"ப்ச்....ஒண்ணுமில்லைப்பா!அம்மா ஏன் காதலை இப்படி வெறுக்கிறாங்க?"
"ம்...என்னடா?புதுசா இருக்கு?எதாவது அப்பாக்கிட்ட சொல்ல நினைக்கிறீயா?"
"ச்சீ...ச்சீ...அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா!எனக்கு லவ் மேரேஜ்ல இன்ட்ரஸ்ட் இருக்கு!ஆனா,அம்மா...லவ்வைப் பற்றி பேசக்கூட கூடாதுன்னு சொல்றாங்க!"-சலிப்புடன் கூறினாள்.
"மீனா எப்போதும் அப்படிதான் கண்ணா!எதற்கெடுத்தாலும் பயம்!அதிலும்,இப்போ நடக்கிறதெல்லாம் பார்....இந்தப் பத்திரிக்கைக்காரங்களும் தேவையான விஷயங்களை விட்டு தேவையில்லாத விஷயங்களை தானே அதிகம் சொல்றாங்க!அதனால,இன்னும் பயம் வேற அவளுக்கு!"
"..............."
"எந்த மாதிரி பையனை கல்யாணம் பண்ணிக்க விரும்புற சிவா?"-புன்முறுவலுடன் வினவினார் அவர்.
சில நொடிகள் ஆழ்ந்த மௌனத்தை உண்டாக்கினாள் சிவன்யா.அம்மௌத்தின் போது,உண்டான முகசிவப்பை தந்தையானவர் கவனிக்க தவறவில்லை.
"சொல்ல தெரியலைப்பா!ஆனா,கண் பார்த்த உடனே அந்த முகம் மனசுல ஆழமாக பதியணும்!அந்த ஒருத்தனை நினைத்து நான் ஆச்சரியப்படணும்!அவன் பெண்களை மதிக்க தெரிந்தவனாக இருக்கணும்.எதுக்குமே பயப்படாதவனாக இருக்கணும்.அன்புக்கு கட்டுப்படணும்!தாய் பாசத்தை உணர்ந்தவனாக இருக்கணும்.ஏன்னா,அப்படிப்பட்டவன் தான் மனைவிக்கு தன்னுடைய தாய்க்கு கொடுக்கிற மரியாதையை கொடுப்பான்.பொறுமையானவனாக இருக்கணும்.அதுக்காக,தப்பு நடக்கும் போது வேடிக்கை பார்க்கக் கூடாது!அன்புக்காக கொஞ்சமாவது ஏங்கி இருக்கணும்!"-அவ்வளவு நேரமும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவர் இறுதி வாக்கியத்தில் திகைத்துவிட்டார்.
"என்ன?"
"ம்...ஆமாப்பா!அவன் அன்புக்காக ஏங்குறவனாக இருக்கணும்.அப்படி ஒருத்தன் கூட வாழ்ந்தா,காலம் முழுக்க,அந்த ஒரே ஒரு எண்ணம்...அத்தனை நாள் வேதனையில் இருந்தவனுடைய வாழ்க்கையில் வசந்தமாக வந்து அவன் வேதனையை அழித்துட்டோங்கிற எண்ணமே காலம் முழுக்க எனக்கு நிம்மதியை கொடுக்கும்பா!"-அவள் கொடுத்த விளக்கத்தில் ஏனோ உதயக்குமாரின் மனம் ஒரு நொடி பெருமிதமடைந்தது.
"கொடுத்து வைத்தவன்!"
"யாரு?"
"என் மருமகன்!"-அவர் கூற்றில் நிச்சயம் ஒரு உண்மை ஔிந்திருந்தது.ஔி நிறைந்த உண்மை அது!!!
தொடரும்!
{kunena_discuss:1149}