(Reading time: 20 - 39 minutes)

பாத்ரூமில் இருந்து வெளிவர கதவை லேசாகத் திறந்த ஆதித்துக்கு வாஷ்பேசனின் முன் நின்று சுற்றும்முற்றும் நோட்டம் விட்ட தனக்கு பக்கத்த்து மேஜையில் இருந்தவனின் செய்கை சந்தேகத்தை கிளப்பியதால் அவன் என்ன செய்கிறான் என்பதனை பார்க்க ஒருநிமிடம் அங்கு அவன் தேங்கி நின்றான்.

அப்பொழுது அவன் மற்றொரு போன் ஒலிக்க எடுத்து காதில் வைத்தவன் போனில் ம் ரெடி என்றவன், அழகுநிலா உள்நுழைந்து பக்கத்தில் வருவதை கவனியாதது போல் வேகமாகத் திரும்பி அவளின் மேல் மோதினான்

எதிர்பாராத அந்த மோதலில் அவள் நிலை தடுமாறி விழுக பார்த்ததும் அவன் வேண்டுமென்றே தானும் நிலை தடுமாறியதுபோல் பாவனை செய்தான்.

பிடிப்புக்காக அழைந்த அவளின் கரமும்.. அவனை பிடிக்க அதில் விஷமத்தோடு இசைந்து விழுந்த அவனின் உதடுகள் அவள் முகத்தில் படிந்து அழுத்தி முத்தமிடுவது போல் பதிந்தது.

கீழே விழுந்ததின் அதிர்ச்சி மறைவதற்குள் எவனோ ஒருவனின் உதடு பதிந்த அதிர்ச்சியும் சேர ஒரு நிமிடம் ஸ்தம்பித்துபோனாள். அப்பொழுது அதை பார்த்துக்கொண்டு இருந்த ஆதித் விட்டில் பூச்சி என்று அழகுநிலாவை நினைத்துக்கொண்டு அங்கு விரைவதற்குமுன், நிலா புயலென அவனை தள்ளி ஓங்கி கன்னத்தில் அரைவதற்கும் சரியாக இருந்தது.

அவள் அரைந்ததும், அவன் உடனே அவளிடம் சிஸ்டர் நீங்கள் விழும் போது என்னையும் பிடித்து விழுந்ததால் இப்படி நடந்துருச்சு சாரி.. என்றான்.

இதை எதிர்பார்க்காத ஆதித் வேகமாக் ரெஸ்ட் ரூமினுள் இருந்து கோபத்துடன் வெளியே வந்து அவனை வேகமாக ஒரு உதை விட்டான்.

ஒரு நிமிடம் என்ன நடக்குது என்பதனை அவள் உணர்வதுக்குள் அங்கு நடந்த அந்த நிகழ்ச்சியில் ஒருநிமிடம் ஸ்தம்பித்து போன அழகுநிலா, ஆதித்தை ஸார் நீங்கவேறு பிரச்சனை பண்ணி கூட்டத்தை கூட்டி விடாதீர்கள் என்று கூறியவள்

அந்த விசமியின் புறம் பார்த்து கவனம் வேண்டாமா..? இப்படித்தான் பொது இடத்தில் கவனமில்லாமல் இருந்து ஒரு பெண்ணின் மேல் இடித்து விழுந்து என்றவள், மேலே சொல்ல சங்கடப்பட்டு சொல்லாமல் அவனை எரிப்பதுபோல் பார்த்து, தெரியாமல் நடந்ததால இத்துடன் விடுறேன் என்று ஆங்காரத்துடன் பல்லை கடித்தபடி முறைத்துக்கொண்டு கர்ஜித்தாள்

அவளின் பாவனை ஆதித்தனுக்கு சுவாரஸ்யமாக இருந்தது. எப்பா.... அனல் பறக்குது என்று மனதினுள் நினைத்தவன், அதை வெளிகாண்பிக்காமல் அவளிடம் அப்போ இந்த ரோக் உங்களை தெரியாமல் இடிச்சு உங்களோடு விழுந்து கட்டிபுடிச்சு முத்தம் கொடுத்ததெல்லாம் தற்செயலாக தெரியாமல் நடந்துருச்சுனு நீ நினைகிறாயா...?. என்று அவனை போக விடாதவாறு சட்டை காலரின் பின்னால் பிடித்தபடி அழ்குநிலாவிடம் கேட்டான்.

அழ்குநிலாவிற்கு ஆதித்தின் செயல் எரிச்சலையே கொடுத்தது. ஏனெனில் அவளுக்கு தன் மேல் இருந்த ஜூஸ் கரையுடன் எதிரில் நின்றவன் விழும் போது பிடிக்கிறேன் என்று தன் இடுப்பில் கைபோட்டு தன்னை உடன் சேர்த்து இருக்க அனைத்து தன் முகத்தோடு முகம் இளைத்து கீழே விழுந்த செயல் பெறும் அதிர்வையும் அருவருப்பையும் கொடுத்திருந்தது. அவளுக்கு எப்போதடா அந்த இடத்தை விட்டு அகன்று தன் ரூமிற்கு செல்வோம் என்றும், தன் மேல் சாக்கடை தெரித்தது போல் ஓர் அருவெறுப்பில் குளித்து அதை கழுவிவிட்டு தன்னை கொஞ்சம் இலகுவாக்கிக்கொள்ள தனிமையை நாடுவோம் என்று நினைத்திருந்தாள் பஞ்சாயத்து பன்னுகிறேன் என்ற பெயரில் இந்த அசிங்கத்தை இந்த டிப் டாப் ஆசாமி கூட்டத்தை கூட்டி அரங்கேற்றம் பண்ணிவிடுவான் போலிருக்க்கே! என்ற கோபம் ஆதித்தின் மேல் ஏற்பட்டது .

எனவே ஆதித்தை பார்த்து, “மிஸ்டர்! அதுதான் நானே அவனை வார்ன் செய்து போகச் சொல்லிவிட்டேனே, பிறகு என்ன நீங்க வெட்டியா சீன கிரியேட் பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க” என்று எரிச்சலுடன் கேட்டுவிட்டு, என்ன அழகான பொண்ணை பார்த்து இப்படி செய்தால் இம்ரஸ் ஆகிவிடுவாள் என்று பார்கிறீங்களா? அதற்கு வேறு ஆளை பாருங்கள் போவீங்கலா?.... வேலையை பார்த்துக்கிட்டு என்று அவன் மேல் காய்ந்தாள்.

ஆதித்தை அவள் அலட்ச்சியப் படுத்தியதும் ரோஷத்துடன் என்னது நீ அப்படி அழகா ஒன்றும் எனக்குத் தெரியலையே.... என்று இகழ்ச்சியாக அவளை பார்த்து கூறியவன், என் ஸ்வீட் வர்சுக்கு முன்னால் நீயெல்லாம்.... என்றவன் வேண்டுமென்றே அவளை பார்த்து கன்றி புரூட் என்றவன் உன்னை இம்ரஸ் செய்து எனக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை என்றான்.

அவனை விடாமல் பிடித்தபடி இழுத்து வாஸ் பேசனுக்கு சைடில் இருந்த ஹேன்டு டிரையரின் மேல் நின்ற வாக்கில் இருந்த போனை எடுத்து அது கேமரா மோடில் இன்னும் ஓடிக்கொண்டு இருந்ததை அவளிடம் காண்பித்து இவன் ஒன்றும் தெரியாமல் உன் மீது மோதவில்லை. பிளான் பண்ணி மோதியிருக்கான் என்றவன் அதில் ரெகார்டு ஆகியிருந்த அவன் அவளை கட்டிப்பிடித்து கீழே விழுவது போல இருந்த அந்த பதிவை இயக்கி ஓடவிட்டான்.

ஆதித்தன் ஓர் கையால் தான் அந்த ரோக்கை பிடித்திருந்தான். ஆனால் என்ன முயன்றும் ஆதித்தனின் பிடியில் இருந்து திமிரமுடியாமல் ஈனச்செயலைப் பகிரங்கப்படுத்திய ஆதித்தனை அந்தநிலையிலும் மிரட்ட முயன்றான் அவன் .

டேய்... நான் யாருன்னு நெனச்ச மினிஸ்டர் காந்தனுடைய பையன் நான். என்ன விட்டுட்டு என் மொபைலை என் கிட்ட கொடுத்துவிடு, இல்லையின்னா என்று அவன் மேற்கொண்டு சொல்லிமுடிப்பதற்குள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.