை என்று துடைத்தெறிந்து விட்டான். அதன்பிறகு சென்ற வாரத்தில் மாயா தற்கொலை செய்து கொண்டாள் என்று செய்தியைப் படித்தபோது, இவளின் திமிருக்கு இந்தத் தண்டனை தேவைதான் என்று நினைத்த மறுவிநாடியே நல்ல நடனத்திறமை உள்ளவள் என்று வருத்தமும் கொண்டான். அதோடு அதை மறந்தும் போனான். இப்படி எங்கோ சந்தேகம் முளைத்து அவன் வரையில் வருவார்கள் என்று கவின் நினைக்கவில்லை,

தொடரும்

Epsiode # 04

Epsiode # 06

{kunena_discuss:1142}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.