“பேசாம அவளை நம்ம வினோவுக்கே கட்டி வச்சிருங்க. அவ தன் புருசனை விட அவன்கிட்ட நல்லவிதமாதான் இதுவரைக்கும் பழகியிருக்கா. அவனுக்கும் அவளைப்பிடிச்சிருக்கு. அண்ணனோட சாவுக்கு அவதான் காரணம்னு தெரிஞ்சும் இன்னும் பாசமா இருக்கானே. பேசாம அந்தக் கழுதையை அவனுக்கு கட்டி வச்சாதான் நம்ம சொத்து நம்மைவிட்டு எங்கேயும் போகாது. இல்லைன்னா இந்த திமிரெடுத்தவ கொஞ்ச நாளில் வெளியே போய் யாரையாவது கட்டிக்கிட்டான்னா நம்ம சொத்து நம்மளை விட்டுப் போயிடும்.”
“ஐயய்யோ! அப்படி எல்லாம் போயிடக்கூடாது மாப்பிள்ளே. அவங்களை எப்படி சம்மதிக்க வைக்கிறது?”
“அவளை சம்மதிக்க வைக்கிறது ஒன்னும் கஷ்டமில்லை. என்ன இப்ப நமக்காக வேசம் போட்டுக்கிட்டிருக்கா. நாமளே சொன்ன பிறகு ஒத்துக்கிடுவா. அவன்தான் கொஞ்சம் மறுப்பான். விதவைக்கு மறுவாழ்வு கொடுக்கிறதுன்னு ஏதாவது
...
This story is now available on Chillzee KiMo.
...
p>அங்கே வினோதகன் இருந்தான்.
“அண்ணி! வண்டியில் ஏறுங்க.”
கண்ணீ மல்க அவன் சொன்னதை செய்தாள்.
அவளது பொருட்களை எடுத்து கொடிமலர் கொடுக்க வாங்கி வைத்துக்கொண்டான்.
வெறுப்பை உமிழும் பார்வை ஒன்றை வண்ணமலர் மேல் செலுத்தியவன் நேரே பேருந்து நிறுத்தத்திற்கு அழைத்துச் சென்றான்.