“ஓய்.. என்னடீ ஃபீலிங்க்ஸ் ஓவரா இருக்கு?”
“ச்சீ பே.. உனக்கு என்னடா தெரியும்? உன் ஆளுகூட ஊரை சுத்தி பாத்துட்டு வந்துட்ட.. என் நிலைமை புரிஞ்சிருக்குமா உனக்கு?”
“உனக்குத்தான் என் நிலைமை புரியல.. ரொம்ப பசிக்கிது..சாப்பிட என்ன கொண்டு வந்த? அதைக் கொடு!”என்று அவன் வயிற்றை தடவிக் கொள்ள சலித்துக் கொண்டாள் யாழினி.
“எப்படித்தான் நீ இப்படி இருக்கியோ”என்றவள் அவனுக்கு ஊட்டிவிடத் தொடங்கினாள். அவனும் தாயைக் கண்ட சேயைப் போல அன்பு மழையில் நனைந்து கொண்டே நடந்த அனைத்தையும் ஒப்பித்தான்.
இறுதியாக, “ஆயிஷாவோட நம்பிக்கையை நான் கெடுக்க விரும்பல யாழீ.. அவளுடைய அப்பா அம்மா உயிரோட இருந்தா அது நல்ல விஷயம்தானே? சோ அவங்க வந்தால் கண்டிப்பா, அவர்களோடு இவளை சேர்த்து வைப்பேன்னு சொல்லிட்டேன்.. அவளுமே அதுவரைக்கும் இனி தான் ஆயிஷாதான்னு சொல்லிட்டா”
“ஹ்ம்ம்ம்ம்ம்..என்ன சொல்லுறதுன்னே தெரியலடா”
“எதுவும் சொல்ல வேணாம்..உன் தமிழ் என்ன சொல்லுறார் அதை சொல்லு?”
“யார் தமிழ்?”
“விளையாடாதே யாழீ..”
“நான் விளையாடல.. எனக்கு சம்பந்தம் இல்லதவங்களைப் பத்தி நினைக்கிறது கூட தப்புன்னு நினைக்கிறேன்..அவ்வளோதான்..”
“மறுபடியும் சண்டையா?”
“பேசினாத்தானே சண்டைய போட?”என்று முணுமுணுத்தவள்,
“க்ளாசுக்கு டைம் ஆச்சு.. வா போகலாம்” என்றாள். இனி தன் வாழ்க்கை விதிவழியே போகட்டும் என உள்மனதிடம் ஒப்பித்தாள். நினைப்பதெல்லாம் நடக்கிறதா என்ன?
தொடரும்
{kunena_discuss:994}