“அப்படி கூப்பிடாதீங்க….”
அவள் முகம் கோபத்தில் சிவக்க, அவனோ, “ஏன் இப்படி புரிஞ்சிக்க மாட்டேன்னு அடம்பிடிக்குற?...”
“நீங்க யாரு?... உங்களை நான் ஏன் புரிஞ்சிக்கணும்?...”
அவள் பதில் அவனை சீண்ட, தன் கோபம், துக்கம், வருத்தம், அனைத்தையும் தனக்குள் அடக்கியவன்,
“நான் யாரா?... ஹ்ம்ம்… நல்ல கேள்வி… நான் யாருன்னு தான கேட்குற?... அதுக்கான பதிலையும் உனக்குள்ள கேளு… அது பதில் சொல்லும்…”
“எனக்கு சம்பந்தமே இல்லாதவங்களை பத்தி எனக்குள்ள கேள்வி கேட்க நான் தயாரா இல்லை…”
அவள் சொன்ன பதிலில் அவன் தன் ஒட்டுமொத்த கோபத்தையும் அடக்கிக்கொண்டு கற்சிலையாக நிற்க,
“யாரும்மா சம்பந்தமே இல்லாதவங்க?....” என்ற குரலில் அவனுக்கு பின்புறம் பார்த்தவள் திகைத்து போனாள்…
அவள் பார்வை செல்லும் திசை உணர்ந்து, அவனும் பார்த்திட, அவன் இதழ்கள் சட்டென மலர்ந்தது…
ஓர் நொடியில் உயிரில் பூப்பூத்திட, கண்களில் அதுவரை இருந்த சோகமும், ஆங்காரமும், விரக்தியும் , பிடிவாதமும் மாயமாய் மறைந்திட, அவள் கண்களில் நீர் கோர்த்து கன்னம் எட்டியது விரைவாய்…
“நைனி….” என அவள் இதழ்கள் உச்சரித்திட,
அவள் கரங்களோ அவள் வயிற்றினை தொட்டுப்பார்த்தது விரைந்து….
“அம்மா……” என ஓடிவந்து நைனிகா அவளை இடையோடு சேர்த்துக்கட்டிக்கொள்ள, உடலெல்லாம் சிலிர்த்து போனது சந்தாவிற்கு….
எழில் பூக்கும்...!
{kunena_discuss:1122}