என்னையே நான் கிள்ளி கொண்டேன் எனக்கு நேற்று உண்மையில் திருமணம் நடந்தது தானே? காந்திமதி அத்தை இருந்தாள் தானே? அந்த மரமண்டை கூட பாட்டு கேட்டானே? இப்போது இங்கே யாரும் இல்லையே ..? என்று நான் பயந்த வேளையில் வாயிற் கதவை யாரோ வெளியே இருந்து திறப்பதை போல் இருந்தது.
ஐயோ அப்படி என்றால் நான் உள்ளே வைத்து பூட்ட பட்டுள்ளேன் அவசரமாய் சென்று ஒளிந்து கொள்ள மூளை சொன்னாலும் அசட்டு தைரியத்தில் அங்கேயே நிற்க திறந்து வந்தான் அந்த மரமண்டை மாப்பிள்ளை ..ஒரு நிமிடம் என் சுவாசத்தை சீராக்கி விட
அம்மா அப்பா ஊருக்கு கிளம்பிட்டாங்க அதான் பஸ் ஏத்தி விட்டு அவன் மேற்கொண்டு பேசிய எதையும் நான் கேட்காமல் குளியலறை நோக்கி சென்றுவிட்டேன் ...
மூன்று பெட் ரூம் இருந்தது அந்த அப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
சாத்தி ம் உருளு என்றாள்..
என்னது உருளனுமா..? என்ற என் கேள்விக்கு என் காந்திமதி அத்தை ஆமா தாயி மூணு மாசம் ஆகியும் இன்னும் உனக்கு நிக்கல நீ இந்த மகா மாரிய மனசார நினைச்சிகிட்டு உருளு எல்லாம் நல்ல படியா நடக்கும் என்று அவள் சொன்ன போது என் உடல் எல்லாம் பத்தி கொண்டு எரிவது போல் இருந்தது ...