(Reading time: 12 - 24 minutes)

"நல்லா இருக்கேன்கா!"

"அர்ஜூன் கூட சரியா பேச மாட்டேன்னு சொல்றீயாம்!ரொம்ப ஃபீல் பண்றான்!என்னாச்சு?"

"பெரிய பிரச்சனை எல்லாம் எதுவும் இல்லைக்கா!கோவிலுக்கு கூப்பிட்ட போது வரமாட்டேன்னு சொல்லிட்டார்.அதான் கொஞ்சம் விளையாடினேன்!"

"நல்லா விளையாடுறீங்க...சரி,பாட்டி இல்லையா?"

"கோவில் வரைக்கும் போயிருக்காங்கக்கா!இதோ வந்துடுவாங்க!நான் உங்களுக்கு குடிக்க எதாவது கொண்டு வரேன்!"-பதில் வருவதற்கு முன் பறந்தாள் மித்ரா.அவள் சென்றப்பின் உடன் வந்திருந்தவனை காணாமல் தேடியவளை அசைத்தது...

"மாயா!"என்ற குரல்!!

"ஏ...!மேலே வா!"-குரல் கொடுத்தான் ருத்ரா.குழம்பியப்படியே அவனது அறை நோக்கி சென்றாள் அவள்.அறை கதவை மெல்லத் திறந்து எட்டிப் பார்த்தவளை சட்டென தன் பிடியுள் ஈர்த்தான் ருத்ரா.

"என்ன இது விடுங்க!"

"வந்ததும் மித்ராக்கூட மொக்கைப் போடுற!என்னை மறந்துடுற!"

"கடவுளே...!விடுங்க!குழந்தையா நீங்க?"

"ஆமா..குழந்தை தான் போ!ஏ...உன்கிட்ட ஒரு விஷயம் காட்டணும்!"

"என்ன?"

"கண்ணை மூடு!"-தன் கருவிழிகளை மூடினாள் அவள்.சில நொடிகளில்,

"கண்ணைத் திற!"என்றான்.திறந்தவளின் முன் அழகிய வேலைப்பாடுகள் அமைந்த பட்டுப்புடவை ஒன்று இருந்தது.

"ரொம்ப அழகா இருக்கு!"

"உனக்கு பிடித்திருக்கா?"

"ம்...ரொம்ப!"

"ஹப்பா!மித்ரா...உனக்குப் பிடிக்காதுன்னு சொன்னா!பரவாயில்லை...நான் தேறிட்டேன்!"-பெருமை தட்டிக்கொண்டான் அவன்.

"கட்டிக்கோ!"

"ம்??"

"புடவையை சொன்னேன்!"

"இப்போ வேணாம்!அப்பறமா...!அதுவரை இங்கேயே இருக்கட்டும்!"

"அப்படியா மேடம்!அப்போ இதை நீங்களே உள்ளே வைத்துவிடுங்க!நான் இதோ வந்துடுறேன்!"-அவள் கன்னத்தைக் கிள்ளிவிட்டு,வெளியேறினான் ருத்ரா.புன்னகையுடன் அலமாரியை திறந்து புடவையை வைத்தவள் மௌனமாய் சிலையாகினாள்.

"மாயா!"

"ஆ...???"எட்டிப் பார்த்தாள்.

"பாட்டி வந்துட்டாங்க வாம்மா!"

"ஆ...வரேங்க!"என்றவள் குழம்பியப்படி அதை தன் கைகளில் எடுத்தாள்.அது...அன்று மகேந்திரனால் பதிவாக்கப்பட்ட நினைவுகள் அடங்கிய அதே பென்டிரவ்!!

"இதுவும் நரகமே!!ஆம்..!இக்கதை நிச்சயம் நரகமே!!நரகத்தினை வென்ற ஒரு பிடிவாதத்தின் கதை!சக்ரவியூகம்!!"(உண்மையின் தடயங்கள் முற்றிலும் அழியாதவை!)

முற்றும்!

Episode # 21

{kunena_discuss:1104}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.