அழுகை, கோவம், அவமானம், அசிங்கம் அனைத்தும் கலந்த கலவையில் நான் இருக்க அவன் என்னிடம் வந்து சேர்ந்தான்..
அம்மா என்னமா நீ என்றான் ..? டேய் நான் தான் அன்னிக்கே போன்ல சொன்னேன் இல்லை இவளுக்கு சொல்லலையா என்றாள் ...?
நான் அவனை முறைக்க அவன் விழிக்க வேப்பிலை கொண்டு என்னை ஓட்டிய பாட்டி ம் உருளு என்று சொல்ல உருளு உருளு என அங்க பிரதட்சணை ஒன்றல்ல இரண்டல்ல மூன்று முறை ...
ஈர புடவை மொத்தமாய் நனைந்திருந்தேன் ...தலையில் சொட்டிய தண்ணீர் ...என் புடவை என் உடல் முழுவதும் மண் ...அங்கங்கே என என் உடல் முழுவதும் சிராய்ப்பு வேறு அதில் நீர் பட்ட எரிச்சல் ...அனைத்தையும் விட என்னை வேதனை பட வைத்த ஒரு விஷயம் கோயிலை சுற்றி இருந்த ஆண், பெண், நண்டு, சிண்டு என வயது வரம்பின்
...
This story is now available on Chillzee KiMo.
...
விரும்பாமல் அவன் செய்வதாய் எனக்குள் ஒரு எண்ணம் ...
இப்போதெல்லாம் அடிக்கடி என் பெற்றோர் இல்லத்திற்கு அழைத்து சென்றுவிடுகிறான்...என் அண்ணன் துரோகிக்கு கல்யாணம் வேறு முடிவாகி உள்ள நிலையில் அவ்வீட்டு மாபிள்ளையாய் இவனுக்கு ஏகப்பட்ட வரவேற்பு மரியாதை…. என்னால் பொறுத்து கொள்ள முடியவில்லை...