”ஏன் அத்தான் நான் வேலைக்கு போக கூடாதா அத்தான்” என அவள் பாசமாக கேட்கவும் அதற்கு ரிஷி
”அப்படியில்லைம்மா தாராளமா போகலாம் ஆனா வேலைன்னா நிறைய பிரச்சனை வரும் சிக்கல் வரும் அதையெல்லாம் சமாளிக்கனும்ல”
“என்னால முடியாதா அத்தான்”
“ஆ உன்னால கண்டிப்பா முடியும் ஆனா எதுக்கு அதான் உன்னைப்பார்த்துக்க ஆளுங்க இருக்காங்களே நீ ஜாலியா மகாராணி போல இரு போதும்”
“இல்லை அத்தான் நான் வேலைக்கு போவேன்” என அவள் செல்லமாக பிடிவாதம் பிடிக்க
”அவ்ளோதானே நானே ஏற்பாடு பண்றேன்”
என அவன் வழிந்துக்கொண்டே பேசவும் தாத்தா அவனை அதட்டி அமைதியாக்கினார். நந்தினியின் பேச்சைக் கவனித்த பாட்டி அவளைப்பார்த்து
”என்னம்மா நீ என் பேரனை அத்தான்னு சொல்லிக் கூப்பிடற இன்னும் 1 மாசம் ஆகலை உன்னையும் இங்க மருமகளா தேர்ந்தெடுக்கலை”
“அதுக்காக அவரை எப்படி பேர் வைச்சிப்பேசறது பாட்டி அது தப்பாச்சே”
“ஏன் சார்ன்னு கூப்பிடு முதலாளின்னு கூப்பிடு” என பாட்டி சொல்லவும் ரிஷி பாட்டியை எரிப்பதைப் போல பார்த்துவைத்தான்.
”ஓ அப்படியா சரி பாட்டி அப்ப நீங்க கூட்டிட்டு வந்த பொண்ணுகூட சார்ன்னும் முதலாளின்னுதான் கூப்பிடுவாங்களா பாட்டி” என ஏத்தி இறக்கி சொல்லவும்