கூட்டிட்டு வரனுமா என்ன”
“அப்படியில்லை தாத்தா நான் இங்க தனியாக 1 மாசம் இருக்கனும் அண்ணா துணைக்கு வந்தா ஒரு சப்போர்ட்டா இருக்கும் அதோட என் வாழ்க்கையில நான் எடுக்கற முக்கியமான முடிவு இது தான். இந்த நேரத்தில என் சொந்தம் என் கூட இருக்கனும்னு நான் ஆசைப்பட்டேன் அதான் அண்ணாவை கூட்டிட்டு வந்துட்டேன்”
“ஓ சரி சரி படிச்சிருக்கியா”
“ஆமாம் தாத்தா”
படிச்சிருக்க அடுத்து என்ன பண்றதா உத்தேசம்”
“எனக்கு அதுக்குள்ள கல்யாணம் ஆகாம இருந்தா வேலைக்கு போவேன். சில பேருக்கு நான் கடன் பட்டிருக்கேன் அதை தீர்க்கனும் அதான்” என தன் அண்ணனை பார்த்து சொல்ல அவன் வேண்டாம் என தலையாட்டினான்
”நீ ஒண்ணும் எனக்கு எதுவும் செய்ய வேணாம் நீ பத்திரமா இரு போதும் வேலைக்கு போய் கஷ்டப்பட வேணாம் நான் சம்பாதிக்கறது யாருக்கு உனக்குத்தானே அப்புறம் என்ன”
“என்ன இருந்தாலும் அண்ணா என்னோட திறமையை வெளிகாட்ட ஒரு முறை வேலைக்கு போனாதானே படிச்ச படிப்புக்கு நன்றி சொன்ன மாதிரியிருக்கும்” என அவள் சொல்ல ரிஷி கத்தினான்
”என் வீட்டு பெண்கள் வேலைக்கு போறது கஷ்டப்படறது எனக்கு பிடிக்காது” என்றான்.
முதல் முறையாக நந்தினியிடம் மட்டும் பேசிய ரிஷியை பார்த்த மற்ற பெண்கள் சந்தேகப்பட்டனர். இருந்தாலும் அவன் முகத்தில் இருந்த கடுமையை பார்த்து தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டார்கள்.
அவனின் பதிலைக்கேட்ட நந்தினிக்கு சிரிப்பு வந்து