24. நீதான் என் சந்தோசம் - ராசு
தன் மனம் புரிந்துவிட்ட பிறகு மனுதர்மனைக் காண வேண்டும் என்ற தவிப்பு நேசமலருக்கு அதிகமானது.
அவன் எப்போது வருவான் என்று எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.
ஏனோ அவனிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை.
தோட்டத்தில் போய் அமர்ந்தாள். அந்த தனிமை அவளுக்குப் பிடித்திருந்தது. கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
அவளது தங்கை வண்ணமலர் சொன்னது போல் தங்கள் அன்னைதான் தன் வயிற்றில் கருவாய் இருக்கிறாள் என்று நினைக்கும் போதே தாய் தங்களை விட்டு எங்கும் செல்லவில்லை எ
...
This story is now available on Chillzee KiMo.
...
கவே இல்லையே. இப்ப என்னாச்சு?”
தலையில் அடித்துக்கொண்டாள்.
“என்னாச்சு சொல்லுங்க?”
பதற்றத்துடன் அவளை உலுக்கினாள்.
“இன்னும் என்ன ஆகனும்? அவனோட நிம்மதியைதான் நீ குழி தோண்டி புதைச்சிட்டியே! என்ன நினைச்சுக்கிட்டு காரை ஓட்டினானோ? இப்ப என் பிள்ளையே இல்லைன்னு ஆயிட்டானே?”