மனுதர்மனுக்கு பதினாறாம் நாள் காரியம் செய்ய ஏற்பாடானது. நேசமலர் இன்னமும் தன் கணவனின் மறைவை ஏற்றுக்கொள்ளவில்லை. அவளது உள்ளுணர்வு அவன் உயிரோடிருக்கிறான் என்றது.
அதனால் அவள் எந்த சடங்கையும் தனக்கு நடத்த விடவில்லை.
தனது சுமங்கலி கோலம்தான் கணவனின் உயிரை மீட்டுத்தரும் என்று எண்ணினாள்.
“உன் புருசன் இறந்துவிட்டான்.” என்று சொன்னவர்களிடம் எல்லாம்
“அவரோட உடம்பை யாராவது பார்த்தீங்களா? அதை நேரில் பார்க்கிற வரைக்கும் நான் நம்ப மாட்டேன். என் புருசன் உயிரோடதான் இருக்கார். கண்டிப்பா அவர் வருவார்.”
“அவன் உயிரோட இருந்தா இந்நேரம் வந்திருக்கனுமே.”
“வருவார்.” என்று ஆணித்தரமாக சொன்னாள்.
“அவளுக்கு புருசன் செத்தும் பூவையும் பொட்டையும் இழக்க மனம் வரவில்லை. அதான் இப்படி எல்லாம் பேசி பூசி
...
This story is now available on Chillzee KiMo.
...
ொறுக்கவில்லை.
அவளுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டினர்.
“அத்தை! இவ பொட்டையும் பூவையும் இழக்கிறதுக்கு யோசிச்சுக்கிட்டுதான் என்னென்னமோ சொல்லிக்கிட்டு திரியறா? பெரிய மச்சானும் கொஞ்சம் கூட யோசிக்காம அவ மேல பங்குகளை எழுதி வச்சிட்டாரு.”
“அதுக்கு இப்ப என்ன செய்யறது மாப்பிள்ளே?”