(Reading time: 25 - 49 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

”அவளுக்கென்ன தலையெழுத்து அவள் பேரை சொல்லியே கூப்பிடுவா”

   

“ஏன் பாட்டி அப்படி எனக்கு ஒரு சட்டம் மத்தவங்களுக்கு ஒரு சட்டமா அப்ப இந்த வீட்ல நீதி நியாயம் எல்லாமே ஒருதலைபட்சமாதான் நடக்குமா” என கேட்க பாட்டியால் அதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறவும் தாத்தாவிற்கு உள்ளுர சிரிப்பு வந்து அவர் 

   

”அப்படியில்லைம்மா இங்க நீதி நியாயம் எல்லாமே இருக்கு உன் விருப்பம்தான் நீ எப்படி வேணும்னாலும் கூப்பிடலாம் ஆனா இந்த 1 மாசம் வரைக்கும்தான் நான் சொல்றது உனக்கு புரியுதுல்ல” என அவர் மர்மமாக பேச அவள் புரிந்துக்கொண்டு சிரித்தாள்.

   

”நல்லாவே புரியுது தாத்தா” என்றாள்.

   

”சரிம்மா நீயும் வந்துட்ட அதனால நான் சொல்ல வேண்டியதை சொல்லிடறேன் கவனமா எல்லாரும் கேளுங்க” என சொல்லவும் அர்ஜூன் எழுந்துக்கொள்ள மீதி 3 பெண்களும் நந்தினியின் பக்கத்தில் அமர்ந்துக்கொண்டு எதிரே இருந்த தாத்தாவையே கவனமாக பார்த்தனர்

   

”முதல் விதி இந்த போட்டி எதுக்குன்னு நான் சொல்ல வேண்டியது இல்லை எல்லாம் தெரிஞ்சிக்கிட்டுதான் இதுக்கு சம்மதிச்சி வந்திருக்கீங்க. ஒருவேளை இந்த 1 மாசத்துக்குள்ள உங்களால எத்தனை நாள் இருக்கமுடியுமோ தாராளமா இருக்கலாம் முடியாத பட்சத்தில கிளம்பிடலாம் நான் யாரையும் தடுக்க மாட்டேன்” என சொல்ல அந்த 4 பெண்களும் சரியென தலையை ஆட்டினார்கள்.

   

“2வது விதி இந்த வீட்ல நீங்க 1 மாசம் தங்கலாம் ஆனா இந்த ஒரு மாசம் வரைக்கும் நீங்க யாரும் என் அனுமதியில்லாம வெளியே எங்கயும் போக கூடாது. அதோடு உங்களை தேடி வெளியாளுங்க வீட்டாளுங்க சொந்தக்காரங்க பிரெண்ட்ஸ்கள் அறிஞ்சவங்க தெரிஞ்சவங்கன்னு கூட யாரும் வரக்கூடாது. அதுக்காக போன்ல பேசிக்கலாம் நேர்ல பேச வேணாம்” என சொல்ல அந்த 4 பெண்களும் சரியென தலையை ஆட்டினார்கள்.

   

”3வது விதி  இந்த வீட்ல இருக்கறவரைக்கும் உங்களுக்கு யாரும் உதவ மாட்டாங்க நான் சொல்றதை கேட்டு நீங்களேதான் நடந்துக்கனும் போட்டியில ஜெயிக்கனும் உங்களை 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.