(Reading time: 20 - 39 minutes)

அவள் அவ்வாறு கூறவும் அந்த ரமேஷ் ஆகப் பட்டவன் அவளை நோக்கி அசட்டுச் சிரிப்பை உதிர்த்தவன் சுமதியிடம், பிரன்ட் என்றால் உங்களை மாதிரி இருக்கனும் சுமதி, என்று மேலும் ஏதோ சொல்லப் போகையில் இடையில் புகுந்த அழகுநிலா அவர்களுக்கு ரிசர்வ் செய்திருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டே,

ரமேஷ்! நீங்க சுமதி சொல்வதையெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க. அவள் லூசு என்பதை அப்பப்ப இப்படி பேசி புரூவ் பண்ணுவா, எனகுத்தெரியாதா? நீங்க என்னை உங்க உடன் பிறவா தங்கையாக நினைத்திருக்கிறீகள் என்று, வேறு எதுவும் அவனை சொல்லவிடாமல் கூறினாள்.

அச்சோ தங்கையா!! வேண்டாம் அழகுநிலா. நீங்க ஆபீசில் உள்ள முக்கால் வாசி பேரை உங்களின் அண்ணன் ஆக்கிவிட்ட மாதிரி என்னையும் அண்ணன் என்று கூப்பிட்டுவிடாதீர்கள் என் மனசு தாங்காது என்று கூறினான் .

ஆனாலும் சுமதி சொல்வதுபோல் உங்களுக்கு அடிமையாகும் பாக்கியம் எனக்கு கிட்டவேண்டுமென்றால் நான் என்ன செய்யனும் என்பதை நீங்களே கூறுங்களேன் என்று கேளிபோல் கேட்டாலும் அதில் ஓர் தீவிரமும் இருப்பதை பார்த்த அழகி சுமதியின் பக்கம் திரும்பி கோபத்துடன்,

இன்னைக்கு நீ பெர்த்டே பேபி அதனால என்கிட்டே அடிபடாமல் தப்பிசச. நான் வேலை பார்ப்பது உனக்குப் பொறுக்கலையாடீ! இப்படி கோர்த்துவிடப் பார்ப்பது சரியா?, என்னுடைய லெவலே வேற, என்று கணவு மிதக்கும் முகத்தோடு சொன்னாள் .

அவள் கடைசியாக் கூறிய என்னோட லெவலே வேற என்ற வாக்கியத்தை கேட்ட அவர்களுடன் வந்த இளமை பட்டாளம் ஹாய் உன்னோட எதிர்பார்ப்பு என்னனு சொல்லு... சொல்லு.... என்று நச்சரிக்க ஆரம்பித்தனர்.

ஹைட்டா, கலரா என்று அழகி சொல்லும் போது ரமேஸ் என்னைய மாதிரி கலராவா? என்று கேள்விகேட்டான்

ஹலோ ரமேஸ் கொஞ்சம் அடங்குறீங்களா? இல்லாட்டி உங்களிடம் தங்கை கோர் கீதம் நான் என்று பாட்டுப்பாட ஆரம்பிச்சிடுவேன், எப்படி வசதி என்றாள்.

அவள் அவ்வாறு கூறியதும் கைகட்டி ஒரு கையால் வாய்பொத்தி இனி பேசமாட்டேன் என்று ரமேஸ் பாவனை செய்தான்.

அவனின் செயலில் புன்னகையுடன் நிமிர்ந்தவள் அவர்களை நோக்கி வந்த ஆதித்தனை பார்த்து தன்னையறியாமல் இதோ நம் டேபிள் நோக்கி வருகிறாரே அவரைப்போல் இருக்கணும் என்று கூறிவிட்டாள்.

ஆதித் தனது கிளைண்டுடன் அங்கு வந்திருந்தான் .உள் நுழைகையிலேயே அழகுநிலாவின் சிரித்த முகம்தான் அவன் கண்களில் பட்டது. அவளுக்கு பின் உள்ள இருக்கை தான் அவன் புக் செய்திருந்ததான்

அவளின் மேஜையின் பக்கம் வந்தவனுக்கு சிரிப்புடன் நிமிர்ந்தவள், தன்னை பார்த்து ஒருநிமிடம் இமைக்க மறந்து பின் ஏதோ தன் உடன் வந்தவர்களிடம் கூறியதும் அது தன்னைப் பற்றித்தான் என்பது அவனுக்கு சந்தேகம் இல்லாமல் தெரிந்துவிட்டது .

எனவே அவளின் பின் உள்ள மேஜையின் இருக்கையில் அமர்ந்தவன் தன்னை அறியாமல் அவளின் மேல் தன் கவனத்தையும் வைத்துக்கொண்டான்.

ஆனால் அவன் அமர்ந்திருந்த இருக்கையின் அடுத்த மேஜையில் அமர்ந்திருந்த அந்த நால்வரும் அவர்களின் அருகில் இருந்த பேரரிடம் எதோ தாழ்ந்த குரலில் கூறி கண்களால் அழகு நிலாவை ஜாடை காண்பித்து பின் அவன் கையில் ரூபாய் தாளை திணித்தது ஆதித் கண்களில் விழுந்தது .

எப்பொழுதும் பிசினெஸ் பேச்சுவார்த்தையின் போது கவனமாக இருப்பவனின் கவனம் முதன்முதலாக எதோ ஓர் பெண்ணினால் சிதறுவதை உணர்ந்தவனுக்கு தன் மேல் கோபம் வந்தது. பின், அந்த கோபம் யார் என்றே தெரியாத அழ்குநிலாவின் மீது திரும்பியது, வெளியிடங்களில் இப்படித்தான் சிரித்துப்பேசி மற்றவர்களின் கவனத்தை சிதறடிப்பதே இந்த பெண்களின் பழக்கமாகிவிட்டது என்று தனக்குள்ளேயே கூறிவிட்டு தன்னுடன் வந்தவர்களிடம் எக்ஸ்க்யூஸ்மீ நான் கொஞ்சம் ரெஸ்ட்ரூம் வரை போய்விட்டு வருகிறேன் என்று வந்தவன் வாஷ்பேசனில் தன் முகத்தில் நீர் அடித்து தன்னை நிலைப்படுத்தியவன் அதன் பக்கவாட்டில் இருந்த பாத்ரூம் சென்றான் .

பேரரிடம் ரூபாயை திணித்த அவன் எதோ தனது கூட்டாளிகளிடம் வெற்றியுடன் முடித்துவிட்டுவருகிறேன் என்பதற்கு அறிகுறியாக கையை தமஸ்அப் விளம்பரம்போல் அவர்களிடம் காண்பித்தவன் ரெஸ்ட்ரூம் சென்றான்.

அவன் சென்றதும் தட்டில் கூல்டிரிங்ஸ் டிரேயுடன் வந்த அந்த பேரர் கை நழுவி அழ்குநிலாவின் மேல் ஜூஸை ஊற்றிவிட்டான் .

உடன் பதறி சாரி....மேம், சாரி....மேடம் என்று கெஞ்சியவனிடம் இல்ல இருக்கட்டும் என்பவள் தன்னுடன் வந்தவர்களிடம் சொல்லிவிட்டு ரெஸ்ட்ரூம் விரைந்தாள்.

அவளின் மேல் ஜூஸ்சை கொட்டவைத்து அவளை அங்கு இருந்த வாஷ் பேசன் இருந்த ரூமிற்கு வரவைப்பதற்கே அந்த பேரரை அந்த டேபிளில் இருந்த செல்வந்தர் வீட்டின் கழிசடைகள் காசுக்கு வாங்கினார்கள் .அவள் அங்கு போவதற்கு முன்பே அங்கு ரெடியாக் இருந்தவன் செல் போனை அங்கு செட் செய்து வைத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.